”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
"திருமாவளவன் முதல்வர் ஆவதை எல்லோரும் ஒப்புக் கொள்ள எடப்பாடி பழனிசாமி மட்டும் கடுமையாக எதிர்த்தார்.. மே 4 ஆம் தேதி நடந்தது இதுதான்” - சவுக்கு சங்கர் பேட்டி
#SavukkuSankar | #Thirumavalavan | #VCK | #Puthiyathalaimuraitv
மரகதம் குமரவேல் மதுராந்தகத்தில் நுழைய முடியாது... அதேபோல் தான் தாராபுரம், பெருந்துறை தொகுதிகளுக்கும்… மக்கள் அவ்வளவு கோபமாக உள்ளனர்.
எவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் இவர்களை எம்.எல்.ஏ ஆக்க உழைத்தோம்?!
உங்களை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களும், தமிழக மக்களும் முட்டாள்களா?
-பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
@draramadoss
#பொய்க்கால்_குதிரை_அரசு
MGR, புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் மாதிரி நல்லாட்சி குடுப்பான்னு பார்த்தால்,
இவன் கருணாநிதி, ஸ்டாலின் மாதிரி இருண்ட ஆட்சி கொடுத்துட்டு இருக்கான்😂🔥
This is not political change - it's a scam. 100பேர் கொடுங்க நானே இவனுகள முடிச்சு காட்டுகிறேன்.
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இந்த கும்பலை நான் செதில் செதிலாக உடைக்க தயார்...
இரண்டு நாட்கள் முன்பு "தனது தொகுதியின் 30 ஆண்டு கால கோரிக்கை முதல்வர் விஜய் இறங்கி செய்த நடவடிக்கை" அப்படினு ஒரு செய்தியை தந்தி டீவி வெளியிட்டது. அதை News 24*7 அதுவும் போட்டு - வலைத்தளத்தில் விஜய் அண்ணன் பாருங்க பிரண்ஸ் குழந்தைகளுக்காக 3 கிமி சுற்றி பள்ளி கூடம் சென்ற நிலையில் ஆக்கரமிப்பை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கார் என செய்தியை பரப்பினர்.
ஆனால் உண்மை இங்கே அந்த இடத்திற்கான மேப் மற்று அது பற்றிய நீதிமன்ற உத்தரவு விவரங்களை இணைத்துள்ளேன்.
அது என்னவென்றால் அது ஆக்கரமிப்பாக இருந்தது - அதன் பொதுபாதையை ஏற்படுத்த நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர் போன ஏப்ரம் மாதம்.. தேர்தல் என்பதால் உத்தரவு நடைமுறைப்படத்தாத நிலையில் தேர்தல் முடிந்து வேலையை முடித்துள்ளனர்.
அது குழந்தைகள் 3கிமி , 2 கிமி சுற்று பள்ளி சென்றால்கள் என்பது வடிகட்டிய பொய். மேப் பாருங்க புரியும். 100மீட்டர் கூட இல்லை. அந்த பள்ளி கூடத்தின் பெயர் Wisdom matriculation.
ஆக ஒரு நீதிமன்ற உத்தரவை - பொது பாதை சம்மந்தப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையை அதை தனக்கு எப்படி விளம்பரமாக்களாம் என ரூட் மாபியா திட்டமிட்டு பரப்ப- அதை செய்தி நிறுவங்களும் கண்ணை மூடி கொண்டு ஜல்ரா அடிப்பது வெக்ககேடானது...
ஆனா ஒன்னு அடுத்த 5 வருடமும் இனி அனைத்தும் விஜய் தான் செய்தார் என்று இவனுக பரப்ப அதற்கு உண்மையை கண்டறிவதற்குள் அடுத்த செய்தியை பரப்பிடுவானுக..
செய்தி நிறுவனமாடா நடத்துறேங்க...
அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் - மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.
தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.
ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.
எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் . @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
இல்லாத ஏழை நெசவாளர் அவரிடம் உன் அதிகார திமிரை காட்ட வெக்கமா இல்லை? இதுவாடா மாற்றம்?
நெசவாளர் நெய்யும் கலவை நூல், அதை அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கி இருப்பான் என்று - அதனால் கிடைக்கும் 100 ரூபாய் வருமானத்திற்கு அந்த முதியவர் இந்த வயதில் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டும் என்பதை தெரிந்தால் உணர்ந்தால் - இப்படி காரை அதன் மீது மோதி இழுத்து நிற்பானா இந்த விஜய் கட்சி MLA..? இவனை என்ன செய்யலாம்?
இவனை போன்ற விஜய் கட்சி MLA ஆட்களை அங்கேயே நிறுத்தி மக்கள் கூடி நாளு அப்பு அப்பவும்.. இவனுக எல்லாம் சினிமா பைத்தியம்..
இவன் மீது விஜய் என்ன நடவடிக்கை எடுப்பார் என பாருங்க.. நான் சொல்றேன் எருமை மாதிரி இருப்பான் பாருங்க. எந்த நடவடிக்கையும் இருக்காது.
#stalin அவர்கள் சொல்வது போல்... ஒரே வேளை மீண்டும் தேர்தல் வந்தால்...யாரை தேர்வு செய்வீர்கள்? உங்கள் ஓட்டு யாருக்கு? 🤔🗳️
நான் எப்பொழுதும் tvk தான் 😍😍
#tvk#dmk#admk#ntk
தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.
பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு #பொய்க்கால்_குதிரை_அரசு அமைத்துவிட்டது.
நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான்.
கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும்.
அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்.
@AIADMKOfficial