Flute + Violin + Tabla... ❤️🎶
இளையராஜாவின் ஆகச்சிறந்த interlude-களில் ஒன்று. கேட்கும் ஒவ்வொரு முறையும் பூமியில்தான் இருக்கோமா, இல்லை சொர்க்கத்துக்கே வந்துவிட்டோமா என்று உணர வைக்கும் இசை. ✨
#இளையராஜா#NothingButRaaja
எவ்வளவு கீழ்த்தரமான
வன்மம் நிறைந்த பதிவு
ரஜினி.. உலகில் யாரும் தொட முடியாத உச்சியில்
இத்தனை ஆண்டுகள்
இனியும்..
சூப்பர் ஸ்டாராகவே ஜொலிப்பவர்..
அது மட்டுமல்ல..
பண்பாளர் மிக எளிமையானவர்..
தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர்
மிகக் கடுமையான கண்டனங்கள்..
@cheframu அவரை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் மற்றவர்கள் வைத்தாலும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்ல ஒரு தைரியம், தன்னம்பிக்கை உம் வேண்டும். நிறம் தான் அழகு என்பதை உடைத்தவர்க்கு தன்னம்பிக்கை இல்லாமலா இருக்கும் .
தன்னைப் பற்றி தானே நகைச்சுவையாகப் பேசுவது, சுயபகடி செய்து கொள்வது தலைவருக்கு புதிதல்ல.... அதுதான் ரஜினி!
80களின் இறுதியிலேயே,
"ஏத்திய பேனரெல்லாம் ஒருநாள் இறக்கியே ஆகணும்..." என்றார்...
2009-ல்,
"தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்திப் பேசணும்னு என்ன அவசியம்? எவன் பேசுவான் இந்த மாதிரி? என கமல் நெகிழ்ந்து பேசியது சிலருக்கு நினைவில் இருக்கலாம்...
2010 கால கட்டத்தில்...
பெங்களூரில் வசித்த ராஜஸ்தானி நண்பர் நந்துலால்,
"என்ன ரஜினி... முடி எல்லாம் கொட்டிருச்சு! ரிட்டயர் ஆயாச்சா? இன்னும் படம் நடிக்கிறியா? ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா? என அதிர்ச்சியாக கேட்டதை, எந்தத் தயக்கமும் இல்லாமல் மேடையில் பகிர்ந்தவர்...அந்த மேடை அமித்ஜி, ஐஸ்வர்யாராய் என இந்தி திரைப்பட உலகத்தினரால் நிரம்பியிருந்தது.
அதே காலகட்டத்தில்...
"ஒரு குழந்தைக்கு ஆட, பாட கற்றுக்கொடுத்து, மேக்கப் போட்டு அழகுபடுத்தி, பிறகு அந்தக் குழந்தையை ரசிப்பது போலத்தான் என்னை நீங்கள் ரசிக்கிறீர்கள்." என்றவரும் அவரே.
2022ல்,
"மம்முட்டி பக்கத்தில் நான் நின்னா அமாவாசை – பெளர்ணமி மாதிரி இருக்கும்... மேக்கப்பை போடுய்யா... எனச் சொன்னேன் என்றார்! மணிரத்தினம் முகம் நிரம்ப சிரித்தது அந்த நிகழ்ச்சியில்தான் என நான் நினைக்கின்றேன்.
2024ல்,
"மிஸ்டர் ரஜினிகாந்த்... இங்கே இருக்கிறவங்க எல்லாரும் white collarsங்க, உன் ரசிகர்கள் இல்லை.. ஜாக்கிரதையா பேசு...என்று தன்னைத்தானே எச்சரித்துக் கொண்டவர்... Laughter is the best medicine என்பதை அங்கே கூடியிருந்த மருத்துவர்களும் அன்று உணர்ந்திருப்பார்கள்...
2025ல்,
"70+ வயசு... கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு, ஸ்லோ மோஷன்ல நடந்து வர்ற இந்த ரஜினிகாந்தை ஏன் இன்னும் கூப்பிட்டிருக்காங்கன்னு யோசிச்சேன்." என்று அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தியவர்...
மேலும்,
"டாப்புல போனவங்க எல்லோரும் தனியாகத்தான் இருப்பாங்க." என்று 80களின் இறுதியிலேயே சொல்லியிருந்தவர்...
80களின் இறுதியில் அவர் சொன்ன "ஏத்திய பேனரெல்லாம் ஒருநாள் இறக்கியே ஆகணும்..." என்ற அதே வரியை, இன்று முதல் முறையாகச் சொல்லியிருந்தால், "தலைவர் தன்னைப் பற்றித்தான் பேசிவிட்டார்" என்று சில பூமர்களும் பலசிறார்களும் சேர்ந்து ஆயிரம் அர்த்தம் கற்பித்திருப்பார்கள்.
ஆனால், தன்னைச் சுயபகடி செய்து, தன்னை உயர்த்திக் காட்டாமல், அதையே நகைச்சுவையாக மாற்றி மேடையை வசப்படுத்துவது... அது இன்றோ, நேற்றோ தொடங்கிய குணமல்ல. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் அவரது இயல்பு.
'சிவாஜி' வெற்றி விழாவில் கலைஞர் குறித்து அவர் சொன்ன ஒரு வரி:
"அவர் அவராக இருக்கின்றார்! அவர் அவராக இருந்தால்தான் மரியாதை."
அதேபோல...
ரஜினிகாந்த், ரஜினிகாந்தாகவே இருக்கிறார். அதனால்தான் அவர் ரஜினிகாந்த்.
இதுவும் ரஜினி ஸ்டைல்தான்...
The Name is #Rajinikanth.
#ThalaivarForLife #ThalaivarForAReason #ThalaivarNirandharam
#தர்மன் #Dharman
இந்த அழைப்பு ஒவ்வொரு MNM ஆதரவாளரையும் சென்றடைய, தயவுசெய்து Repost செய்து பரப்புங்கள்! 👇🔥
"வெறும் ரசிகர்களாக அல்ல... மாற்றத்தை உருவாக்கும் களப்பணியாளர்களாக உயர்வோம்!"
ஒரு இயக்கத்தின் வெற்றி அதன் தலைவரால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த இயக்கத்தின் கனவை தங்களின் கனவாக ஏற்றுக்கொள்ளும் ஆயிரக்கணக்கான சாதாரண மனிதர்களால்தான் அது வெற்றிபெறுகிறது.
மக்கள் நீதி மய்யம் உருவானபோது, ஆயிரக்கணக்கான கமல்ஹாசன் ரசிகர்கள் அரசியலின் மீது புதிய நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினர்.
"அரசியல் என்பது சினிமா அல்ல மக்களின் வாழ்க்கையை மாற்றும் கருவி"
என்ற தலைவர் கமல்ஹாசனின் அழைப்பு பலரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பதிவுகள், தெருமுனைப் பிரச்சாரங்கள், உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், பொதுக்கூட்டங்கள் என உற்சாகத்துடன் செயல்பட்டனர்.
ஆனால் காலப்போக்கில், பல காரணங்களால் அந்த உற்சாகம் குறைந்தது. தேர்தல் முடிவுகள், தனிப்பட்ட பொறுப்புகள், வேலை, குடும்ப சூழ்நிலைகள், மற்றும் அரசியல் மீதான ஏமாற்றங்கள் சிலரை அமைதியாக்கின. இன்று சமூக வலைதளங்களில் மட்டும் ஆதரவு தெரிவிக்கும் பலர், ஒருகாலத்தில் களத்தில் ஓடியவர்களே.
இந்தக் கேள்வியை நாம் நம்மிடமே கேட்க வேண்டும்.
நாம் வெறும் ரசிகர்களா?
அல்லது ஒரு மாற்றத்தை உருவாக்க வந்த களப்பணியாளர்களா?
தலைவர் கமல்ஹாசன் ஒரு நடிகராக வெற்றி பெற்றதால் அவரை ஆதரிப்பது எளிது. ஆனால் அவர் முன்வைக்கும் அரசியல் சிந்தனைகள், நிர்வாகக் கனவுகள், ஊழலற்ற ஆட்சி, அறிவியல் சார்ந்த கொள்கைகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே உண்மையான அரசியல் பணி.
இன்று தமிழ்நாட்டில் அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. புதிய தலைமுறைகள் உருவாகின்றன. புதிய கட்சிகள் உருவாகின்றன. புதிய கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் MNM தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் இது.
அந்த அடுத்த கட்டம் என்ன?
அது ரசிகர்களை களப்பணியாளர்களாக மாற்றும் கட்டம்.
ஒரு சமூக வலைதள பதிவு போடுவது முக்கியம். ஆனால் அது மட்டும் போதாது.
ஒரு வாக்காளரிடம் பேச வேண்டும்.
ஒரு நண்பரிடம் கட்சியின் கொள்கைகளை விளக்க வேண்டும்.
ஒரு புதிய உறுப்பினரை சேர்க்க வேண்டும்.
ஒரு சமூகப் பணியில் பங்கேற்க வேண்டும்.
ஒரு இளைஞரை அரசியல் விவாதத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
இதுவே உண்மையான இயக்கப் பணி.
நாம் அனைவரும் ஒரே அளவிலான நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவிற்கு பங்களிக்கலாம்.
வாரத்திற்கு ஒரு மணி நேரம்.
மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி.
சமூக வலைதளத்தில் ஒரு தரமான பதிவு.
ஒரு புதிய உறுப்பினர்.
இந்தச் சிறிய முயற்சிகளே ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கும்.
கமல்ஹாசன் பலமுறை கூறியுள்ளார்:
"மாற்றம் ஒரே நாளில் வராது. ஆனால் மாற்றத்தை நோக்கி எடுக்கப்படும் ஒவ்வொரு அடியும் முக்கியமானது."
இன்று MNM-க்கு தேவை இன்னொரு தலைவர் அல்ல.
இன்னொரு ரசிகர் மன்றமும் அல்ல.
தேவை அர்ப்பணிப்புள்ள களப்பணியாளர்கள்.
கொள்கையை நம்பும் தன்னார்வலர்கள்.
சிந்தனையை பரப்பும் இளைஞர்கள்.
செயல்படத் தயாராக இருக்கும் ஆதரவாளர்கள்.
ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கமல்ஹாசன் மட்டும் MNM அல்ல.
நாமும் MNM.
நமது உழைப்பும் MNM.
நமது நேரமும் MNM.
நமது அர்ப்பணிப்பும் MNM.
எனவே, இன்று அமைதியாக விலகி நின்றிருக்கும் ஒவ்வொரு ஆதரவாளரிடமும் ஒரு வேண்டுகோள்:
மீண்டும் வாருங்கள்.
உங்கள் அனுபவம் தேவை.
உங்கள் குரல் தேவை.
உங்கள் யோசனைகள் தேவை.
உங்கள் பங்களிப்பு தேவை.
ஒரு இயக்கம் தேர்தல் காலங்களில் மட்டும் உயிர்ப்புடன் இருக்கக்கூடாது. தேர்தல்களுக்கு இடையிலான காலங்களில்தான் அதன் உண்மையான வலிமை உருவாகிறது.
நாம் ரசிகர்களாகத் தொடங்கியிருக்கலாம்.
ஆனால் வரலாறு படைப்பவர்கள் ரசிகர்கள் அல்ல.
களத்தில் இறங்கி உழைக்கும் களப்பணியாளர்கள்தான்.
இது வெறும் ஒரு சந்திப்பு அல்ல.
இது ஒரு மீளிணைவு.
இது ஒரு மறுதொடக்கம்.
இது MNM-இன் அடுத்த கட்டத்தை உருவாக்கும் அழைப்பு.
வாருங்கள்.
ரசிகர்களிலிருந்து களப்பணியாளர்களாக உயர்வோம்.
தலைவர் கமல்ஹாசனின் கனவை, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை, மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த அத்தியாயத்தை நாமே எழுதுவோம்.
நன்றி!!
நீங்களும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக விரும்பினால், படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
Google form Link 🔗
https://t.co/NPLQHY9mf9
#KamalHaasan
#MakkalNeediMaiam #Thalaivar #GroundLevelDatabase #MaiamNews
@jamil2832 भाई साहब कपडा पहनाना उनका निजी अधिकार है बो जो चाहे पथन सकता है लेकिन सार्वजनिक स्थान पर थोड़ा सोच समझ कर जाना चाहिए
और बो एक सीएम की पत्नी है तो समाज उनसे कुछ उम्मीद भी करता है।
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Guys please do not share such videos of UP-Bihar people travelling like cattle in trains as such videos destroy the image of India.
Please guys, strictly DO NOT RETWEET😁
Let’s present Vishwaguru image of India by not sharing such videos!!
@Rangaraayar By no means I’m saying the movie is bad. It’s a good movie.
But I don’t see the point in hyping a movie that isn’t original at its core.
Furthermore the screenplay and the progression of the story could’ve been better 🤷♂️
1996 அப்போதே செய்திதாள்களில் வந்த தகவல் படி
50000 க்கும் மேல்
ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் இருந்தன
பதிவு செய்ய பட்டவை
லட்ச கணக்குல பதிவு செய்யப்படாத மன்றங்கள் இருந்தன
95ல் ஒரு சிறிய கிராமத்தில்
ராஜாதி ராஜா ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் ஆக இருந்தேன், ❤️
அது எல்லாம் வேற லெவல் 🔥
2000 க்கு மேலே
ரஜினி அஜித்
ரஜினி விஜய்
என கோவை உட்பட நிறைய நகரங்களில் மன்றங்கள் புதிதாக வந்தன
அதுவும் கோவை எல்லாம் பாத்தா
தலைவர் + தல கூட்டணி ரசிகர்கள் கூட்டம் எல்லாம் நெருப்பா இருக்கும் 🔥
படம் வரும்போது பேனர் எல்லாம் தலைவர் தல போஸ்டர் பட்டய கிளப்பும்
இன்றும் தலைவர் மேல்
தல #AK க்கு இருக்கும் மதிப்பு மிக பெரியது
அந்த இன்னொருவர் பற்றி சொல்ல ஒன்னும் இல்லை
உங்க முடிவுக்கே விட்டு விடுகிறேன்
#SuperStarRajinikanth