தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும், தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணியும், உலக அரங்கில் நம் பாரம்பரியத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துச் செல்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதும், கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆதரவளிப்பதும், நம் அனைவரின் பொறுப்பாகும்.
இன்று, தேசிய கைத்தறி தினத்தில், இந்தியாவின் வளமான மற்றும் துடிப்பான கைத்தறி பாரம்பரியத்தை நாம் கொண்டாடுகிறோம். நமது நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம். தலைமுறை தலைமுறையாக, அவர்கள் நமது பாரம்பரியங்களைப் பாதுகாத்து வளப்படுத்தி வருகின்றனர்.
கிராமப்புற மேம்பாடு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் தற்சார்பு இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் ஒரு முக்கிய தூணாக விளங்கும் கைத்தறித் துறைக்கு நமது அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
உங்களுக்குப் பிடித்த கைத்தறிப் பொருட்கள் மற்றும் GRWM காணொளிகளை #NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பகிருங்கள். இது இத்துறையுடன் தொடர்புடையவர்களை ஊக்குவிக்கும்.
Wishing everyone a blessed Guru Purnima.
On this auspicious day, let us offer our deepest respects to the our teachers and mentors who tirelessly guide us from the darkness of ignorance toward the light of wisdom.
Heartiest congratulations to Thiru Raja Muthupandi avl on securing the Silver Medal in the Men’s 65kg Weightlifting at the Commonwealth Games 2026 in Glasgow.
He has brought immense glory to our nation and has brought pride to the state of Tamil Nadu on the global stage. Wishing him continued success in all his future endeavours.
கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
On #KargilVijayDiwas, we remember the courage, grit and selflessness of the soldiers who fought under impossible circumstances. Their sacrifice reminds us that our nation's strength rests on the resolve of those who protect it.
Jai Hind.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தனது எழுத்தாலும், பேச்சாலும் மக்களிடையே விடுதலை உணர்வை விதைத்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் இன்று.
தேச விடுதலைக்காக எண்ணற்ற துயரங்களைத் தாங்கி, தனது இறுதிவரை உறுதியாகப் போராடிய வீரத்தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
Congratulations to the entire Skyroot Aerospace Team on the successful launch of Vikram-1 (Mission Aagaman) from the Satish Dhawan Space Centre, Sriharikota.
The mission marks a significant milestone for India’s private space sector and reflects the growing capability of the country’s space ecosystem.
Congratulations to IN-SPACe and ISRO teams, who enabled and facilitated the launch and ground testing operations along with technical consultancy and 24x7 safety surveillance.
This achievement is also a testament to the Space Sector Reforms envisioned by our Hon’ble Prime Minister Shri Narendra Modi ji.
#Vikram1
#IndiawithVikram1
#SkyrootAerospace
#OpeningSpaceForAll
ORBIT ACHIEVED. 🚀
Vikram-1 Test Flight-1 has reached orbit. India's first privately developed orbital rocket has completed its final burn and injected its payloads into a ~450 km orbit, making India the third country in the world with private orbital launch capability.
History is made. 🇮🇳
#Vikram1 #JourneyToOrbit #SkyrootAerospace
எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ், என்றும் நிலைத்திருக்கும்.
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
Looking forward to joining our @WTLFoundation leaders in Pollachi this evening as we gather together, united by our shared resolve to build a drug-free Tamil Nadu.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதியுடன், இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில், @WTLFoundation தலைவர்களுடன் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
போதை இல்லா, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போரிட்ட மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
விடுதலை வேள்வியில் தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.
ஆன்மீகமும், அறிவியலும், மனிதநேயமும் ஒன்றிணைந்த, நமது பாரதத்தின் சிந்தனையை உலக அரங்கில் உயர்த்திய, சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவு தினம் இன்று.
இளைஞர்களிடம், தன்னம்பிக்கை, துணிச்சல், ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றினை போதித்த மகான் விவேகானந்தர் அவர்களது சிந்தனைகள், என்றும் நம் வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக நிலைத்திருக்கட்டும்.
The news that the death toll in the Ammonia gas tragedy in a pvt company in Thiruvallur has increased to 17 is deeply disturbing. All the deceased are women and were migrant guest workers from North India.
The TN government has given Compensation of Rs. 2 lakh to the next of kin of the deceased. How is this sufficient & justified? Odisha government has given Rs. 10 Lakh as compensation to the victim. The Odisha government also facilitated the return of those migrant guest workers who were discharged after the treatment. While the State Govt arranged safe passage of the deceased, how did the State administration forget the plight of those who were discharged from hospitals, waiting to return home?
The tragic loss of lives in the Ammonia gas tragedy in the private export firm in Thiruvallur also raises a lot of questions;
1)The first & foremost being the absence of the implementation of the 1979 Inter-State Migrant Workmen Act. Principal employers of establishments that employ five or more inter-state migrant workers must be registered under the Act. However, this accident and many earlier incidents have only shown that this Act is not implemented in Tamil Nadu and that no registry is being maintained.
Whenever a crime happens that involves a migrant guest worker from North India, a bunch of innocent migrant guest workers from North India are rounded up for enquiry, as there are no ways and means for the Police Department to narrow it down due to lack of registry.
However, after we pointed it out recently, we understand that the TVK Govt has begun enforcing this Act, at least in parts, if not in full. We trust that the State Govt takes the recent accidents/incidents seriously and enforces the availability of the register of migrant guest workers across all districts. TN State Govt could draw inspiration from the Athidhi app developed by Kerala for registering migrant guest workers and to ensure their welfare.
Even in the Thiruvallur ammonia gas tragedy, it was learnt that there was difficulty in establishing the actual identity of one of the deceased women, who carried a forged Aadhaar card to secure employment. This shows the inefficiency of the functioning of the inter-state migrant workers portal launched by TN Govt in 2023.
2)The welfare board for migrant guest workers is basically non-existent and needs to be established, strengthened and should be used to address the concerns of the migrant guest workers.
Tamil Nadu has today fallen below the replacement level, with a fertility rate of 1.3. To build the State’s infrastructure and work in industrial & commercial establishments across the State, we depend on the hard work of our migrant guest workers. Hence, it is important that we focus on their state of living, as most of the migrant guest workers are compelled to live in appalling conditions and have no place to complain, and their voices are never heard.
3)It is not just the duty of the welfare board but also the duty of the Department of Industrial Safety & Health (DISH) of the state government of Tamil Nadu. Even after a catastrophe that led to the death of 17 workers due to an ammonia gas leak, there seems to be no accountability taken by this department. It is time for “Transparency”. DISH should have made public their most recent inspection of this factory and any observations they made.
The factory in which these migrant guest workers suffered had accommodations within the place of work, surrounded by hazardous pipelines. How was this even allowed?
I demand that appropriate compensation be disbursed to the victims, that the 1979 Inter-State Migrant Workmen Act be enforced in both letter & spirit, and that transparency be brought by the Ministry of Labour of the TN State Govt on the functioning of the DISH & they also be made accountable, including the owners of the establishment, for deliberately ignoring the hazardous living conditions of the migrant guest workers.
@CMOTamilnadu