தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
மக்கள் நீதி மய்யம்
எண்பது ஒரு சூப்பர்
@ikamalhaasan Brand.
எப்போதோ கட்சியை
விட்டு போனவர்கள் கூட இன்றும் அதனால்
பலனும் பிரபலமும் ஆகிறார்கள்
இங்கே #MNM ல் உள்ளவர்கள் வழக்கு
பொய், பித்தலாட்டம்,
பணத்தாசை இல்லாத
அப்பழுக்கற்ற 💎 Gem மட்டும் தான்
#KamalHaasan@maiamofficial
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu
ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!
தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமானதொரு நடவடிக்கையாகும். அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நகரமயமாதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.
ஆ. அருணாச்சலம் MA., BL., @Arunachalam_Adv
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
செண்பகராமன் பிள்ளை (1934) : "ஜெய் ஹிந்த்" (Jai Hind) என்ற உலகப் புகழ்பெற்ற முழக்கத்தை முதன்முதலில் உருவாக்கிய தீவிர இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்.
@ikamalhaasan#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#SenbagaramanPillai
#JaiHind
டாஸ்மாக் கடைகளை குறைப்பதன் மூலம் குடிப்பவர்கள் எண்ணிக்கை மற்றும் விற்பனை குறைய வேண்டும்
டாஸ்மாக் மூடுவதன் பயன் பெற #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் கூறுவது போல மறுவாழ்வு மையம் அமைத்து குடிப்பவரை மீட்க வேண்டு்ம்
சாராய மபியா அனுமதிக்க கூடாது
@ikamalhaasan@maiamofficial
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
+2 தேர்வில் வென்ற மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் ! உங்கள் உயர்கல்விப் பயணம் சிறக்கட்டும்.
வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் மனம் தளர வேண்டாம். தன்னம்பிக்கையுடன் அடுத்தகட்ட முயற்சியைத் தொடருங்கள்; வெற்றி நிச்சயம் !
வாழ்த்துகளுடன்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#12thResult
#ExamResult
ஆட்சி அமைக்கும் அளவுக்கு @TVKVijayHQ க்கு பெரும்பான்மை இல்லை என்று "லோக்பவன்"(கவர்னர்) அறிவிப்பு..
அப்படியானால்.... 118 ஆதரவு எம்.எல்.ஏக்களை ”லோக் பவனுக்கு” வரச்சொல்லி அடையாள அணிவகுப்பு நடத்தி - ஆதார் கார்டு சரிபார்த்து - பயோமெட்ரிக் முறையில் கைரேகை, கருவிழி சரிபார்த்த பின்புதான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன் என்கிறாரா கவர்னர் ?
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே..
‘ லோக்பவன்” அல்ல...
மக்களின் தீர்ப்பு,
உச்சநீதி மன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் கவர்னர் செயல்படவேண்டும்.
”ராஜ் பவன்” என்பதை
”லோக் பவன்” என்று,
பெயர் மாற்றினீர்கள்..
"ராஜா" மனப்பான்மையை எப்போது மாற்றுவீர்கள் ??