தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும், தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணியும், உலக அரங்கில் நம் பாரம்பரியத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துச் செல்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதும், கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆதரவளிப்பதும், நம் அனைவரின் பொறுப்பாகும்.
நேற்று வடவள்ளி சந்தையில் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்திய மக்களிடம் பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக வீ தி லீடர்ஸ் சார்பில் துணிப்பை வழங்கப்பட்டு அதைப் பயன்படுத்துமாறு கூறிய வீ தி லீடர்ஸ் அமைப்பினர்.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
With an emphasis on spreading the importance of preserving TN’s vast coastline and protecting biodiversity, @WTLFoundation has launched the cleaning & regenerating of the 175 km coastline between Kanyakumari and Thoothukudi.
Yesterday, we inaugurated the cleaning activity in Kanyakumari, Uvari, Kulasekarapattinam & Threspuram in Thoothukudi, with thousands of volunteers participating in the coastal regeneration effort.
இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.
திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.
வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.
வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். (1/4)
ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எங்கள் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.
அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்ட அசைக்க முடியாத பற்றும், எதிரிகளை அச்சுறுத்திய போர்த்திறனும், தீரன் சின்னமலை அவர்களின் தனித்துவ அடையாளம்.
தலைமுறைகள் கடந்தும் வாழும் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுடன் போராடிய மாவீரர் குணாளன் நாடார் அவர்கள் நினைவு தினம் இன்று.
தீரன் சின்னமலை அவர்களுடன் தோளோடு தோள் நின்று மூன்று முக்கியப் போர்களில், தனது வீரத்தால் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டிய பெருமைக்குரியவர்.
கொங்கு நாட்டின் பெருமைக்குரிய கட்டுத்தடிக்காரர். விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவரான மாவீரர் குணாளன் நாடார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் பாடப்பட்ட மன்னரும், 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும் கொடையாளியாகவும், இணையற்ற வீரராகவும் விளங்கிய அவரது வாழ்க்கை, தமிழரின் வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகள் கொண்ட மாவீரர் வல்வில் ஓரி அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.