இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது.
அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை.
அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.