Manthan Hyderabad was different.
220+ traders in one room, focused on systems, structure and automation.
From noiseless momentum to rule-based execution, the shift was REAL.
Grateful to everyone who showed up. You made this more than just an event.
Next stop: Bengaluru
Register your seat - https://t.co/3kGCIEcdln
An appeal to all political parties; Pl avoid giving us pamphlets propagating your party symbol which people throw to dust bin right in front of you !
Instead, print the same content on a hand fan and give it; Helpful in summer & people will retain it for some time atleast !
வாழ்கை வாழ்வதற்கே...
இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்
கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது
நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்
ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு
ஒரு வாரம் தவம் கிடந்தோம்
அந்த காலம் தான் நன்றாக இருந்தது..
ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..
தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..
ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..
இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..
அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்
மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்
வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்
ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..
ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..
கண்டதை உண்டாலும் செரித்தது.
தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..
பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்
உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்
ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..
எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..
வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..
பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..
கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..
மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..
ஆசிரியைகளிடம்.
எளிமை இருந்தது..
படுக்கையை எதிர்பாராமல் பாயில்
உறங்கினோம்
தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே
அவர்கள் மடி மீது தான் நாம் உறங்கிய தருணம் கண்டோம்
பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய
பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..
அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..
பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...
காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..
பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்
ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்
செல்போன் எதுவும் இல்லை
ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்
ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது
தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்..
காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்
ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம்..
ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..
மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..
மொத்தத்தில் அப்போது வாழ்ந்தார்கள்.. இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே...
#ஜப்பான் நாட்டில் முன்பு விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது...
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்து விட்டால்,
அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்து விட்டு வந்து விடுவார்கள்.
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமை அடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டு இருந்தான்.
தாய்,மகன் இருவருமே எதுவும் பேசவில்லை !
ஆனால் சிறிது நேரத்தில் தன் தோளில் இருந்த தாயார் ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னச்சின்னக் கிளைகளை ஒடித்து கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
உடனே,
"அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான்.
அதற்கு தாயார்,
""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும் போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா !
இங்கே போடப்பட்டு உள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.
அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன் என்றாள்.
வயதாகி விட்டத் தன்னை தவிக்க விட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசம் மிகுந்த இந்தத் தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க,
அவன் தன் தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .
அதன் பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது என்று அந்த நாட்டு கதை.
இந்தக் கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக மிக முக்கியம்.
தற்போது தன்னை கண்ணே மணியே என்று கொஞ்சிய தன் அப்பா, அம்மாவை வயதாகிப் போனதால் மாத வாடகைக்கு கட்டி வைத்து இருக்கும் இடத்தில் இரக்கமே இல்லாமல் மாதா மாதம் பணம் அனுப்பும் கேவலப் பயல்களை நாம் காண்கிறோம்.
நீ நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் தாய்.
நீ கெட்டவனாகவே இருந்தாலும் நீ சாப்பிட காத்துக் கொண்டு இருப்பது உன் தாய் மட்டும்தான்.
எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு உன்னால் வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவறை என்பதை மறந்து விடாதே !
எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், அசிங்கங்கள்,
அவமானங்கள் கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக் கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொண்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேறு ஏதும் இல்லை.
நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.
அவர்களைக் கண் போன்று பாதுகாப்போம்.
காலம் மாற மாற ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் பிரச்சனகள் வரலாம்.
ஆனால் எவன் ஒருவன் தாயையும், மனைவியையும் கலங்காமல் காக்கிறானோ அவனே ஆண் பிள்ளை.
மனைவிக்காக கருவறையில் வாழ்ந்து வந்த பெற்ற தாயை விரட்டுபவன் ஆண்மைற்ற கோழைப் பயல் என்பதில் சந்தேகம் இல்லை.
அவனது கடைசி காலம் அதை விட கேவலமாக கொடியதாகவே இருக்கும்.
ஒரு காலத்தில் பொருளாதாரம் இல்லை என்றாலும் நாட்டின் சுதந்திரத்திற்காக தினமும் 60 கசை அடி அறுபது நாட்கள் தண்டனையை பெற்ற என் அப்பா அம்மாவை என்னால் இயன்ற வரை அன்றைய பொருளாதாரத்தில் பாதுகாத்தேன்.
ஆனால் என் தியாக உள்ளம் படைத்த வயதான என் அப்பா அம்மாவோ நான் முன்னேறி விட மாட்டானா? என்று கடவுளை அனுதினமும் வேண்டினர்.
என் அம்மா அப்பாவின் வேண்டுதல் இன்று பலித்தது.
இன்று அந்த தெய்வங்களைத் தேடுகிறேன்.
கிடைக்கவில்லை.
அம்மா அப்பாவை தவிக்க விட்டு விடாதீர்கள்.
அப்படி செய்தால் தெய்வம் உங்களை விட்டு சத்தியமாக விலகி விடும்.
சிறு வயதில் கொஞ்சிக் குலாவிய அம்மா அப்பாவின் உணர்வுகளை புரிந்து அவர்களை பாதுகாத்து கொஞ்சிக் கொண்டாடுங்கள்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.