Found an authentic noodle spot in Chennai and I don't want to gatekeep this one. The biang biang noodles are genuinely among the best I've had anywhere in the world.
Taiwan Maami in T. Nagar.
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள். ஒரு பாடலின் உயிரும் உடலுமாக இரு துருவங்கள் இணைந்து பயணிக்க முடியும் என்பதன் வரலாற்று சாட்சியாக ஒலித்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ். விஸ்வநாதனும். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன்.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிடித்திருந்தால் Repost & Support பண்ணுங்க ✊🏽
மக்கள் நீதி மய்யம்
நம்மவர் திரு. கமல்ஹாசனும் நம்பிக்கையை விதைக்கும் தொண்டர்கள் பயணமும்
ஒரு இயக்கத்தின் வெற்றி என்பது அதன் தலைவரின் புகழால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, தங்களின் நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணிக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் அர்ப்பணிப்பாலும் அது வளர்கிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் இன்று தமிழக அரசியலில் தனித்துவமான ஒரு பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் கலை வழியாக சமூகப் பொறுப்புணர்வை விதைத்தவர். அரசியலுக்குள் வந்த பிறகும் அதே மனிதநேயம், நேர்மை மற்றும் மக்கள் நலன் என்ற அடிப்படைக் கொள்கைகளையே முன்னிறுத்தி வருகிறார். அதிகாரத்தை நோக்கிய அரசியல் அல்ல, மாற்றத்தை நோக்கிய அரசியல் என்ற எண்ணமே மக்கள் நீதி மய்யத்தின் அடையாளமாக உள்ளது.
இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், சிந்தனைகள் மற்றும் சமூக அக்கறை மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பயணம் இன்னும் விரிவடைய வேண்டும். காரணம், ஒரு நல்ல சிந்தனை அதிகமான மக்களை சென்றடையும் போது தான் அது சமூக மாற்றத்திற்கான சக்தியாக மாறுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் பலம் அதன் தொண்டர்களே. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த பதவியையும் நாடாமல், ஒரு நல்ல தமிழகம் உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த இயக்கத்தின் உண்மையான தூண்கள். அவர்களின் உழைப்பும், பொறுமையும், விடாமுயற்சியும் தான் நாளைய வெற்றியின் அடித்தளமாக அமையும்.
வரலாற்றைப் பார்த்தால், எந்த மாற்று அரசியல் இயக்கமும் ஒரே நாளில் வளர்ந்ததில்லை. மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து, தொடர்ந்து உழைத்து, படிப்படியாக முன்னேறியதன் விளைவாகவே அவை பெரிய இயக்கங்களாக உருவாகியுள்ளன. அதுபோலவே மக்கள் நீதி மய்யத்தின் பயணமும் ஒரு நீண்ட தூரப் பயணம். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பும் மதிப்புமிக்கது.
இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் மனிதநேயம், நேர்மை, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் அறிவியல் சிந்தனை போன்ற மதிப்புகளை கொண்டு செல்லும் பொறுப்பு இன்று நம்மிடமே உள்ளது. நாம் பகிரும் ஒவ்வொரு நல்ல கருத்தும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருடனான உரையாடலும், நாம் செய்யும் ஒவ்வொரு சமூகப் பணியும் இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
ஒரு விதை மரமாக வளர காலம் தேவைப்படுவது போல, ஒரு சிந்தனை மக்கள் இயக்கமாக வளரவும் காலம் தேவைப்படுகிறது. அந்த பொறுமையையும் நம்பிக்கையையும் இழக்காமல் தொடர்ந்து செயல்படுவதே ஒரு உண்மையான தொண்டனின் அடையாளம்.
இன்று நாம் செய்யும் சிறிய முயற்சிகள் நாளை பெரிய மாற்றங்களுக்கான அடித்தளமாக அமையலாம். அதனால் மனம் தளராமல், நம்பிக்கையை இழக்காமல், மக்கள் மத்தியில் அன்புடனும் பணிவுடனும் தொடர்ந்து பயணிப்போம்.
நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் நல்லாட்சி கனவும், மக்கள் நீதி மய்யத்தின் மனிதநேய அரசியல் சிந்தனையும் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்றடையட்டும்.
மாற்றத்தை நம்புவோம்.
மக்களை நம்புவோம்.
நம்மை நம்புவோம்.
ஏனெனில், ஒரு நல்ல நாளை உருவாக்கும் சக்தி மக்களிடமே இருக்கிறது.
வாருங்கள் ஒன்றாய் பயணிப்போம்
உயிரே!
உறவே!
தமிழே!
#MakkalNeedhiMaiam #PeoplePoweredPolitics #VolunteerMovement #TamilNaduPolitics
#MaiamNews
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
நீங்க சொல்றத யாரும் கேட்க மாட்டாங்க, புரியல னு சொல்லி ஏமாத்துவாங்க,...
இப்ப இருப்பவர்களுக்கு உங்கள் தேவை புரியாது....
சிக்கி சின்னா பின்னம் பட்டா தான் புரியும் 🙄🏃♀️🏃♀️🏃♀️
Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
@TThenarasu Few years back when I went on holidays with my family to Netherlands, I sought special permission to view these copper plates
It was a very special day for me to finally get to see what I had read about only
Glad it is coming hopefully to TamilNadu where it belongs🙏
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.
Incredible man. Incredible words.
At a crucial time for the cinema industry, Mr. @ikamalhaasan is among the first to step forward and speak about responsible measures to control costs and protect the future of cinema. Truly appreciate it, sir. 🙏🏻