பெண்களுக்கு எதிராக இவ்வளவு குற்றங்கள் நடக்கும்போது சிங்கப்பெண் படை எங்கே போனது?
அது பெண்கள் பாதுகாப்பிற்கான படையா? இல்லை ரீல்ஸ் எடுக்க உருவாக்கப்பட்ட வெற்று விளம்பர படையா?
#Singappen#ReelsGovt#TVKFails
கல்விக்கூடங்கள் இன்று தவெக-வின் அரசியல் விளையாட்டு மைதானங்களாக மாறியதன் விளைவுதான், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் சக மாணவனை சக மாணவனே கத்தியால் குத்தியிருக்கும் இந்த அவலம்!
தேர்தலுக்கு முன்பு அஜித்குமார் வீட்டுக்குச் சென்ற விஜய்க்கு, இன்று சபரிவர்மன் வீடு ஏன் இவ்வளவு தூரமாகத் தெரிகிறது?
காவல்துறை சித்திரவதையால் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தின் கதறல் கண்ணுக்குத் தெரியவில்லையா?
இல்லை, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே உங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லையா?
அஜித்குமார் வீட்டிற்குச் சென்றது வெறும் தேர்தல் நாடகமா?
சபரிவர்மன் மரணத்திற்கு நீதி பெற்றுத் தருவதாக ஒரு வார்த்தை சொல்லக்கூட உங்களுக்குத் திராணியில்லையா?
தாய்மாமனின் தடியடி! .
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என த.வெ.க.வினர் பொய் பட்டியலை வெளியிட்டாலும் பல கடைகள் மூடாமல் இருப்பதை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்; இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது கப்சா விஜயின் அரசு.
நான் ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய்மாமன் என பேசிய முதலமைச்சர் விஜய்க்கு பள்ளி மாணவ, மாணவிகளை விட மதுக்கடைகள் தான் முக்கியமா?
முதலமைச்சர் வெறும் வாயில் வடை சுடாமல், அராஜக ஆட்சி நடத்தாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்!