வெகுஜன மனநிலை
...
திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் தோற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திருமிகு. ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கலைத்துறையைச் சேர்ந்தவன் ஆயினும், தொடர்ந்து 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவன் அல்லது அந்தச் சுற்றுச்சூழலில் வாழ்ந்தவன் என்ற அடிப்படையில், எனக்கும் சில தனிப்பட்ட கருத்துகள் உண்டு.
வெகுஜன மனநிலை என்று ஒன்று எப்பொழுதுமே இருக்கிறது. அந்த மனநிலையை யாரும் பிரச்சாரத்தாலோ அவதூறுக் கருத்துகளாலோ உருவாக்க முடியாது. ஆனால், ஒரு சிறிய செயல் அதனை உண்டாக்கக் கூடியது.
இன்று திரு. விஜய் அவர்கள் அரசியல் பொறுப்பேற்றிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இருக்கக்கூடிய தன்மைக்கும், அன்றைய நாளில் ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற காலத்தில் இருந்த நேர்மறையான அதிர்வலைகளுக்கும் (Positive vibes) நிறைய வித்தியாசங்கள் இருப்பதைப் பார்க்கிறேன்.
இப்பொழுது எல்லோருமே புதியவர்கள். என்ன செய்யப் போகிறார்கள்? ஏது செய்யப் போகிறார்கள்? யார் யார் அமைச்சர்கள்? அவர்கள் திட்டங்கள் என்ன? சாதிப்பார்களா, சாதிக்க மாட்டார்களா? போன்ற கேள்விகள் இருக்கின்றன. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள், ஊடகத்துறை என எல்லாமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து அவருக்கு எதிரே இயங்குகின்றன. ஆனால், அன்றைய ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், அவர் பொறுப்பேற்ற அந்த முதல் மூன்று மாதங்களில் அவருடைய எல்லா நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாகவே,
உள்ளத்தைத் தொடும் விதமாக, உண்மையாக இருந்தன.
அவர் பதவியேற்றதும் தன் சிறுவயதில் இருந்து யாரெல்லாம் பாராட்டி ஊக்கப்படுத்தினார்களோ அவர்களை எல்லாம் அவர் சந்தித்தது, மிகவும் சாதாரணமாக ஒரு முதலமைச்சருக்கு உண்டான தோரணை இல்லாமல் தன்னைக் காண வருபவர்களைத் தன் வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று பார்த்தது போன்ற நற்குணங்கள் அவரிடம் இருந்தன.
அது தொடர்ந்தது. தொடர்ந்து அவர் சிந்தித்துப் பல நற்பணித் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். நான் கூட நண்பர்களிடம், "திராவிட முன்னேற்றக் கழகம் இத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் முதல்வரின் நலத்திட்டப் பணிகள்தான்" என்று சொல்வேன். அவர் 'நலத்திட்ட நாயகர்' என்று சிறப்பான அழியாத பெயர் பெற்றுவிட்டார்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா,
வெகுஜன மனநிலை என்பது செயல்களால் உண்டாகும் என்று!
எந்த ஒரு விஷயத்தையும் ஒரு வெகுஜன மனநிலையிலிருந்துதான் நான் கவனித்து வந்திருக்கிறேன்.
எனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எப்பொழுதுமே இருந்ததில்லை.
அந்தச் செயல்கள் என்னென்ன என்று அருமைத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிந்தித்துப் பார்க்கும் பட்சத்தில், அதற்கான விடை எளிதாக அவருக்குக் கிடைக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
பெருந்தன்மையாக அவர் முன்வந்து, இந்தத் தோல்விக்குத் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் அவர்கள் இல்லை; இவ்வளவு வாக்குகள் பெற்றதற்குத்தான் அவர் காரணம்!
"வெகுஜன மனநிலைக்கு எதிரான செயல்கள் அப்படி என்னதான் நடந்தது, நீயே சொல்லேன்" என்று நீங்கள் கேட்கலாம். அவற்றைச் சொல்வதால், ஒரு கலைஞனாக நான் தேவையற்ற பகைக்கு ஆளாகக்கூடும்.
"பின் ஏன் இதை எழுதுகிறாய்?" என்று நீங்கள் கேட்பீர்கள்.
ஒரு உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு மனிதன் கார் வைத்திருப்பதே ஆடம்பரம் என்று நினைக்கும் ஒரு நாட்டில், நீங்கள் ஒரு கார் ரேஸ் விழாவை நடத்துகிறீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாய மக்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோரின் மனநிலையிலிருந்து அதைப் பார்த்தால்தான் உங்களுக்கான விடயம் புரியும்.
"அது சரி, அதற்காக ரேக்ளா ரேஸ்தான் நடத்த முடியுமா?" என்று யாராவது கீழே பதில் கேட்டால், அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
எதிலுமே இந்த வெகுஜன மனநிலை என்பது மிக முக்கியமான காரணி.
எதைச் செய்தாலும் இந்த வெகுஜன மனநிலையைக் கண்ணோட்டத்தில் கொண்டுதான் செய்ய வேண்டும். இப்படி, நான் அறிந்து, இந்த வெகுஜன மனநிலைக்கு எதிரான சில விஷயங்கள் நிகழ்ந்தன.ஆனால் அது முதல்வர் அவர்களால் அல்ல.
இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் நேரத்தில், அப்படி என்னென்ன, எந்தெந்தத் துறைகளில் எப்படி நிகழ்ந்தன? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் முன்னின்று வியாபாரமே செய்கிறது என்ற தோற்றத்தை எவையெல்லாம் உருவாக்கின? எப்படியெல்லாம் உருவாக்கின? வெகுஜன மனநிலையில் அந்த கோணத்தில் அணுகினாலே விடைகள் எளிதாக கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.
இருப்பினும் சோர்வில்லாமல்
நான் பார்த்த மழைக்கால சென்னை மேயர் போல இன்றும் இயங்கும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
அன்பன்.
சீனு ராமசாமி
@mkstalin
அய்யா சாமிகளா
தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு
மக்களுக்கு நலத்திட்ட பணிகள் வழங்குதல் என்று கிளம்மபிடாமல், நலிந்த கட்சி தொண்டர்கள் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்று செய்யுங்கள் கலைஞர் மகிழ்வார் தொண்டர்கள் மகிழ்வார்கள் 🖤❤️🙏
அய்யா @DMKITwing இப்போ நாலு யூ டூபு சேனல விட்டு திருச்சி கிழக்கு மக்கள்ட ஜெயிச்சிட்டு நன்றி சொல்லாம ராஜினாமா பண்ணத பேட்டி எடுத்து போட்டு டேமேஜ் பண்ணி விடுங்க ப்ளீஸ் 🙏
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் மிக அருவருப்பான பதவி ஏற்பு விழாவை யாரெல்லாம் பார்க்க மாட்டீங்களோ அவங்க மட்டும் RT பண்ணுங்க! 🤮
#விஜய்_எனும்_அருவருப்பு#TVK#DMK#ADMK
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
#JustNow || தவெகவிற்கு தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா ?
வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? - விசிக
#Chennai | #TVK | #TVKVijay | #TNElection2026 | #Tamilnadu | #VCK | #PolimerNews
22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது! ஒரு சிறிய ஃப்ளேஸ்பேக்:
அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர் சென்னையில் தலைவருடன் அறிவாலயத்தில் இருந்தார். அதற்கு முந்தைய மாதம் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு கூடவே இருந்து பணி செய்யும் பொருட்டு எனது அரசுப் பணியில் இருந்து 6 மாதம் விடுமுறை எடுத்து இருந்த காலம் அது.
அலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா, டெல்லியில் இருந்து ஒரு முக்கியமான VVIP சென்னை வர வேண்டி இருப்பதாகவும், அந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் எனக்கு உத்தரவிட்டார். யார் அந்த VVIP ? என்று நான் கேட்டேன். தான் தலைவருடன் இருப்பதாகவும் பிறகு சொல்கிறேன் என்றும் சொல்லி விட்டு அலைபேசியை துண்டித்தார். அரை மணி நேரம் கழித்து என்னை தொடர்பு கொண்டவர், சென்னை வரவிருக்கும் அந்த முக்கிய நபர் டாக்டர் மன்மோகன் சிங் என்றும், அவருடைய பயணத் திட்டத்தை ஒருங்கிணைக்க அவருடைய வீட்டுக்கு செல்லுமாறும் கூறினார். அப்போது மன்மோகன் சிங் அவர்கள் டெல்லியில் சஃப்தர் ஐங் சாலையில் வசித்து வந்தார். நான் உடனே அங்கு சென்று அவரை சந்தித்தேன். அவருடைய பயண ஏற்பாடுகள் அனைத்தும் மிகவும் ரகசியமாக நடைபெற்றது.
சென்னை சென்ற டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் தலைவரை சந்தித்தார். அமைச்சர் ராஜா மற்றும் திரு. தயாநிதி மாறன் உடன் இருந்தனர். அந்த சந்திப்பில் திமுக- காங்கிரஸ் இணைந்து பயணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு துணை செல்ல யாருமே தயாராக இல்லாத தருணம் அது. நாடு முழுவதும் பா.ஜ.க.வின் பிரமோத் மகாஜன் அவர்களின் வழிகாட்டுதலில் "இந்தியா ஒளிர்கிறது" அதாவது India shining என்ற Campaign நடைபெற்றது. தான் ஜெயித்து விடுவது உறுதி என்ற நம்பிக்கையில், 2004 செப்டம்பர் மாதம் நடக்க வேண்டியிருந்த தேர்தலை முன் கூட்டியே நடத்த முடிவு செய்தார் பிரதமர் வாஜ்பாய் .
2004 ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திமுகவை தவிர காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க நாட்டில் எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. எதிர்ப்புறம் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி. மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திரு. வாஜ்பாய். அதே சமயம் நாடு முழுமைக்கும் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் தலைவர் மட்டுமே. தேர்தல் முடிவுகள் வந்தது. பாஜக கூட்டணி நாடு முழுவதும் தோல்வியடைந்தது. தமிழ்நாட்டில் 40க்கு 40 சீட்டுக்கள் (பாண்டிச்சேரி உட்பட ) திமுக- காங்கிரஸ் வென்றது. ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சி பெறவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்று புரியாத சூழலில் டெல்லிக்கு கிளம்பினார் தலைவர். தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கினார். ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகத்தில் மனம் தளர்ந்து போய் இருந்த சோனியா காந்தியை சந்தித்தார். "நான் இருக்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள். நாம் ஆட்சி அமைப்பது உறுதி " என்று ஆறுதல் கூறினார். தோழர் ஹர்கிஷன் சுர்ஜீத் மற்றும் தோழர் ஏ.பி. பரதன் ஆகியோரை நேரில் சந்தித்தார். இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அனைவரும் ஒரு கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர்.
அரசு அமைக்க உரிமை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. தலைவரை பார்க்க சோனியா காந்தி வந்தார். அமைச்சர் ராஜா, T.R. பாலு, தயாநிதி மாறன் மற்றும் நானும் அங்கு இருந்தோம். யாருமே தங்களை கூட்டணிக்கு சேர்க்காத நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக தலைவரின் கைகளை எடுத்து தனது கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டு உணர்ச்சி பெறுக கண்ணீரோடு நன்றி கூறினார் சோனியா காந்தி. புன்முறுவலோடு அந்த நன்றியை ஏற்றுக் கொண்ட தலைவர் புதியதாக உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு பெயர் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அந்த புதிய பெயரையும் தலைவரே சொல்ல வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். சிறிது நேர அமைதிக்கு பிறகு, என்னை அழைத்து தான் கூற இருக்கும் பெயரை அழகாக கணினியில் டைப் செய்து எடுத்து வரச்சொன்னார். என்ன பெயர் சொல்லப் போகிறார் என்று சோனியா காந்தி உள்பட அனைவரும் ஆவலோடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" என்று சொன்னவர், இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதா? என்று அமைச்சர் ராஜாவை பார்த்து கேட்டார். …..1/2.