- 4 Goals in 2018 World Cup.
- 8 Goals in 2022 World Cup.
- 8 Goals in 2026 World Cup.
WORLD CUP KYLIAN MBAPPE IS A BEAST - 20 Goals in 20 matches in World Cup 🤯
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
முதல்வர் விஜய்க்கு எதிரான உதயநிதி பர்பாமன்ஸ் எப்படி இருக்குனா...
Gayle க்கு Dinda பவுலிங் போட்ட மாதிரி இருக்கு.
சின்னப்பசங்க எழுதி தர்றத எடுத்துட்டு போய் முதல்வரை கலாய்க்கிறதுதான் Mass ணு உதயநிதி நினச்சா, தூக்கி சாப்பிட்டு போயிடுவாரு விஜய்.
ஏன்னா TVK க்கு அது Most comfortable zone.
எதுக்கு கதறுறாரு…?
மு. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால், ஏதோ முகலாயர் பரம்பரையில் பிறந்த மாதிரி வம்சாவளியாக ஆட்சி பண்ணிட்டு இருந்தோம்; அது போயிடுச்சுன்னு கதறுறாரா?
கோடி கோடியா கொள்ளை அடிச்சோமே… இனி எப்படி கொள்ளை அடிக்கிறதுன்னு நினைச்சு கதறுறாரா?
சினிமாவை 5 வருடம் கையில வைத்துக்கிட்டு ஆட்டிப் படைத்தோமே… இப்போ சினிமா சுதந்திரமாக இயங்குது என்று சினிமாக்காரர்கள் பேசுறதைக் கேட்டு கதறுறாரா?
கான்ட்ராக்டர்கள் எல்லாம், “தி.மு.க. ஆட்சியில் 30–40% லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது; இப்போதான் நிம்மதியா இருக்கோம்”ன்னு சொன்னதைக் கேட்டு கதறுறாரா?
பள்ளி அங்கீகாரத்துக்கு ₹25 லட்சம் கமிஷன் வாங்கிட்டு இருந்த ஆட்சி போயிடுச்சு; “இப்போதான் நிம்மதியா இருக்கோம்”ன்னு பள்ளி நிர்வாகிகள் சொல்றதைக் கேட்டு கதறுறாரா?
எந்தப் போராட்டமும் இல்லாமல் இந்த நாட்டின் பொறுப்பு உங்ககிட்ட வந்தது. குறைந்தபட்சம் மக்களுக்கு நல்லது செய்ய முடியலன்னாலும் பரவாயில்லை; கெட்டதாவது செய்யக்கூடாதுன்னு நினைச்சிருந்தாலே போதும்.
ஆனா, “நமக்கென்ன பொறுப்பு இருக்கு?“ன்னு கூட உணராம, கொள்ளை, சினிமா மோகம், பொழுதுபோக்கு அரசியல் என்று மக்களைத் துன்புறுத்தினதால்தான், கதற வேண்டிய ஆளு நீங்க.
இப்பவும் சொல்றேன்… ஸ்டாலின் தோற்றதுக்கு காரணம் நீங்கதான்.
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், உங்க கதறல் நிற்காது..
நல்லா கதறுங்க… நாங்க ரசிக்கிறோம்...
Years after sharing screen space together, it was a pleasure to meet Hon'ble Chief Minister Thiru @actorvijay avargal with my family. The warmth, humility, and sincerity that endeared him to so many people remain exactly the same! His passion and vision for the progress of our state are inspiring. Wishing him the very best as he leads Tamil Nadu forward✨
தவெக எல்லாம் ஒரு கட்சி யா சொன்னவங்க மேல இவளோ விமர்சனம்... பெயரை சொல்ல கூச்சப்பட்டவர்களை எந்நேரமும் புலம்பி உங்கள அழ வச்சவர் 🔥🔥 நீங்க வரல உங்கள வரவசர் டா... 🔥
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது..
6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்..
“சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
“பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை..
பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்..
தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்..
“ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார்.
அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்?
மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்..
மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது?
தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்!
ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை!
இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!
தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது..
புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்..
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா?
இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்..
(1/2)