என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
இத்தன வருஷமா வார்த்தைக்கு வார்த்தை லட்சம் பேரை கொன்ற தமிழின துரோகி திமுக, கருணாநிதி குடும்பம்ன்னு சொல்லிட்டு இருந்த இதே வாய்..
இன்னைக்கு தலைவன்னா ஐயா ஸ்டாலின் தானாம் 😭😭
இப்பவாச்சும் புரிஞ்சிக்கோங்க டா இவன் காசுக்கு கூவுற கபோதினு @Saattaidurai 😤
காரில் ஏறும்போது விஜய்க்கு செய்தி வந்துருச்சு உடனடியாக மருத்துமனை போகணும் சொல்லிருக்கார் நிர்வாகிகள் நீங்க போன இன்னும் கூட்டம் கூடும் அவமான படுத்துவங்க நீங்க போங்க நாங்க பாத்துக்குறோம் சொல்லிருக்காங்க 😢
Journalist - Felix
@TVKVijayHQ
எப்படி செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் சரியாக விஜய் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
சன் நியூஸ் எப்படி தேடி கண்டுபிடித்து அவரிடம் மட்டும் பேட்டி எடுத்தது ??
ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தில் இவரிடம் மட்டும் தான் பேட்டி எடுக்க வேண்டும் என்று சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு ஏதாவது கணக்கு இருக்கிறதா ?
பேட்டி எடுப்பதற்கு இந்த ஆளைத் தவிர மற்ற யாரும் மக்களாக தெரியவில்லையா ??
Pakka Narrative.
Action plan executed by DMK.
#DMKFailsTN #DmkFailsAgain #DmkCheatsTN #DMKpaidMafia
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
அசம்பாவிதம் நடந்த இடத்துல, திடீர் என்று தோற்றமளித்து "பொது மக்களாக" உருமாரி சாட்சியமளிக்கும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள். எல்லாம் பக்கா planஓட தான் இறங்கி செய்யுறாங்க. Narrative fixing நடக்குது.
* இரவு நேரங்களில் மாநாடு, பிரச்சாரம் ஆகியவற்றை செய்தால்.. இப்படியான சம்பவம் நடக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்துதான் இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களையும் மாலை ஆறு மணிக்கு முன்பே முடித்துக்கொண்டார். Indoor நிகழ்ச்சிகள் உட்பட.
* வார நாட்களில் பிரச்சாரம் செய்தால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படும். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால்தான் சனி, ஞாயிறுகளில் பிரச்சார தேதிகளை அறிவித்தார்.
* தற்போது கரூரில்..ஒரே ஒருமுறை செய்த இரவுநேர பிரச்சாரம்.. பெரும் துயரில் கொண்டுவந்து நிறுத்தி விட்டது.
* சென்றமுறை... ஒரு ஊரில் பிரச்சாரம் செய்யுமிடத்திற்கு போய்ச்சேர மிகவும் தாமதம் ஆனதால்.. அந்நிகழ்வை ரத்து செய்தார்.
* இம்முறையும் அதேபோல ரத்து செய்துவிட்டு.. வேறொரு நாளில்.. பகல் நேரத்தில் கரூர் பிரச்சாரத்திற்கு வந்திருக்கலாம்.
* ஆனால்.. மீண்டும் பிரச்சாரத்தை ரத்து செய்தால்... காலை முதல் இரவு 7 மணிவரை தன்னைக்காண காத்திருக்கும் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள் என்பதால்.. கரூர் சென்று இரவு 7.20 மணிக்கு பேசியுள்ளார்.
* இத்தனைமுறை அலர்ட் ஆக இருந்த விஜய்... இம்முறை அந்த எச்சரிக்கை உணர்வை மிஸ் செய்து விட்டார்.
* எனது வாகனத்தை பின்தொடர வேண்டாம். கண்ட இடங்களில் ஏறி நிற்க வேண்டாம் என பலமுறை சொல்லியும்.. பல ரசிகர்கள் கேட்கவில்லை. அத்தவறுகளை தொடர்ந்து செய்கிறார்கள்.
* உங்கள் தலைவர் சொல்வதை நீங்களே கேட்காவிட்டால்.. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களும் பொறுப்பு.
* தவெக கூட்டங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் வரவேண்டாம். கைக்குழந்தைகளை அழைத்து வரவேண்டாம். டிவி அல்லது யூட்யூப் நேரலையில் வீட்டிலிருந்து பாருங்கள் என ஒவ்வொரு முறையும் தவெக சார்பில் வேண்டுகோள் விடுத்தும்... அதை பொருட்படுத்தாமல் வருபவர்களை என்ன சொல்வது?
* உங்களுக்கு பிடித்த நடிகரை காணும் ஆவலில்.. பச்சிளம் குழந்தைகளையும் அழைத்து சென்று... அக்குழந்தைகளை பறிகொடுத்தது... உங்கள் தவறில்லையா?