எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே!
அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது.
ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward!
இந்த மண்ணாங்கட்டிக்கு 'மார்டன் சோழன்' பில்டப் ஒன்று தான் குறைச்சல்!
"புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்" என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் செய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், "அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா?
"மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்" என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்_அந்த_மேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை!
அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள்.
உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்தது கழக அரசு! "குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது" என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது.
இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது!
பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது.
ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, "சிங்கப்பெண்" என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய 'சோஃபா மாடல்' கத்துக்குட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது.
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ சரவணனையும், அதற்கு உடந்தையாக இருந்த "மேலிடத்தையும்" விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்!
#யார்_அந்த_மேலிடம்
பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக ஊடகங்களில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. பெயரைச் சொல்கிறார்.
மனுநீதி சோழன் என்று தன்னைச் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் #sofaமாடல் அரசு, அந்த எம்.எல்.ஏ. மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
எடுக்க முற்பட்டால் அவர் தனக்கு மேல் உள்ள மேலிடத்தைக் கைகாட்டுவார் என அச்சமா?
#யார்_அந்த_மேலிடம்
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசே
@CMOTamilnadu இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு!
தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது.இந்நிலையில் கடந்த இருதினங்களில் அதாவது, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!
கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (ராமலட்சுமி) திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகவே தன் சகோதரரால் அப்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் நடந்திருக்கின்றன.
ஒரு சம்பவம் நடந்து முடிவதற்குள் மீண்டுமொரு துயரம் நிகழ்வது தொடர்கதையாக நீடிப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இளம்பெண் அபிசெல்வி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை எனத் தெரியவந்துள்ளது. சக தோழியின் அண்ணனான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற தலித் இளைஞரைக் காதலித்ததற்காக இப்படுகொலையைச் செய்த அப்பெண்ணின் அண்ணன் சிவஞானம், உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. இவ்விரு சம்பவங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் தங்கள் வீட்டுப் பெண் தலித் சமூக இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக இரத்தச் சொந்தங்களே படுகொலை செய்யும் அளவிற்குத் துணிந்திருப்பது அபாயகரமான செயலாகும். இதன் பின்னணியில் யார் யார் இருந்து இதுபோன்ற சமூகவிரோதச் செயலை ஊக்குவிகிறார்கள் என்பதைக் காவல்துறையும் அரசும் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
தொடர்ந்து தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய வன்முறைகளும் ஆணவக்கொலைகளும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தி சட்ட ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. மேற்கண்ட இரு சாதி ஆணவக்கொலைகளுக்கும், சாதிய வன்முறைகளுக்கும் மூளையாக இருந்து செயல்பட்ட சாதியவாதிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதோடு தாமதிக்காமல் ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
காவல்துறையும் கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக கருதும்போக்கு நீடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே வந்து மீண்டும் அதே செயலைத்தான் செய்கிறார்கள் என்கிறபோது இயல்பாகவே சமூகப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இப்போக்கு சாதிய வன்முறையையும் ஆணவக்கொலையையும் ஊக்குவிப்பதாகவே அமையும்.
“தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்கச் சிறப்பு கண்காணிப்பு தீவிரம்; கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தென்மண்டல ஐஜி குறிப்பிட்டுள்ளார். இது வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. ஏனெனில், இதற்கு முன்னதாக இதுபோன்று நிறைய அறிக்கைகளும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட ஒருநபர் ஆணையங்களும் பல்வேறு வழிமுறைகளைக் கொடுத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பணிகளில் பணியமர்த்தப்படுகின்ற காவலர்களும் காவல் அதிகாரிகளும் ஓரே சமூகப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, காலந்தாழ்த்தாமல் ஆணவப் படுகொலைகளுக்கான தனிச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
@Neelam_Culture
தேர்தல் பிரச்சாரத்துல என்ன சொன்ன?
10 லட்சம் கோடி கடன் வச்சு தமிழ்நாட்ட நாசம் பண்ணிட்டாங்கனு சொன்னேன்.
டெல்லில என்ன சொன்ன?
இந்தியாலயே ரெண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்னேன்.