Stop humiliating the leader elected by the people. For goodness’ sake, he is the Chief Minister of Tamil Nadu. It is surprising how casually you suggest that he should personally apologize over a transfer decision.
This government will be judged by its actions, and many people believe they are seeing meaningful corrective measures on the ground, as reflected in the experiences they continue to share. The Chief Minister is fully capable of deciding what should and should not be done. He is not anyone’s puppet.
I also do not recall seeing the same level of criticism when Tamil Nadu faced widespread allegations of corruption under the previous government. @CMOTamilnadu
பக்ரீத் திருநாளுக்கு முதல் நாள், மாடுகளை பலியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நமது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடு வழக்கு நேற்று (13.07.26) நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விலங்குகளை பலியிடவும் அப்பணியை ஒழுங்குபடுத்துவதற்கும், மேலும் விலங்குகளை பாதுகாப்பதற்கும் மாநில அரசால் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் தடை உள்ளதாக தமிழ்நாடு அரசு வாதாடியது.
இவ்வாதத்தை ஏற்று, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதே அமர்வின் கீழ், நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவரக்கோரி நேற்று (13.07.26) வந்த வழக்கை விசாரிக்க மறுத்து, சட்டத்துக்கு உட்பட்டு வேறு வழிகளில் இதற்கு தீர்வு காணுமாறும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத நம்பிக்கைக்குள்ளாகும் இம்மாதிரியான செயல்பாடுகளில் மதவெறியூட்டப்படும் தீர்ப்புகளை திருத்தி எழுத வைத்து, மதச்சார்பின்மையை காக்கும் அரசாக மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்படுவது பாராட்டுக்குரியது.
- வன்னி அரசு
சமூகநீதித் துறை அமைச்சர்
தமிழ்நாடு
@CMOTamilnadu
80 yıl boyunca her yıl 120 gün ve günde 24 saat 12.000 btu bir klimayı çalıştırırsanız ömrünüz boyunca doğaya yaptığınız co2 salınımı 100 ton olacaktır.
bir süperyat haftada 109 ton
bir özel jet yılda 810 ton
co2 salınımı yapar.
yani ömrünüz boyunca yazları terleyerek geçirirken bir milyardar sadece bir haftada sizin ömrünüz boyunca kaçındığınız zararı doğaya verebiliyor.
Deeply saddened and shocked by the passing of K. Bhagyaraj sir.
It feels especially unreal because I had the opportunity to meet him recently at Khushbu’s daughter’s wedding and spend some time with him.
Bhagyaraj sir was a creative genius whose contributions to Indian cinema go far beyond what many people know. He was the original creator behind stories that went on to become landmark Hindi films and career-defining milestones for so many of us.
Woh Saat Din, adapted from his work, became one of the most important films of my career. Mohabbat, with its story, screenplay and dialogues by Bhagyaraj sir, not only gave us a memorable film but also helped launch the journey of Indra Kumar and Ashok Thakeria as producers through Maruti International.
Later, Beta, another adaptation of his brilliant writing, became a blockbuster and remains one of the defining films of its era. Boney and I had acquired the rights and passed them on to Indra Kumar and Ashok Thakeria during a difficult phase in their journey. The film went on to become a massive success, with all of us receiving tremendous recognition.
Another remarkable example of Bhagyaraj sir’s brilliance was Mujhse Shaadi Karogi. Directed by David Dhawan, produced by Sajid Nadiadwala, and starring Salman Khan, Akshay Kumar and Priyanka Chopra, the film’s story and screenplay were by Bhagyaraj sir and adapted into Hindi by Anees Bazmee. The film became a major success and marked another important milestone in Akshay Kumar’s career.
The seeds of all these successes were planted by Bhagyaraj sir. We adapted his stories for Hindi audiences, but the true creator was always him. His writing touched countless lives and careers, mine included. He helped shape the journeys of actors, filmmakers and producers across generations, often without receiving the recognition he truly deserved.
I will always remain grateful for what he contributed to my career and to Indian cinema as a whole. His legacy will live on through the stories he created and the countless people he inspired.
My heartfelt condolences to his family, friends and loved ones. He will be deeply missed.
Rest in peace, Bhagyaraj sir. 🙏
When was the last time millions streamed a State Assembly like a World Cup final? Watching it with such rapt attention!! If that’s happening now, we’re not a failing state, we’re a waking state. This is how you get the next generation to stop scrolling politics and start practicing politics.
The truth and the only truth is one man @TVKVijayHQ
Is making this change!!
I wish him to bring this change onto his governance too, which he has started!! Long live democracy!!
@TVKHQITWingOffl
#TamilPolitics #TamilNaduCM #TamilNadu
@actorvijay@TVKPartyHQ
@TANGEDCO_Offcl It appears that the EB connection box next to my house has burst, causing a power outage in the nearby street and surrounding houses.
Location: Panchali Amman Kovil Street, Arumbakkam
Landmark: Next to Pushpa Dental Clinic
Kindly let me know how I can assist you in resolving this issue at the earliest. @CTR_Nirmalkumar
What is this constant obsession with airports? Just last week, the TVK government ensured bus connectivity for three villages that had been without proper service until June 2026. Across the state, long pending civic and corporation complaints are being addressed much faster than before.
I agree that Tamil Nadu needs more airports and better infrastructure to attract future investments. No one is arguing against that. But should airports be our only measure of development?
Even in Chennai, we still struggle with basic civic issues. Can people confidently drink water from public facilities maintained by the government without a second thought?
People need better roads, efficient waste management, and accessible government services before endless discussions about investments. Corruption, bribery, and fraudulent practices have become deeply embedded across multiple departments and schemes. Our foremost responsibility is to eliminate them, and that process is underway.
In just 30 days, numerous irregularities have already come to light, and corrective action is being taken. Cleaning up the system is not an overnight task, but the work has started.
The cover story in today’s The Hindu itself highlights that the Mazagon Dock investment was pushed away during the previous DMK government’s tenure. Similar facts are beginning to emerge in several other cases as well.
Give it some time.
#TVK #investment #tamilnadu #chennai #TVKVIjay #chennaiairport
இது கனவா இல்ல நிஜமா?
இன்று காலை 9 மணிக்கு இரண்டு மனுக்கள் சாலை சரி இல்லையென்று CM Cell இல் பதிவிட்டேன். 2 மணிக்கு தாம்பரம் Decisional Engineer அழைத்து விவரம் கேட்டார். 5 மணி அளவில் பதில் மனு காலக்கெடுவுடன் அளிக்கபட்டு உள்ளது. (1)
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna#tvk
I reported a bribe I paid through Makkal Saatchi https://t.co/pR80I4pX1U yesterday (06.06.2026).
Today, the Deputy Commissioner personally called me, took full details, and assured me of appropriate action. Two police officers also visited my home - one from the DC office and another from Intelligence and enquired in detail.
This level of response within 24 hours is impressive.
Thanks to Raavanan (@raavanamavan7) & TVK for this impactful initiative. Special thanks to Mr. Vijayakumar IPS (@vijaypnpa_ips) for his attention to the matter.
I strongly urge everyone affected by corruption to use this platform and report bribes. Change is possible when we speak up.
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
He is the creator, director, and actor of his films. He knows whom to credit and whom not to. A creator cannot simply credit another individual for creative work without a reason. If he has chosen to do so, there must have been some form of influence from Vijay on the project, whether direct or indirect. Only he truly knows the reason behind that acknowledgment.
Have we really reached a point where people are telling creators whom they should or should not credit? Why can’t we just focus on discussing the film itself, its reviews, and its box office performance?
Moreover, Suriya and Vijay share a warm friendship and family bond. Tweets like these only create unnecessary drama and controversy.
@RJ_Balaji #karuppu #Cmotamilnadu #Vijay
This is very important and timely news to hear at this critical juncture.
If this project is dropped, Tamil Nadu, especially Chennai, will be saved from a serious disaster.
Already, many parts of Chennai are becoming increasingly unbearable, raising serious questions about the city’s future liveability.
The State Planning Commission report has also clearly highlighted that large parts of the Sriperumbudur region are witnessing a sharp temperature rise.
Beyond the environmental impact, the Parandur project would have also damaged Tamil Nadu’s decentralised growth model, which has been one of the state’s biggest strengths.
After Bengaluru airport was developed, growth in other parts of Karnataka largely stagnated, with no major activity spreading across the state. A similar pattern can be seen in Hyderabad as well.
Those supporting this disastrous project are indirectly pushing the narrative that Chennai is a “disaster-prone city.” More importantly, such a move risks weakening the idea of balanced, all-round development across Tamil Nadu.
For those of you who want to sit in cozy chair in an air-conditioned room and do only "X"ing, please read through the links to understand why Paranthur is Not needed and against the Growth Model of Tamil Nadu".
https://t.co/w9RHNxeSdp
https://t.co/l9QUSNnIwH
As @poovulagu we are ready to debate on any of the above.
Our best wishes and sincere thanks to @CMOTamilnadu and @TVKVijayHQ for taking steps to drop this project.
The people of the 13 affected villages join us in appreciating and thanking you for this bold and much-needed decision.
@TVKHQITWingOffl@CTR_Nirmalkumar@Keerthana4VNR@BussyAnand@imrajmohan@TIDCO_1965
#sayNo2Paranthur @TVK #Climate
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும்,
வணக்கம்.
இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர்.
நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது.
நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று.
தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம்.
இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை.
பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார்.
அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.
நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு.
அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை.
இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?
இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.
சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.
இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல?
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.
மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம்.
நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.
நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.
நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க.
நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம்.
இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம்.
மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான்.
மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.