யப்பா தவெக மிகப்பெரிய கார்ப்பரேட்
கிரிமினல்கள் கட்சி என்பது தெளிவா
தெரியுது..
இவனுக இதுவரை நாம் பார்த்த
அரசியல் கட்சிகளை விட பேராபத்தான
கட்சிதான்..
இந்திய மக்களின் சென்டிமென்டல் பலவீனத்தைப் பயன்படுத்தி மூளை மழுங்கச் செய்து பொய்கள் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்கிறார்கள்..
இது புதுசாலா இருக்கு 🫣
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
@CMOTamilnadu@Tnpcbofficial@TPRDtCollector@Chief_Secy_TN@moefcc@byadavbjp@BussyAnand
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது.
"குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது.
எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
நன்றி மறக்காத பரந்தூர் மக்கள்!
உண்மையாக மக்களுக்காக போராடியவர்களை அந்த மண்ணின் மைந்தர்கள் மறக்கவில்லை என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...
❤️❤️❤️❤️❤️
@Seeman4TN போராளி 🔥🔥🔥
@_ITWingNTK
அன்பிற்கினிய #நாம்தமிழர் சொந்தங்களுக்கு...
“ஒரு இடத்தில்கூட ஜெயிக்கவில்லை” — இந்த ஒற்றை விமர்சனத்தை வைத்துக்கொண்டு, இத்தனை ஆண்டுகளாக நாம் செய்த ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளையும், நாம் முன்வைத்த கொள்கைகளையும் மலிவாகப் பேசும் சமூக வலைதளப் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் நாம் பதிலளிக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் கிடையாது.
அவர்களிடம் சென்று சண்டையிடுவதோ, நாம் செய்தவற்றைப் பட்டியலிட்டுப் புரிய வைப்பதோ, நமது கொள்கையை மீண்டும் மீண்டும் விளக்கிக் கொண்டிருப்பதோ தேவையற்றது.
சவுக்கு சங்கரும், சவுக்கு மீடியாவில் இருப்பவர்களும் எத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தி நம்மை விமர்சித்தாலும், காயப்படுத்தினாலும், அந்த மலிவான வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காமல் நமது பயணத்தை நாம் தொடர வேண்டும்.
சவுக்கு சங்கரின் காணொளிகளை ஒரு சினிமாவைப் பார்ப்பதுபோலப் பாருங்கள். 20 நிமிடம், 30 நிமிடம் — சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கும்; சில ஒருதலைப்பட்சமான கருத்துகள் இருக்கும்; சில அவரது சொந்த அனுமானங்களாக இருக்கும். நகைச்சுவையாகவும் ஆவேசமாகவும் பேசுவார்.
அவ்வளவுதான். படம் முடிந்த உடன் சுமாராக இருந்தாலும் பரவில்லை என்று சொல்லி வெளியே போவதில்லையா.. அதே போல் அவரின் காணொளி முடிந்தவுடன் அதையும் அங்கேயே விட்டுவிட்டு நகர்ந்துவிடுங்கள்.
ஒரு மோசமான சினிமாவைக்கூட பாப்கார்னுடன் மூன்று மணி நேரம் சுவாரஸ்யமாகப் பார்த்துவிட்டு வெளியே வந்து, “படம் நல்லாவே இல்ல மச்சா!” என்று சொல்லிவிட்டுப் போகிறோம் அல்லவா? அதே அளவில்தான் இவர்களது காணொளிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் காலம் மாறும்.
இன்று நம்மை விமர்சிக்கும் அதே குரல், நாளை அரசியல் சூழல் மாறும்போது நமக்குச் சாதகமாகவும் பேசலாம். ஏனென்றால் இவர்களை போல வாயை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் கூடம் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
சீமான் அண்ணன் நமக்கு காட்டியிருக்கும் பாதை குறுகிய பாதையல்ல. அது நீண்ட நெடிய அரசியல் பயணம். இலக்கு வெகுதூரத்தில் இருக்கலாம். ஆனால் அதற்காக ஒவ்வொரு கல்லிடமும் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தால் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாது.
காலச்சக்கரம் ஒரே இடத்தில் நிற்பதில்லை.
மேலே இருப்பது கீழே வரும்; கீழே இருப்பது மேலே செல்லும்.
அதுதான் வரலாறு.
இன்றைய வரலாற்றில் நமது பெயர் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நாளை எழுதப்படப்போகும் வரலாற்றில் நமது பெயர் இருக்க வேண்டும். அதற்கான வேலையை இன்றில் இருந்து செய்வோம், செய்துகொண்டே இருப்போம்.
தேவையற்ற சண்டைகளைப் புறக்கணிப்போம்.
கொள்கையைப் பேசுவோம்.
களத்தில் நிற்போம்.
பயணத்தைத் தொடர்வோம்.
ஒருநாள் இந்தத் தேசத்தில் நமது குரலும் வலிமையாக ஒலிக்கும்.
நாம் தமிழர்! @Seeman4TN@_ITWingNTK