ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மவுண்ட் போலீசார் வழக்கு பதிவு.
கணவனை இழந்த பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு, வீட்டில் அவர் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு இருதினங்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் சென்ற ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண் கூச்சலிட்டதும் த.வெ.க நிர்வாகி வேம்புலி தப்பிச் சென்றார். பின்னர் மவுண்ட் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் த.வெ.க நிர்வாகி வேம்புலி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக நிர்வாகிகளிடம் இருந்து தமிழ்ப்பெண்களை பாதுகாக்கத்தான் சிங்கப்பெண் படையா ?
திருவைகுண்டம் தவெகவைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகளை கேரளாவிலுள்ள தனது பங்களாவில் ஒளிய வைத்து காப்பாற்ற முயற்சித்தது தவெக MLA வி.ஜி. சரவணன்.
தன்னிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்டப் பெண்ணிடம், "இதையெல்லாம் பெரிது படுத்தாதே" எனக் கூறியதும், மிரட்டல் விடுத்ததும் சரவணன்தான்.
கட்சிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த MLA சரவணன் மீது முதல்வர் விஜய் அவர்கள் கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுத்த நடவடிக்கை என்ன?
சரவணனைக் கட்சியைவிட்டு நீக்காது,
பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப்பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, இந்திய ஒன்றிய அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNMOA) மாநிலம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாப்பதில் அன்றைய அதிமுக அரசு காட்டிய அலட்சியம் காரணமாக, அரசு மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் (Incentive Marks) முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், அது அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான வாய்ப்பை பெற்றுத்தரவில்லை.
அதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு (MCI) எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மருத்துவர் பெருமக்கள் இழந்த தங்கள் உரிமையை மீண்டும் பெற்று வந்தனர்.
ஆனால் 2025 கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில் 151 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் கடந்த 29.5.26 அன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் தங்கள் படிப்பை முடித்த பின் ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவ கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் தற்போது சாதித்துள்ளது. ‘நீட்’ மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிப்பதென்பது மாநில உரிமையை பறிக்கும் அப்பட்டமான சூழ்ச்சியாகும்.
தமிழ்நாடு அரசு தன் வசம் உள்ள அரசு மருத்துவர்களுக்கான உயர் மருத்துவ இடங்களை தானே நிரப்பலாம் என்று உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியிருந்த நிலையிலும், ஒன்றிய அரசு இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு மூலம் மாநில இடங்களை கைப்பற்ற முயல்வது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் கொடுஞ்செயலாகும்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ்நாட்டின் பொதுசுகாதார கட்டமைப்பையும், ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் உயர் மருத்துவம் பெறும் உரிமையையும் நேரடியாக பாதிக்கும். மேகதாது அணைபோல, அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயிலும் விவகாரத்திலும் தவெக அரசு மெத்தனமாக இருப்பது தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்க்கும் சிறிதும் பொறுப்பற்றச் செயலாகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தியது முதலாக அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் நீட் தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது. எனவே நீட் தேர்வு மதிபெண்ணை அடிப்படையாக கொண்டு உயர் மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பை பறிப்பது அரசு மருத்துவப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
ஆகவே, நம்முடைய அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயில, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்படும் 50% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி பெரியாயிபாளையம் கிராமத்தில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப்பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..
TVK Member | போக்சோ வழக்கில் தவெக பிரமுகர் கைது
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தை சேர்ந்த தவெக பிரமுகர் கண்ணன் போக்சோ வழக்கில் கைது
10-ம் வகுப்பு மாணவியின் வீட்டிற்குள் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து பா*யல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
POCSO Act | Madurai | TVK
#POCSOAct | #Madurai | #TVK | #TamilNews | #NewsTamil24x7
கடந்த 10 நாளா தொடர்ந்து கொலை, பாலியல் கொடுமைகள் சட்ட ஒழுங்கு சீற்கேடு செய்திகள் வர வர, பல தவெக ஐடிக்கள் ஆக்டிவ்வா இல்ல கவனிச்சீங்களா? எல்லோரும் சொல்லிவெச்ச மாதிரி சைலண்ட் மோட்ல இருக்காங்க.
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த விவசாயிகளான சேட்டு – கலைச்செல்வி இணையரின் அன்புமகள் சீதாலட்சுமி அரசு மருத்துவமனையின் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. செவிலியர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துவந்த அன்புமகளை இழந்து வாடும் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புமகள் சீதாலட்சுமி மூக்கில் வளர்ந்த சதையை அகற்றுவதற்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்து மாணவி உயிரிழக்க காரணமாகியுள்ள மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய, தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அன்புமகள் சீதாலட்சுமி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
"தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு." - சீமான்
#Seeman | #CMVijay | #TNGovt | #Coimbatore | #Sulu