முதல் போட்டியில் உள்ள நபர் உலகக் கோப்பை வாங்கினார் என்பது எவ்வளவு உண்மையோ,
அதே அளவிற்கு தான் இரண்டாவது போட்டோவில் உள்ளவர் எடப்பாடியார் அண்ணன் மகள் என்பதும்!
#யார்_அந்த_அண்ணன் ?
ஒரு அமைச்சர் முன்னின்று இப்படி ஒரு பொய்யை பரப்பலாமா?
This is also very wrong bro….
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#மக்களுக்காக_அஇஅதிமுக
#களத்தில்_அஇஅதிமுக
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள் நடந்துவரும் நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்து சிற்பங்கள் பொய்க்கால் குதிரை அரசால் மிக மோசமாக கையாளப்பட்டு, சேதமடைந்து வருவதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை எதுவுமே தெரியாமல், வெற்றுக் கவர்ச்சியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் Immature அரசு, தமிழரின் ஒப்பில்லா வரலாற்றின் அடையாளங்களாக விளங்கும் சிற்பங்களை கட்டுமானப் பணி Wastage-களுக்கு இடையே ஏதோ குப்பைகளை போடுவது போல வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழரின் வரலாற்றை உலகறியச் செய்ய கீழடி அகழாய்வை மூன்று கட்டங்களாக நடத்தி அருங்காட்சியகம் அமைத்த பெருமைக்குரிய அரசு @AIADMKOfficial அரசு.
“தமிழ்நாட்டின் கோட்டைகள், வரலாற்றுச் சின்னங்கள் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும்” என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இருக்கின்ற வரலாற்றுச் சின்னங்களை முதலில் நாசப் படுத்தாமல் பாதுகாக்கட்டும்!
@ASIGoI-ம் இதில் உடனடியாக தலையிட்டு, வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
#SaveTNArtifacts
(Attachment Media Credits: @thirdmainroad)
இன்று (12.06.2026) நமது திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வேடசந்தூர் கிழக்கு மற்றும் வேடசந்தூர் மேற்கு, வேடசந்தூர் மற்றும் எரியோடு பேரூர் கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தினை வேடசந்தூர் சினேகா மஹாலில் நடத்தினோம்.
ஆலோசனை கூட்டத்தில், அடுத்து வரும் தேர்தல்களில் நமது கழகத்தை வெற்றி பெற செய்யவேண்டிய பணிகள் குறித்தும், சிலரின் கவர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காமல் - கழகத்தினை வலுபடுத்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி,
இரு பெரும் புண்ணிய ஆத்மாக்களால் வழி நடத்தப்படும் நம் @AIADMKOfficial மீண்டும் புத்துணர்வு பெறும், கழகப் பொதுச் செயலாளர், புரட்சி தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் சீரிய தலைமையில் வெற்றி நடை போடும் என்பதை கூறி கழக நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தினோம்.
#AIADMK
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அஇஅதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
@AIADMKOfficial
இன்றிலிருந்து 13 ஆண்டுகளுக்கு முன்னால், 12/6/13 அன்று, புரட்சித் தலைவி அம்மாவை சந்தித்து, அஇஅதிமுக என்ற புனித இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் ! இன்று மீண்டும் கழகத்திற்கு புத்துயிர் பா்ய்ச்சி வரும் புரட்சித் தமிழரின் சீரிய முயற்சிக்கு உறுதுணையாக நிற்க உறுதி ஏற்கிறேன் !
Warm birthday greetings to Hon’ble Union Minister for Commerce & Industry of India, Thiru @PiyushGoyal Avl,
Your dedicated efforts towards strengthening India’s economy, promoting industrial growth, and advancing the vision of a self-reliant nation continue to contribute significantly to the country’s progress.
Wishing you good health, happiness, and many more years of successful public service to the nation.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில்
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவமே நல்லாட்சிக்கான அடையாளம் என்பதை இனியாவது உணர்ந்து ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@polimernews@NewsTamilTV24x7@TamilJanamNews@CMOTamilnadu@TVKVijayHQ
சமூக வலைத்தளங்களில் அரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூர் திரு மாரிதாஸ் அவர்களை கைது செய்திருக்கும் தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகம் பொதுமக்களுக்கு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்பாடுகளை இத்துடன் நிறுத்திவிட்டு, விமர்சனங்களை எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@MaridhasAnswers@TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்