தவெக ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புணர்வோடு எந்தப் பதிலும் கூறவில்லை முதல்வர் விஜய்.
தனக்கு வாக்குச் செலுத்திய கூட்டத்தைத் திருப்திப்படுத்த எந்தத் தோரணையில் பேச வேண்டுமோ, எந்த உடல்மொழியைப் பயன்படுத்த வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்.
அதனைப் பின்னணி பாடலோடும், இசையோடும் போட்டு பரப்ப Galatta, Behinwoods யூடியூப் சேனல்களும், News Tamil, Polimer காட்சி ஊடகங்களும் இருக்கின்றன. அவை அதனைச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன.
பொதுச்சமூகத்துக்கும், அறிவுச் சமூகத்துக்கும் விஜய் எப்போதும் பதில் சொல்வதில்லை அல்லது விஜய்க்கான பதிலை எழுதிக் கொடுப்பவர், எழுதுவதில்லை.
தனக்கு வாக்குச் செலுத்தியவர்களின் எதிர்பார்ப்பின் தேவையை அறிந்து, அவர்களின் மனநிலை அறிந்தே தோரணை, உடல்மொழி, வசனங்கள், ஏற்ற இறக்கத் தொனி, நையாண்டிப் பார்வை என ஜனரஞ்சகமாகக் கொடுத்திருக்கிறார் விஜய்.
மொத்தத்தில், சட்டசபை சர்க்கஸ் கூடாரம் போல ஆகியிருக்கிறது.
அரசுப்பள்ளிகள குழந்தைகளை விஜய்க்கு "வாழ்க" போட வைக்கிற அவலங்கள் அச்சத்தை தருது.
அரசுப்பள்ளிகளில் கட்டுப்பாடுகள் குறித்து சுற்றறிக்கையை எல்லா அரசுப்பள்ளிகளுக்கும் உடனடியாக அனுப்புங்க. இல்லைனா இது பெரிய ஆபத்தாக அமையும்.
அதே திமுக பாணி அரசு வேண்டாம்,
மாற்றுங்க னா @imrajmohan
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...