The next chapter... #SuriyaXHombale
He built it.
Frame by frame. Film by film. Fight by fight.
Roles that bled truth.
Characters that carried the weight of real lives.
A journey defined by courage, conviction, and craft.
Three decades of truth on screen.
Countless hearts touched beyond it.
Now, the most fearless actor of his generation steps onto his grandest stage yet.
@HombaleFilms proudly welcomes THE ONE & only, @Suriya_offl.
@tjgnan@VKiragandur@ChaluveG@SaiAbhyankkar@11Lohar@srkathiir@philoedit
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
#BhagyaRaj
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
1000 தனியார் பள்ளிகளுக்கு NOC - பின்னணி என்ன?
(Time இருந்தா படிங்க)
2006-11 திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்தது
மெட்ரிக்குலேசன் உட்பட அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்த பின், தனித்து அடையாளம் வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கி சென்றது
2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்து அந்த முயற்சி தோல்வியில் முடியவும், அரசின் உதவியுடன் பல பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாறியது. எந்த அளவு என்றால் அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்காக மாறியது.
2021 திமுக ஆட்சிக்கு வரும் போது ஏறக்குறைய 1800+ சிபிஎஸ்இ பள்ளிகளும், 13000+ தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இருந்தது. இந்த காலத்தில் தான் 2006-11 ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது.
மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற NOC கொடுட்பதை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை நடத்தியதை குறைத்ததுடன், சிபிஎஸ்இ பள்ளியாக மாறி இதை தொடர நினைத்தது நடக்காமல் போனது
உடனே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தேவையான NOC கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது
கடந்த ஆண்டு 2025 Feb 20 ஆம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ இனி பள்ளிகள் தொடங்க NOC இல்லாமலும் Apply செய்யலாம். அவர்கள் நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி 30 நாளில் அனுமதி வழங்க வேண்டும். தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் மாநில அரசு பதில் அளிக்கவில்லை எனில் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை மாற்றியது
இருப்பினும் தனியார் பள்ளிகள் ஆளுமை மிக்க அரசை பகைத்துக் கொண்டு சிபிஎஸ்இ பள்ளியாக மாற முயற்சி செய்யவில்லை.
திமுக அரசு NOC வழங்காமல் இருந்த காரணம், சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் National Education Policy படி செயல்படும். தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் இதுவரை அதை நிறுத்தி வைத்தது
ஆனால் இப்போதுள்ள தவெக அரசு மறைமுக கூட்டணியாக பாஜக மனம் நோகாமல் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற NOC கொடுத்துள்ளது
இதன் மூலம் இனி அவர்களுக்கு என்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றிய அரசு வசம் சென்று விடும்.
இதை மறைக்க தான் லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற அன்னா ஹசாரே வழி ஊழல் ஒழிப்பு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
இந்த ஆட்சி முழுமையான 5 ஆண்டுகளை முடிக்கும் போது 13000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காத்திருப்போம்.!
மாற்றம் 👌🤦
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
By @vithurs_, for the worldwide family of our @Suriya_Offl na. One man made millions of us fall in love with cinema. This is where we celebrate him, every day ♥️