சமூகவலைதளங்களில் (திமுகவின் ஐ.டி விங் அல்ல) திமுகவை ஆதரித்து எழுதும் அத்தனைபேரையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்…
அவர்களில் பெரும்பாலோனோர் அனைவருமே நல்லதொரு வேலையில் பிசியாக இருப்பவர்களே… அவர்களில் பெரும்பாலானோர் அனைவரையும் மற்றவர்களால் நினைத்த மாத்திரத்தில் சந்திக்க முடியாது- காரணம், அவர்கள் மிகவும் பிசியான வாழ்க்கை வாழ்பவர்கள்.
அவர்களில் பலரும் லட்சங்களில் சம்பளம் பெறுபவர்கள் அல்லது தொழிலதிபர்கள், அல்லது தொழில் முனைவோர், அல்லது பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகளைப் பற்றிய புரிதல் உள்ளவர்கள் அல்லது குறைந்தபட்சம் சமூக நல்லிணக்கத்தை விரும்புபவர்களாகவேதான் இருப்பார்கள். இன்னும் ஒருபடி மேலே சொல்வதாயின் அவர்கள் பொருளாதார தன்னிறைவு கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
திமுக ஆட்சியில் இருக்கவேண்டும் என்று போராடும் அவர்களுக்கும் திமுக தலைமைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான தொடர்புகள் எதுவுமே இருக்காது. அவர்களில் பலரும் அவரவர் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்களைக்கூட நேரில் கண்டிருக்க மாட்டார்கள். திமுக செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களின் தேவையற்றவர்கள்தான் இவர்கள். திமுகவால் பத்துப்பைசா கூட பலனடைந்திருக்க மாட்டார்கள். ஆனால் கட்சியின் பொருட்டு பல நண்பர்களையும் இழந்திருப்பார்கள். ஆனாலும் திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென்று களமாடுவார்கள். சந்தர்ப்பங்களில் கைக்காசை செலவு செய்யவும் தயங்காதவர்கள். எதிரிகளைக்கூட வசைச்சொல் சொல்லாதவர்கள். திமுக தலைமை செய்வது தவறெனத் தெரிந்தால் கொஞ்சம்கூட கவலைப்படாமல் திமுக தலைவரையே பந்தாடுவார்கள். இவர்களில் பலருக்கும் திமுகவின் உறுப்பினர் அட்டைகூட இருக்காது. இந்தக் கூட்டத்தைக் கட்சியைவிட்டு நீக்கும் அதிகாரம் அதன் தலைவருக்குகூட இருக்காது.
அதீத மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் ஊழல் மற்றும் லஞ்சங்களை அறவே ஒழிக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். பல்வேறு ஜாதியாகப் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை எல்லாம் திமுகவாள் கூட ஒரே அலவையால் அளக்க முடியாது என்பதும் தெரியும். இன்னும் என்னென்ன குற்றங்களை எல்லாம் எதிர்க்கட்சிகள் திமுகமீது சுமத்துகின்றனோ அவற்றில் உள்ள உண்மை எத்தனை? பொய் எத்தனை என்பதையும் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருப்பார்கள். அந்தக்கூட்டத்திற்குத் தெரியும் திமுகவின் இருப்பு தமிழ்நாட்டிற்கு எத்தனை முக்கியமென்று…
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக மட்டும் தினந்தோறும் சில பல மணித்துளிகளை ஒதுக்கி எதிரிகளின் கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அவர்கள்தான் திமுகவின் கொள்கை வாரிசுகள்.
இதெல்லாம் கொள்கைகளே இல்லாதவர்களுக்கு எப்படிப் புரியும்?
#WATCH | “கோடி கோடியாக கொண்டு வந்து கொடுத்து அமைச்சர் பதவி தரேன் கையெழுத்து போடுங்கன்னு சொன்னாங்க”
கட்சி கூட்டத்தில் ஓபனாக பேசிய IUML எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா
#SunNews | #IUML | #Thiruvannamalai | #TVK
#WATCH | சென்னை பெசன்ட் நகரில் தவெக பிரமுகர் வெட்டிப் படுகொலை
பேரவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நாளை முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்கவுள்ள நிலையில், தவெக பிரமுகர் தலைநகரிலேயே ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
#SunNews | #TVK | #Chennai | #சட்டம்ஒழுங்கு