அர்ஜண்டினா vs ஸ்பெயின் :
மெஸ்ஸிக்காக பலரும் அர்ஜண்டினா ஆதாரித்ததை காண முடிந்தது ஆனால் மொத்த உலகமும் அர்ஜண்டினா தோல்வியை கொண்டாடி வருகிறது... மொத்த உலக கோப்பையையும் பார்த்து வந்த யாரும் அர்ஜண்டினா அணியை திட்டி தீர்க்காமல் இருக்க மாட்டார்கள்.
அர்ஜண்டினா அரையிறுதிக்கு வருவதற்கு முன்பு ஒரு வழுவான அணி எதையும் சந்திக்கவே இல்லை.
32 அணி சுற்று , 16 அணிகள் சுற்று , காலிறுதி சுற்றி.. இந்த மூன்றில் அர்ஜண்டினா சந்தித்த அணிகளையும் ஸ்பெயின் சந்தித்த அணிகளை ஒப்பிடுங்கள்..
67ஆம் இடத்தில் இருக்கும் cabo verde , 29 ஆம் இடத்தில் இருக்கும் Egypt , 19ஆம் இடத்தில் இருக்கும் Switzerland அணி வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது அர்ஜண்டினா. ஆனால்
9 ஆம் இடத்தில் இருக்கும் belgium , 5 ஆம் இடத்தில் இருக்கும் portugal, 13 ஆம் இடத்தில் இருக்கும் croatia அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது ஸ்பெயின்.
(அர்ஜண்டினா அணிக்கு வசதியாக referee செயல்படுகிறார்கள் அதற்கு காரணம் FIFA அமைப்பு என்ற குற்றச்சட்டு மட்டும் அல்ல ; மொத்த அட்டவணையில் அர்ஜெண்டினா எளிதாக அரை இறுதி வருவதற்கு தகுந்தது போல் வடிவமைத்துள்ளார்கள் என்று குற்றச்சட்டிலும் உண்மை இருந்தது.)
அர்ஜண்டினா என்னவோ திடீர் என்று தோல்வி எதிர்பாராமல் அடைந்துவிட்டது போல் சிலர் பதிவிடுவது வேடிக்கையாகள் உள்ளது.. மொத்த போட்டியில் 70% ஆட்டத்தை தன் முழு கட்டிப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் , சுமார் 800க்கும் மேல் passes 90% தவறே இல்லாமல் செய்தது.. அதில் பாதி கூட அர்ஜண்டினா செய்யவில்லை. கோலுக்கு 20 shots முயற்சித்து அதில் 11 shots on target கட்சிதமாக அடித்தனர் ஸ்பெயின்.. ஆனால் அர்ஜண்டினா 3 shots தான் அதுவும் target இல்லை. இதுக்கு பெயர் திடீர் வீழ்ச்சியா? அந்த அணி அவ்வளவு தான் தூக்கி முழுங்கியது ஸ்பெயின்.
இதில் lamine yamal , Pau Cubarsí போன்ற ஸ்பெயின் வீரர்கள் வெறும் 19 வயது இளைஞர்கள். அவர்கள் காட்டிய அந்த discipline 10% கூட மொத்த அர்ஜண்டினா இந்த உலக கோப்பையின் எந்த போட்டிலும் காட்டவில்லை.. சும்மா WWE போல் அடிப்படி தள்ளி விடுவது காலில் மிதிப்பது ஆபத்தான வகையில் தலையில் அடிப்படி என மொத்த கேவலத்தையும் செய்தது.. எல்லாம் ரவுடி குண்டாஸ் போல சுற்றி கொண்டிருந்தனர்.. இது தான் முக்கிய காரணம் மொத்த உலகமும் இவர்களை வெறுக்க... இறுதியாக நடந்த இங்லாந்து , எகிப்த் அணிகளுக்கு எதிரான ஆட்டம் எல்லாம் மொத்தமும் கேவலம் அர்ஜண்டினா அணி செய்தது..
ஸ்பெயின் வீரர்கள் Pedri , Nico Williams , Dani Olmo, Marc Cucurella இவர்கள் கொடுத்த முழு பங்களிப்பில் 1% கூட அர்ஜண்டினாவின் எந்த நபரும் அருகில் கூட வர முடியாது. ஸ்பெயின் Dani Olmo மொத்த ஸ்டேடியத்தையும் 10 முறை சுற்றி சுற்றி ஓடி வந்துட்டு இருந்தான், அதுவும் தன் பொசிசன் Midfielder மீண்டும் எடுத்துக் கொண்டு. ஆனால் ஒரு முறை கூட இந்த அர்ஜண்டினாவின் ரவுடிகள் போல் கீழ்தாமான தெரிந்தே காலில் மிதிப்பது , தள்ளி விடுவது , தலையில் முட்டுவது என எதையும் செய்தது இல்லை. எதிர் அனியின் உயிருக்கு ஆபத்தான வகையில் அர்ஜண்டினா செய்த பல வேலைகள் இருக்கு அதுக்கெல்லாம் சேர்த்து தான் மொத்த உலகமும் திட்டி தீர்க்கிறது.
Midfielders அர்ஜண்டினா அணியின் Leandro Paredes , Enzo Fernández இந்த இரண்டும் கடஜெடுத்த பிராடுகள்... இவனுக விளையாடியதை விட அதிகமாக எதிர் அணி வீரர்களை காயப்படுத்தியது தான் அதிகம். ok இருக்கும் Football என்றால் சில தவிர்க்க முடியாத நாடகம் நடிப்பு எப்போதும் இருக்கும். ஆனா இவனுக செய்தது கொடூரம். இவனுக யாருக்காது ரெட் கார்டு கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டிருந்தது மொத்த உலகம். இறுதி போட்டியில் Fernández ரெட் கார்டு வாங்கினான் Paredes யெல்லோ வாங்கினான்.. இவனுக இதை ஆக்ரோசமாக விளையாடுதாக காட்டுவதாக நினைத்து அடிதடி வேலையை சாதாரண cabo verde ஆரம்பித்து இன்று ஸ்பெயின் வரை காட்டினானுங்க... De Paul இவன் மெஸ்ஸிக்கு பாடிகாடு...
அர்ஜண்டினாவில் Julián Alvarez இவர் தான் இருப்பதில் கொஞ்சம் நல்ல விதமான விளையாடியவர் தவிர எல்லாம் சண்டை போட வந்தவனுக...
மொத்ததில் அர்ஜண்டினா மீதான வெறுப்பு அடுத்த உலக கோப்பை வரை இருக்கும்... அது மெஸ்ஸி மெஸ்ஸி என ஒருவரால் மட்டும் சரி செய்ய இயலாது. மெஸ்ஸி அதை சரி செய்யும் நபரும் கிடையாது. உலகத்தின் தலை சிறந்த வீரராக இருக்கலாம் ஆனால் அணியை வழி நடத்துவதில் மெஸ்ஸியும் சேர்த்து தான் கெட்ட பெயரை சம்பாரித்திருக்கிறார்.
ஸ்பெயின் கேப்டன் Rodri எந்த கோலும் இல்லை எந்த assist இல்லை ஆனால் சிறந்த கேப்டனாக உலக கோப்பையை வாங்கும் அனைத்து தகுதியும் இருக்கிறது காரணம் மொத்த அணியின் செயல்பாடு, வழி நடத்தியது..
இறுதியாக lamine yamal - 1 கோல் தாங்க போட்டான் சும்மா பில்டப் என்று சொல்பவர்களுக்கு : 67 இடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக 3 கோல் போடுவதை விட தலை சிறந்த 2,3,4 இடத்தில் இருக்கும் அணிக்கு மொத்த பதட்டத்தை கொடுக்கும் வீரராக இருப்பது தான் தேவையே - கிடைக்கும் வாய்ப்பில் அணிக்கு எது சிறந்தது என்ற முடிவை அந்த பரபரப்பான வினாடிகளில் எடுப்பது தான் ஒரு சிறந்த வீரருக்கான தகுதி... Dribbling , வேகம் , Passing இது எல்லாமே ஏறக்குறைய எல்லா வீரரகளும் செய்வர் ஆனால் அதில் சிக்கலான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் திறன் , அதில் தனிதுவமான திறன் அது சரியாக முடிவதற்காக வாய்ப்பு இதை ஏற்படுத்து கொடுத்ததில் வெறும் 19 வயதே ஆன lamine yamal கச்சிதமாகவே இருந்தான்.. lamine yamal மற்றும் Pau Cubarsí தலை சிறந்த வீரரகளாக வருவர்.. எங்கே இப்படி ஒருத்தனை அர்ஜண்டினா காட்டுங்க.. எனவே lamine yamal குறை சொல்ல எதுவுமே இல்லை.
மொத்ததில் எதோ அதிஸ்டத்தில் ஸ்பெயின் உலக கோப்பையை வெல்லவில்லை - அதற்கு முழு தகுதியும் அவர்களிடம் இருந்தது... அதில் பாதி கூட அர்ஜண்டினாவிற்கு கிடையாது. அதை அவர்கள் ஆடிய ஆட்டத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
-மாரிதாஸ்
ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய ஐயா பாக்யராஜ் அவர்கள் இன்று (27-06-2026) மறைவெய்தியதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, ஐயாவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினேன்.
ஐயா பாக்யராஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
தமிழ்நாட்டுல மட்டும்தான்டா, வேறு மாநிலங்களில் இருந்து,
பிச்சை எடுக்க வந்தவன்,
வயிற்றுப்பிழைப்புக்காக கூலி வேலை செய்ய வந்தவன்,
தொழில் செய்ய வந்தவன்,
சினிமாவுல கூத்தாட வந்தவன்,
விபச்சார புரோக்கர் தொழில் செய்ய வந்தவன் என எல்லோருக்கும் எளிமையா அரசு பதவிகள் கிடைக்கிறது.
அங்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதில் மிக மும்முரமாக வேலைகள் செய்து கொண்டிருக்கின்ற வேளையில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் "யார் காணவில்லை" என்பதை பற்றி பட்டிமன்றம் நடத்தி கொண்டிருப்பது மகத்தான கேவலம்!
"தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?" - சீமான்
#Seeman | #NTK | #Vijay | #TVK
ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்!
அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
தமிழ்த்திரையில் எளிய மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்த திரைப்போராளி ! தான் கொண்ட கொள்கையில் துளியளவும் சமரசம் செய்யாத பெருந்தமிழர் !
இயக்குனர் இமயம் ஐயா பாரதிராஜா அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் !
#Bharathiraja
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு!
@CMOTamilnadu@TVKVijayHQ
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
#ReleaseMaridhas
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again.
It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end.
And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? - சீமான் கடும் கண்டனம்
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@ShalinSpeaks@FelixGerald_TVK U know very well Felix is traitor and backstabber doing this on purpose on TVK Paid role. ? Don't act like he don't know anything