என்றும்
மக்களுடன் மக்களாக,
தொண்டனுடன் தொண்டனாக,
விவசாயத்தின் தோழனாக,
கழக எல்லை காவல் தெய்வம் அய்யனாராக,
தொண்டனின் தோழோடு தோழ் நிற்க்கும்
கழக வருங்கால நிரந்தர பொது செயலாளர்
எடப்பாடியார் !!!! 🌱🌱🌱🔥🔥🙏🙏
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களான திரு. @PiyushGoyal, திரு. @JPNadda, பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. @NitinNabin ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்;
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. @GK__VASAN அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் @DrACSOfficial அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் @PaarivendharTR அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#AIADMK_ForeverForTN
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
வெற்றி பெற்றிருந்தால் பதிவிட்டிருக்க மாட்டேன். ஆனால் இப்போது மிகுந்த பெருமிதத்தோடு இந்தப் படத்தை பகிர்கிறேன்.
கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருந்த அதிமுகவை, உங்கள் ஆளுமை, கடின உழைப்பு, தலைமைப் பண்பு மூலம் மீட்டெடுத்த, உயர்ந்த தலைவர் நீங்கள். வாழ்க ஐயா @EPSTamilNadu ❤️❤️
ஒரு காலத்துல தன்னோட எல்க்ஷன் ஏஜண்டா இருந்தவர் கிட்ட போய் தோற்பான் என்று தன் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டாரு
இந்த முத்துவேல் கருணாநிதி சுடலை 🤣🤣🤣🤣
பத்து தோல்வி பழனிசாமின்னு ஊரெல்லாம் சொல்லிட்டு திரிஞ்ச உன் சொந்தத்தொகுதியிலேயே புட்டுக்கிட்டியே ஸ்டாலின் , அவரு விவசாயி தோல்வி ஒன்னும் புதுசில்ல ஆனா நீ ?
இந்தியாவில் மோடியை முடித்து கட்டும் வல்லமை கொண்ட தலைவர் ஸ்டாலின் என்று ஊரெல்லாம் விளம்பரம் பண்ணிய திமுக - இப்போ ஸ்டாலினை முடிச்சது இந்த பாபு...
ஸ்டாலின் MLA கூட கிடையாது...
மொத்தமா முடிச்சு விட்டானுக..
அநியாயம் போ..
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்று 65பேர் மரணத்திற்கு காரணமாய் இருந்த திமுகவுக்கு தமிழக மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர் .
இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட வேதனை தருணம்..