My heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India,
Thiru. @narendramodi avl, on achieving a historic milestone by serving the nation and contributing to its development for 4,399 days as Prime Minister.
Having earned the overwhelming mandate of the people in three consecutive general elections,
Our Hon’ble Prime Minister has emerged as a globally respected statesman and a leader admired by nations across the world.
I extend my sincere best wishes to him for his continued dedicated service towards the growth, progress, and prosperity of our beloved motherland.
@PMOIndia@AIADMKOfficial
#LongestServingElectedPMModi
இந்திய வரலாற்றில் புதியதோர் சாதனையாக அதிக நாட்கள் (4,399) பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து மூன்று தேர்தல்களாக நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாகத் திகழும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், தொடர்ந்து நமது தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@PMOIndia@AIADMKOfficial
#LongestServingElectedPMModi
அண்ணே சிவி சண்முகம் அண்ணே கட்சிக்குள்ள கலவரம் செய்ய நினைச்சீங்க செருப்பால அடிச்சு வெளியே முடுக்கி இருக்கோம்
இப்போ இந்த பீ பக்கெட்ட தூக்கிட்டு மறுபடியும் வர்றீங்க
நிறைய பேர் நீங்க முரட்டு பீசுன்னு நினைச்சுட்டு இருக்காங்க ஆனா நீங்க முட்டா பீசுங்கறதும் எங்களுக்கு தெரியும்
இயக்குனர் இமயம்
பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தென் தமிழகத்தின் கிராமத்தில்
இருந்து புறப்பட்டு,
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்;
திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்;
தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள்.
அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Booth க்கு வெளியே ரெண்டு அக்கா பேசிட்டே போறாங்க,
விஜய்க்கு தான் போடலாம்னு பார்த்தேன், அப்புறம் Vote Waste ஆகிற கூடாதுன்னு இரட்டை இலைக்கு போட்டுடேன்னு 🥹✌️