பெயர் அரசியல் செய்யாதீர் என பேசும் நடிகர் சூர்யா.. உண்மை கொலைகாரன் அந்தோணிசாமி பெயரை வில்லன் போலீஸ்க்கு வைக்க வேண்டியது தானே...?
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
2026 சட்டமன்ற தேர்தலில்
தருமபுரி சட்டமன்ற தொகுதியில்
போட்டியிடும் வெற்றி வேட்பாளர்
பசுமைத்தாயகம் தலைவர் எங்கள் அண்ணியார்
முனைவர் சௌமியாஅன்புமணி
அவர்கள் தமிழகத்தில் அதிக
வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
“ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத" கதையாக -
பாமகவுடம் கூட்டணி வைக்கும் கட்சிகள் மீதே வழக்குத் தொடுப்போம் என விளம்பரம் கொடுத்தவர்கள்; பிரதமர் கூட்டத்தில் மாம்பழம் சின்னம் இடம்பெற்றதை எதிர்த்தவர்கள்; சின்னத்தை முடக்க பலமுறை வழக்குத் தொடுத்தவர்கள்
- இப்போது குறைவான எண்ணிக்கையில் 18 தொகுதிகள் வாங்கிவிட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்!
மாபெரும் சாதனையான மாமல்லபுரம் மாநாட்டையே 'ஒரு சோக நிகழ்வாக மாற்றிய', திமுகவின் வெற்றிக்காக பாமகவை ஒழிக்க சதி செய்த- பூசாரிகளிடம் இருந்து பாமகவை மீட்டெடுத்ததே ஒரு வெற்றிதான்.
திமுகவை தோற்கடிக்க உறுதியேற்போம். நிற்கும் தொகுதிகள் அனைத்திலும் வெற்றிபெற பாடுபடுவோம்.
#AnbumaniRamadoss #PMK
கடலூரில் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் தலைமையில் 17.03.2026 மாபெரும் ஆர்ப்பாட்டம்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதையால் தமிழகத்தை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
#PMK#AnbumaniRamadoss#DMKFailsTN
"ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது!"
- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
👉👉https://t.co/Irpm22Gwxw
#AnbumaniRamadoss#TANGEDCO#TNERC@TANGEDCO_Offcl
நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்.
நாள்: 12-12-2025
நேரம் : காலை 10.00 மணி
இடம் : KNT மஹால், நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், நெய்வேலி
#SowmiyaAnbumani#Neyveli#மகளிர்உரிமைமீட்புப்பயணம்
சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை: திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று!
சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரைம் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. நிலத்தகராறுக்கு கூட ஆளும்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு? என்ற வினா தான் எழுகிறது.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டும் தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளை தடுத்திருக்க முடியும். ஆனால், திமுக காவல்துறை அதற்கு தயாராக இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான சு.சக்கரவர்த்தியை அதே பகுதியைச் சேர்ந்த சமூகவிரோதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனாலும், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது. தங்களைக் காக்கத் தவறிய திமுகவுக்கு வரும் தேர்தலில் சரியான தண்டனையை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள்.
@CMOTamilnadu
"திமுக அரசின் தொழில் (பொய்) முதலீடுகள்" - பாமக வெளியிட்ட ஆவணத்தை இந்த இணைப்பில் தரவிறக்கம்செய்க:
https://t.co/d023pqI9DK
#DMKFakeInvestments#திமுகபொய்முதலீடுகள்
தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் கெலவரப்பள்ளி அணையில், கர்நாடகத்தின் அனைத்து விதமான கழிவுகளும் கலப்பதை தடுத்து நிறுத்தக் கோரி 19.08.2025 அன்று மருத்துவர் அன்புமணி அவர்கள் பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். இப்போது இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.!