கடையநல்லூர் பேருந்து நிலையத்தில்
ஆய்வு மேற்கொண்ட கலெக்டரை பார்த்து ஒருவர் மாவட்ட ஆட்சித் தலைவரை பார்த்து ஐந்து ரூபாய்க்கு பதில் பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது நீங்கள் tvk கட்சி நிர்வாகி தானே என கலெக்டரை பார்த்து கேள்வி கேள்வி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது
ஆளாளுக்கு ஆய்வு செய்ய போறேன்னு கிளம்பி போய் ரீல்ஸ் போட்டதன் விளைவு கலெக்டர் யாரு..கட்சிக்காரங்க யாருன்னு தெரியாம போச்சு 🤣🤣🤣
@Vavarism@Mr_kaalai கம்முன்னு அப்ப அப்ப லைட்டா சவுண்டு கொடுத்து வேடிக்கை பாத்தா , 10 வருசம் கழிச்சி திரும்பி வர போறாங்க மக்கள் வழக்கம் போல.. அது வரை மக்கள் vibe பண்ணட்டும்
இவர்களுக்கு திமுக தேவையில்லை
———————————————-
கடந்த 45 நாள் தமிழ்நாடு அரசியலை பாத்தீங்களா? இதுநாள்வரை இங்கு நாம எதுவெல்லாம் பேசினோமோ பேசப்பட்டதோ அதுவெல்லாம் இங்கு ஒரு பிரச்சனையாகவே கருதப்படவில்லை..
சட்டம் ஒழுங்கு கேடு கெட்டுப் போயிள்ளது..பாலியல் குற்றங்கள் கணிக்கில்லாமல் நடக்கின்றன..ஆனால் போலிஸ் மினிஸ்டர் இதுவரை ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் கொடுக்கவில்லை. தினமும் தனது சினிமாத்துறை நண்பர்களுடன் போட்டோ எடுப்பதில் பிசியாக உள்ளார்.. மின்வெட்டு மிகமோசமாக இருக்கின்றது, ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர் முன்னாள் அரசை கைக்காட்டிவிட்டு செல்கிறார்.. வரவேண்டிய 24000 கோடி பேரிடர் நிதியில் 1000 கோடிதான் வருகிறது, அதை அமைச்சர் பெரிய சாதனையாக சொல்கிறார்..
சட்டசபையில் முதல்வர் பேசவேமாட்டேங்குறார்.. ஆக்டிங் சிஎம்தான் பேசுகிறார்.. குதிரைபேரத்தில் கும்பல் கும்பலாக ஆட்கள் பிடிக்கின்றனர்..அதைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. இதுவரை தூய்மைவாதம் பேசிய காம்ரேடுகள் தங்கள் தலையால் முட்டுக் கொடுக்கின்றனர்.. சென்றமுறை தூய்மை பணியாளர்கள் தனியார்மயம் என்றதும் பொங்கிய நீலச்சங்கிகளும், விசிகவும்.. நேற்றைய தினம் பங்கருக்குள் பதுங்கிவிட்டனர்..
இதுவெல்லாம் அரசியல் கட்சிகளின் நிலைபாடு..விட்டுவிடலாம்.. மீடியாக்களோ இன்னும் ஒருபடி மேல் முதல்வர் குளித்தார், சாப்பிட்டார், சிரித்தார் என்றரகத்தில் ஜால்ரா தட்டுகின்றன.. அதைவிட மேல் பொதுஜனம்தான்.. மேலே சொன்ன எதுவுமே அவர்களுக்கு பிரச்சனையாகவே தெரியவில்லை.. ஜாலியாக இருக்காங்க.. இந்த நிலை எப்ப வரும்குறதை நாம யோசிக்கனும்..
ஊர்ல தாத்தா,அப்பா நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சிட்டு போனால் குழந்தைகள் ஒழுங்கா படிக்காமல் வேலைக்கு போகாமல் வீட்டில் வெட்டியாக இருந்து எந்த கவலையும் இல்லாமல் அனுபவிப்பார்களே அந்த மனநிலையில்தான் இன்று பெரும்பான்மை தமிழ்நாடு உள்ளது..
இவர்களுக்கு அரிசி சோற்றுக்கு வழியில்லாமல் ஏங்கிய தலைமுறையை பற்றி தெரியாது, பள்ளிக்குள் நுழையமுடியாத நிலை இருந்தது என்பது பற்றிய கவலையில்லை..கோயில் பக்கமே போகமுடியாது, சாலைகள் கிடையாது என்றிருந்த தமிழ்நாட்டை பற்றிய புரிதல் இல்லை.. சொன்னாலும் அதுக்கு இப்ப என்ன? இப்ப நல்லாதானே இருக்கோம், சொந்தக் காசையா கொடுத்தாங்க? என்றளவில்தான் பதில் வச்சிருக்காங்க..
ஸோ அவங்க லெவலில் அவங்க இப்ப ரொம்ப சந்தோசமாதான் இருக்காங்க.. இது மாற ரொம்ப காலம் ஆகலாம் எப்டினா 50களில் பஞ்சம் பிழைக்க எல்லை தாண்டி கர்நாடகம், பாம்பேனு கும்பல் கும்பலாக போனாங்களே அந்தமாதிரி நிலை வந்தால் மட்டுமே அய்யயோ தப்பு பண்ணிட்டோமேனு யோசிப்பாங்க, இதே மாதிரி நிர்வாகம் தொடர்ந்தால் அதுவும் நடக்கும்.. மேலே சொன்னதுபோல முன்னோர் சொத்தை அழித்த பேரப்பிள்ளைகள் அப்புறம்தான் உணர்வார்கள்.. அதுவரை இங்கு அவர்களுக்கு திமுக தேவையில்லை..
அரசு விழாக்களில் நடனமாடும் அமைச்சர்களும், பட்டமளிப்பு விழாவில் சினிமா பாடல்களும், என்றேனும் ஒருநாள் எழுதி வைத்த அறிக்கையை ஏற்ற இறக்கத்தில் பேசும் முதல்வருமே போதும் இவர்களுக்கு.. அதை வைத்தே சந்தோசமாக வாழ்வர்..
மேலே சொன்ன எதுனா ஒரு ப்ரிவிலேஜை திமுகவுக்கு பொதுமக்களோ, ஊடகங்களோ ஏன் ஒட்டுண்ணியாக வாழ்ந்த தன் கூட்டணிக் கட்சிகளோ கொடுத்திருக்கிறார்களா என்று யோசித்தால் புரியும் இவர்களுக்கு திமுக தேவையில்லை என்று..
அப்பாவிடம் கோவித்து அவர் பாக்கெட் காசை எடுத்துட்டு வீட்டை விட்டு ஓடும் மகன், காசு தீர்ந்து, சீரழிந்து அப்பாவை தேடி வந்து கதறியழுவது போல் மீண்டும் வருவார்கள் அன்று அரவணைக்க திமுக இருக்கனும் அவ்ளோதான்..
துப்புரவு பணியாளர் தனியார்மயம், டாஸ்மாக் தனியார்மயம், மின்சாரம்,போக்குவரத்து தனியார்மயம்னு திமுகவால் நினைத்துக்கூட அல்லது திமுக ஒருபோதும் நினைக்காத திட்டங்கள்லாம் வரிசையாக வந்தாலும் சிரித்துக் கொண்டே குனிந்து வாங்கிக் கொள்ள தயாராக இருக்குமளவு மக்கள் சந்தோசமாகதான் இருக்கின்றனர்.. இருக்கட்டும்.. அவர்களுக்கு இப்ப திமுக தேவையில்லை