இவர் ஆட்சி தொடர்ந்து, 2026 க்கு பிறகு, அடுத்த ஐந்தாண்டுகளில் இன்னும் அதிகமாக சாத்தியமாகும். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழ்நாடு! வடமாநிலங்களில் விசாரித்து பாருங்கள் புரியும். #என்ன_சாதித்தார்_CMஸ்டாலின்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் - ஆலந்தூர் தெற்குப்பகுதி - 164-வது வட்டக்கழக செயலாளராகவும், மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த அண்ணன் ஏசு (எ) ஜேசுதாஸ் அண்மையில் மறைந்தார்.
இன்றைய தினம் அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
மாவட்டக்கழகம் சார்பில் அண்ணன் ஏசு அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.11 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினோம்.
அவரது துணைவியாரும் - மாமன்ற உறுப்பினருமான அக்கா தேவி உள்ளிட்ட குடும்பத்தார் - நண்பர்களுக்கு நம்முடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம்.
அண்ணன் ஏசு அவர்களின் கழகப்பற்றும் - கலைஞர் மீதும், கழகத்தலைவர் அவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பாசமும் போற்றுதலுக்குரியவை.
கழக நிகழ்ச்சிகளில் கருப்பு - சிவப்புக் கொடியோடு அண்ணன் ஏசு எழுப்பிய கொள்கை முழக்கங்கள் உடன்பிறப்புகளின் செவிகளில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அண்ணன் ஏசுவின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்!
@thamoanbarasan
நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளைப் பாராட்டி உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்
@mylaivelu@ThamizhachiTh
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் – அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.
அவரது கருத்துக்களை கழகத்தலைவர் @mkstalin அவர்களிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம்.
இந்த சந்திப்பின்போது, நம்முடைய இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பரிசளித்தோம்.
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Heartfelt birthday wishes to @samajwadiparty President, dear brother @yadavakhilesh.
Your unwavering commitment to safeguard the Constitution, democracy, and social justice continues to inspire across the nation.
Wishing you good health, happiness, and continued success in all your endeavors.
மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் #NationalDoctorsDay-இல் போற்றுகிறேன்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவத் தலைநகராகத் திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது.
#NEET போன்ற சதிகளால் இதனைத் தகர்த்திடப் பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம்.
@MedicalwingDMK
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
என்றென்றும், எக்காலத்திலும் கழகம், கூட்டணியே இல்லா வெற்றி காண, கழகத்தில் மாற்றங்கள் எல்லா இடங்களிலும் வரவேண்டும், அதுவே கழக உடன்பிறப்புகளின் எண்ணங்களில் நிலைபெற்று உள்ளது.
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
Heartiest congratulations to Thulasimathi Murugesan on her historic achievement of becoming the first Indian para-badminton player to win six medals across two consecutive international tournaments.
Winning three Gold, one Silver and two Bronze medals is a remarkable feat that reflects her extraordinary talent, determination and hard work.
Her outstanding performance at the British & Irish Para Badminton International has once again brought immense pride to our nation.
I wish her continued success in the years ahead and many more laurels for India.
#Parabadminton @Thulasimathi11
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் - தஞ்சை மத்திய மாவட்டம், திருவோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான சகோதரர் @KTMaheshDMK அவர்களின் அன்புத்தந்தையார் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் கே.தங்கராசு அவர்கள் அண்மையில் மறைந்தார்.
சில்லத்தூர் கிராமத்தில் உள்ள அவர்களது இல்லம் சென்று, அண்ணன் தங்கராசு அவர்களின் திருவுருவப்படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
திராவிட இயக்க கொள்கைகள் மீதும் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் மாறா பற்றோடு, திருவோணம் பகுதியில் கழகம் வளர்த்த அண்ணன் தங்கராசு அவர்களின் பணிகளைப் போற்றுவோம்!
@durai944@Anbil_Mahesh@murasoli_tnj@Govichezhian@RVaithilingamdm