#Shared 2024 ல பகிர்ந்த பதிவு , இதை மீண்டும் இன்று பதிவு செய்கிறேன். 🐍
அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை கூட எட்டும்.
2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
3. குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.
6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.
7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.
8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
Link to Buy Snake Repellent Powder For Indoor & Outdoors (Non-Toxic): https://t.co/ALAGQ1cqzv
Door Bottom Seal Strip : https://t.co/t503fpNaeI
9. உங்கள் வீடுகளில் பாம்புகள் நுழைந்தால் நீங்க செய்ய வேண்டியது : உங்கள் பகுதியில் உள்ள வனத்துறை (Forest Department) அல்லது பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் (Snake Rescuer) அல்லது அரசு தீயணைப்பு துறை (Fire and Rescue Services) எண்களுக்கு அழைக்கவும். இந்த இலவச எண்கள் உதவலாம் (இந்தியாவில்): வனத்துறை – 1926 தீயணைப்பு – 101
10. நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.
எங்கள் வீட்டின் பக்கத்தில் #இந்துஅறநிலையத்துறை என்று பெயர் பலகை வைத்து கோவில் தேர் செய்வதாக மொத்த நேரமும் குடியும் புகையும் தான் … இப்ப ஐந்து நாட்களாக ஒரு தெருநாய் உள்ளே விட்டு பூட்டிட்டு போய்ட்டாங்க சோறு தண்ணி இல்லாமல் கத்திட்டே இருக்கு .. எங்களால் எதும் கொடுக்கமுடியல ,,
https://t.co/xH7Tx1JI7t - The Launch Day!!!
Our website will be live in 2 Hours : 15 Minutes
Get ready for the new shopping experience and lot of introduction offers.