ஒரு பெண்ணை பொதுவெளியில் கொடூரமாகத் தாக்கும் அளவுக்கு தவெக நிர்வாகிகளுக்கு துணிச்சலைக் கொடுப்பது யார்? ஆளுங்கட்சி என்ற அதிகார போதையா, அல்லது சட்டத்தின் மீதான அச்சமின்மையா??
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஈரோட்டில் காதலிக்க மறுத்த 19 வயது இளம்பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்திய நபர்.
கல்லிடைக்குறிச்சி அருகே சிறுவன் உட்பட இருவர் கொலை.
தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு.
ஆற்காடு அருகே கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை!
திருச்சி அருகே கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு.
சட்டம் - ஒழுங்கு????
@CMOTamilnadu.
#பொய்க்கால்_குதிரை_அரசு
திரு.வி.க நகர் தொகுதி மக்களுக்கு அண்ணா சொன்னதை தான் சொல்ல வேண்டும்...
"தங்கத்தை யாரும் தவிட்டுக்கு விற்பார்களா"?
திரைக்கவர்ச்சி மோகத்தில் வரலாற்று பிழை செய்த தற்குறி மக்கள்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்கள் எந்த மாய வலையிலும் சிக்கமாட்டார்கள்!!!
சென்னை வானகரத்தில் நடைபெற்ற மாற்று கட்சியினர் இணையும் விழாவில் முன்னாள் அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்களை வாழ்த்தியும், வந்தவர்களை வரவேற்றும் பேசினார் திரு.ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், புரட்சித்தலைவரே உதயசூரியன் சின்னத்தில் தான் முதலில் தேர்தலில் நின்றார் என்றும், எனக்கு தலைவர் கலைஞர் தான் என்று சட்டமன்றத்திலேயே அவர் சொன்னதாகவும் சொன்னார்.
முதலில், திரு.ஸ்டாலின் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். புரட்சித்தலைவர் பயணித்த திமுக, அண்ணாவின் திமுக. அவர் திமுக வில் இருந்ததால் தான் திரு.மு.கருணாநிதி முதல்வரானார் என்பது வரலாறு. அதற்கு நன்றி கூறி அவரே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியதும் வரலாறு.
அண்ணாவின் மறைவுக்கு பின் தலைவர் ஏன் அதிமுக - வை தொடங்கினார் என்பதும், 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவிற்கும் திரு.மு.கருணாநிதி அவர்களுக்கும் தோல்வியை பரிசளித்தார் என்பதை நாடும் அறியும் திரு.ஸ்டாலினும் அறிவார்.
இரண்டாவது எதிரியே ஆனாலும் மதிக்கும் பண்பு கொண்ட புரட்சித்தலைவர், சட்டமன்றத்தில் பேசியது மாண்பின் அடிப்படையிலயே தவிர வேறொன்றும் இல்லை. அதே சட்டமன்றத்தில் புரட்சித்தலைவர் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்பட்டார் என்பது வரலாறு.
சமீப காலமாக, திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் அதிமுக தலைவர்களை புகழ்ந்து பேசுவதும், தொண்டர்களின் மீது அக்கறை காட்டுவதும் தொடர்ந்து நடக்கிறது.
ஆனால், இந்த ஆசை வார்த்தைகளும், குதிரை பேரங்களும் இருபெரும் தெய்வங்களின் உண்மையான தொண்டர்களிடம் எடுபடாது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகம் Google Search செய்யப்பட்ட 4 விஷயங்கள் !
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
(பி.கு. : இதையும் ஒரு Record-ஆக ஆச்சரியக்குறிகள் கொண்டாடினாலும் ஆச்சரியம் இல்லை..!!)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு.
ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப் படுத்தி பேசுகிறார்.
இல்ல புரியல…. “நீ நல்லா சாப்பிட்டிருக்க” ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விதமான அசிங்கமான தோரணை இது?
GOAT படத்துல நீங்க போட்ட Traffic Police கேரக்டர் மாதிரியே பேசிட்டு இருக்கீங்க… இது ஒன்னும் சினிமா இல்ல! மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள்.
@TamilanParthib1
#பொய்க்கால்_குதிரை_அரசு