பெரியார் திடல், கம்யூனிஸ்ட் அலுவலகம், வழக்கறிஞர் அலுவலகம், காவல் நிலையம் ஆகிய இடங்களில் நடைபெறும் சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள்.. சாதி மறுப்பு, சாதி கலப்பு திருமணம் செய்து தமிழக அரசிடம் சன்மானம் வாங்கும் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி இல்லை என்ற சான்றிதழ் தான் வாங்க வேண்டும் என்ற அரசாணை ஏதும் உள்ளதா??? .. இதற்காக போராடிய தலைவர் யாராவது உள்ளீர்களா????? காதல் திருமணங்களில் கூட, பிறந்த குழந்தைக்கு தந்தை சாதி இட்டு தான் சான்றிதழ் வாங்குகிறார்கள் என்பதே வழக்கத்தில் உள்ளது.. அப்படி இருக்கையில் நீங்கள் 60 ஆண்டுகளில் அதிகம் ஒழித்த சாதி எது???
இளம் பெண்களுக்கு ஒரு தகவல்.. நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்வது, பெரும்பாலும் உங்கள் கணவரின் சாதி எண்ணிக்கையை அதிகரிக்கதானே தவிர. சமூகத்தில் சாதியை ஒழிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை ஆளுங்கட்சி பெரிய விழா எடுத்து பாராட்டி சீராட்டி தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டால், நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணை நடக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசு வழக்கறிஞர்களும் எப்படி ஆதாரங்களை நியாயமாக முன் வைக்க முடியும்?
இதற்கு பதில் இருக்கா முதல்மைச்சர் விஜய் அவர்களே?
@TVKVijayHQ@CMOTamilnadu@CTR_Nirmalkumar
#Vijayabaskar
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
யப்பா.. ஆளை விடுங்க...!. - அஸ்ராகார்க் ஐ.பி.எஸ்.
த.வெ.க. ஆட்சி அமைத்தவுடன் மே 13 அன்று காவல்துறையில் மிகவும் சக்திவாய்ந்த உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் அஸ்ரா கார்க். இரு மாதங்கள் முழுமையாக பணி நிறைவுபெறாத நிலையில், "மத்திய அரசின் உளவு அமைப்பான "ரா'வில் சேர விருப்பம் தெரிவித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருக்கின்றார் தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யான அஸ்ரா கார்க். அதிகாரமிக்க பதவியினை வகித்துவரும் மாநிலப் பணியிலிருந்து ஏன் மத்தியப் பணிக்கு அவசரம் அவசரமாக செல்லவேண்டும்?
"மக்கள் நலன் சார்ந்து மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உளவுத்துறையின் பணி இன்றியமை யாதது. முதலமைச்சரின் நம்பிக்கைராகுரியவைகளில் ஒன்றான உளவுத்துறையில் "இந்த அதிகாரி வந்தால்தான் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு நிம்மதியாக இருக்கும்' என வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றிவந்த அஸ்ரா கார்க்கை அழைத்து உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமித்தது த.வெ.க. அரசு. அஸ்ரா கார்க்கின் நியமனம் விபரம் தெரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியை தந்த வேளையில், எதிர்பார்த்தது போல மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கி உளவுத்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவந்தார் அஸ்ரா கார்க்.
அதுபோல் இந்தந்த பணிகளுக்கு இந்தந்த அதிகாரிகள் வந்தால் நன்றாக இருக்கும் என சில அதிகாரிகளின் பெயர்களை முன்மொழிந்திருக்கின்றார் அவர். அதுபோல் இந்தந்த அமைச்சர்கள் புரோட்டாகாலை மீறுகின்றனர். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பத்திற்கு ஆளாகி, பாதுகாப்பில் குளறுபடி ஏற்படுகின்றது. அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்று கூறியும் மதிப்பதில்லை. இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றால் அது நேரடியாக முதல்வருக்கு செல்வதில்லை. ஏன் அரசிற்கு தேவையான அத்தியாவசியமான ரகசியங்களைக் கூட முதலமைச்சரிடம் நேரடியாக சொல்லமுடிவதில்லை. இந்த அரசிற்கு சம்பந்தமில்லாத குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் மட்டுமே அரசில் உள்ளது. இதனை வைத்துக்கொண்டு எப்படி பணி செய்வது?'' என உளவுத்துறைக்கும், முதல்வருக்கும் இடையேயான இடைவெளி குறித்து பேசினார் கடலோர மாவட்டத்தினை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர்.
சமீபத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலைய எல்கைக்கு, மாவட்ட நிர்வாகத்திற்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கரகாட்டம், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு சென்றிருக்கின்றார் அமைச்சர் ஒருவர். பாதுகாப்பு வளையங்களை மீறி ஆட்டத்தினை ரசித்து ரசிக மனநிலையில் அமைச்சர் உட்கார்ந்திருக்கின்றார் என அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு செய்தி கிடைக்க, அலறியடித்து சென்றிருக்கின்றனர் உள்ளூர் போலீஸார். "அமைச்சர் மக்களோடு மக்களாக இருக்கட்டும். யார் வேண்டாமென்றது?, இங்கு வருகின்றேன் என முன்னரே கூறினால் என்ன? இத்தனைக்கும் இந்த நிகழ்ச்சி அமைச்சரின் அஜெண்டாவிலேயே இல்லை. கூட்டத்தில் இருக்கும் யாராவது ஒருவர் ஏதாவது அசம்பா விதத்தை நிகழ்த்தினால் யார் பொறுப்பு?'' என் கின்றனர் உள்ளூர் உளவு அதிகாரிகள். இதுபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில்தான், "மத்திய அரசுப்பணிக்கு தயாராக உள்ளதாக' விருப்ப கடிதம் எழுதியிருக்கின்றார் உளவுத்துறை ஐ.ஜி.யான அஸ்ரா கார்க்.
உளவுத்துறை ஐ.ஜி. அலுவலகத்தில் பணி யாற்றும் ஆய்வாளர் ஒருவரோ, "உளவுத்துறையின் குறிப்புக்கள் முதலமைச்சருக்கு நேரடியாக செல்வதில்லை. இதில் அமைச்சர்களைப் பற்றியும், முதலமைச்சரின் பெயரை கூறிக்கொண்டு ஆட்டம்போடும் நபர்கள் குறித்தும் எழுதப் பட்டிருக்கும். முதல்வர் தான் படிக்கவேண்டும். சீலிடப்பட்ட அந்த கவர்கள் அரசிற்கு சம்பந்தமில்லாத ஆட்களால் பிரிக்கப்பட்டு அதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதுபோல் பிரச்சினைக் குரிய சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை குறிப்பிட்ட பொறுப்பு களுக்கு வேண்டா மென்று பரிந்துரைத் தும் "சாமி மற்றும் கலை'யானவர்களால் பதவிக்கு கொண்டுவரப் படுகின்றார்கள். அல்லிப்பூவை அல்லிப்பூ என்றுதான் கூற வேண்டும். அது தாமரைப்பூ எனக் கூறக்கூடாது. இது நாள்வரை நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நிலை நீடித்தால் அரசிற்கு கெட்ட பெயர் வருகின்றதோ, இல்லையோ நமக்கு கெட்ட பெயர் வந்துவிடும். ஆகையால் ஏன் இந்த பொல்லாப்பு..? ஆளை விட்டால் போதும் என அஸ்ரா கார்க் சார் மத்திய பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருக்கின்றார்.
1/2
திட்டமிட்டு வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கில் பதிவுகளை போட்டு சாதிய மோதல்களை உருவாக்க நினைக்கும் சாதிய மன நோயாளி @beemji மீது தமிழக காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!
இந்த சந்திப்பு கடந்த பிப்ரவரி மாதம் நடத்திருந்தால் தமிழக அரசியலே மாறியிருக்கும் ஒருங்கிணைந்த பாமக 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்.ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தைலாபுரம் இருந்திருக்கும்.நொடி பொழுதில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான தீர்வு கிடைத்திருக்கும்.எதோ இன்றாவது