*19ம் நாள் களத்தில்.....
ஆசிரியர்களை காந்தி-இர்வின் பாலம் கூட நெருங்க விடாமல் இடையிலேயே வழிமறித்து கைது செய்யும் அவல நிலை
தடைகளை மீறிபோராட்டக் களத்தை அடைந்த தருணம்
#sstateachersprotest
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான திரு. ராபர்ட், தலைவர் திரு. ரெக்ஸ் ஆனந்தகுமார், திரு. கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் திரு. @mkstalin ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து , மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#NewsTamil24x7NewsUpdate | வலிக்குது சார்.. கதறிய ஆசிரியர்
சமவேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கண்ணனை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்ற போது காலைப் பிடித்து தள்ளிய போலீசார்
வலுக்கட்டாயமாக ஒரு காலை தூக்கி வாகனத்திற்குள் தள்ளிய போது வலியில் துடித்த ஆசிரியர்
#Chennai #protest #TamilNews #NewsTamil #NewsTamil24x7
சென்னையில் ஏழாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். புத்தாண்டான இந்த நாளில்கூட அவர்களை, குறிப்பாக பெண் ஆசிரியர்களை இப்படி ரோட்டில் முழங்காலிட்டும், பிற வகைகளிலும் போராட வைத்து வேடிக்கை பார்ப்பதுதான் இந்த ஆட்சியின் லட்சணமா? முதல்வர், அமைச்சர்கள் என நீங்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாடி வரும்போது, உங்களுக்கு வாக்களித்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சொல்லமுடியாத வேதனைகளோடு போராடி வருகிறார்கள்.
போராடும் ஆசிரியர்களை திமுக அரசு பலவந்தமாகக் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற முழக்கத்தை ஏந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு விடியல் எப்போது? தேர்தல் வாக்குறுதியில் அவர்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டு, இன்று அதற்காக அவர்கள் போராடும் உரிமையைக் கூட சர்வாதிகாரமாக ஒடுக்கி வருகிறது திமுக அரசு.
இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். அனைத்து தரப்பு ஊழியர்களையும் அடிப்படை உரிமைக்காக அன்றாடம் போராட வைத்துக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
நேற்று போராடும் ஆசிரியரின் கையை உடைத்தது இன்று காலை உடைத்திருக்கிறது ஏவல்துறை!
அறவழியில் போராடியவர்களை அடக்குமுறை செய்வது தான் காவல்துறையின் பணியா உள்துறை அமைச்சர் @mkstalin
?
#தீயசக்தி_திமுக