அவநம்பிக்கையும், தான்மையும், புரளிகளும் தான் நம் இனத்தின் சாபம்.
இந்த பார்வையில் பார்த்தால், தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் துரோகமாக தான் தெரியும்.
ஒன்றினையும் வழியை பாருங்க.
தமிழர் விடுதலை என்பது ஒத்தையடி பாதையில்லை. ஒருத்தரை நம்பியும் இல்லை.
"நான் நல்லவன்...மத்தவங்க எல்லாரும் கெட்டவுங்க... " - என்ன மாதிரியான மனநிலை இது. அதுதான் இந்த சுய பச்சாதாபம் மிகுந்த இந்த வசனம் - "துரோகம் நம் இனத்தின் சாபம்".
இதை இனி யாராவது சொல்ல கேட்டால் - அசிங்கமா எதாவது சொல்லிடுவேன். எதிர்ல இருந்த ஒரு அரையும் விடுவேன்.
It is a team effort. ஒருத்தரை நெருக்கடிக்கு தள்ளிவிட்டுட்டு, பிறகு அவர்களுடைய செயலை வைத்து... பார்த்தீங்களா ... இதைத்தான் நான் சொன்னேன் " என்று சொல்வதை விட கேவலமானது எதுவும் இல்லை. Do not edge people out. Stay united.
அதுக்கு எல்லாரும் பேச்சை குறைக்கணும். அதுவும் குறை சொல்லும் பேச்சை குறைக்கணும். தீர்வை சொல்ல தெரிஞ்சா ... பேசுங்க. இல்லனா... just shut up.
Man-up Guys!
#iniyavalrajini #iniyaval
இந்தியாவை தேசிய இனங்களின் கூட்டரசாக மாற்று!
- பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்_
=============================
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.50 கோடி; பிரிட்டன் மக்கள் தொகை 6.99 கோடி; பிரான்சு மக்கள் தொகை 6.91 கோடி; செர்மன் மக்கள் தொகை 8.35 கோடி!
ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் உலகில் நூற்றுக்கும் மேல் உள்ளன. நார்வே மக்கள் தொகை 56,33,770; டென்மார்க் மக்கள் தொகை 60,23,520. இவ்வாறு பல நாடுகள் ஒரு கோடிக்கும் கீழ் மக்கள் தொகை கொண்டுள்ளன.
தமிழீழத்தில் நம் இனத் தமிழர்களை இலட்சக் கணக்கில் குவியல் குவியலாகக் கொன்றழித்த சிங்களர்களின் மக்கள் தொகை இலங்கையில் இரண்டு கோடிக்குக் கீழ் தான்! ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.50 கோடி!
தமிழ்நாடு, மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளைப்போல் தனி அரசு அமைக்காமல், இந்தியாவுக்குள் ஒரு சிறுபான்மை இன மாநிலமாகச் சுருங்கியது ஏன்?
அந்தத் துயரங்களையும் சுருக்கமாக நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஐரோப்பியர்கள், வணிக வேட்டைக்காக உலகெங்கும் கடல் வழியாக அலைந்தனர். அந்த வணிக வேட்டைக்காக முதல் முதலாக கேரளத்தில் உள்ள கோழிக்கோடு துறைமுகத்தில் 1498 ஆம் ஆண்டு வந்து இறங்கிய நபர்தான் வாஸ்கோடகாமா." அவரும் அவருடன் வந்தவர்களும் போர்ச்சுகலுக்குத் திரும்பும்போது இங்கிருந்து கொண்டு சென்ற சமையல் மற்றும் வாசனை நுகர்வுப் பொருட்கள், வந்த பயணச் செலவைவிட 60 மடங்கு அதிக இலாபம் தந்தன" என்கின்றன வரலாற்று நூல்கள்!
கோவா, டையூ, டாமன் ஆகிய மூன்று பகுதிகளிலும் தங்கள் ஆட்சியை வைத்திருந்த போர்ச்சுகீசியர் 1947க்குப் பிறகும் அவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்தனர். கடைசியாக 1961 ஆம் ஆண்டுதான் அம்மூன்று பகுதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைத்தது போர்ச்சுகல்.
ஆசியா கண்டத்தில் தனது காலனிகளை நிறுவுவதற்காக நெதர்லாந்து அரசின் ஆதரவுடன் நிறுவப்பட்ட பன்னாட்டு வணிகவேட்டை நிறுவனத்தின் பெயர் "டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி". டச்சு மொழியில் "Vereenigde Oostivdiche Compagnie" என்பதுதான் ஆங்கிலத்தில் 'East India Company" - தமிழில் "கிழக்கிந்தியக் கம்பெனி!"
இப்போது புரிகிறதா, "இந்தியா" என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்று? ஐரோப்பிய வணிக வேட்டையாடிகள் சூட்டிய பெயர்தான் இந்தியா! "இந்தியா" என்ற பெயரில் நாடோ, இனமோ வரலாற்றில் இருந்ததில்லை.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) என்பது இங்கிலாந்து இராணி எலிசபெத்தால் ஏற்பிசைவு வழங்கப்பட்டு, கி.பி. 1600 டிசம்பர் 31 இல் இலண்டனில் பதிவு செய்யப்பட்ட பன்னாட்டு வணிக வேட்டை நிறுவனம் ஆகும்!
பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி (French East India Company) 1664 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அனுமதியுடன் 1668 ஆம் ஆண்டு பிரெஞ்சு வணிக வேட்டையாடிகள் சூரத்தில் தங்களின் முதல் தொழிற்சாலையைத் தொடங்கினர்.
தமிழர்களின் புதுச்சேரியை, பிரெஞ்சுக்காரர்கள் நம்மிடம் 1947 ஆகத்துக்குப் பின்னும் ஒப்படைக்க மறுத்தனர். புதுவைத் தமிழர்களின் போராட்டங்களே, 1962 ஆகத்து 16 அன்று புதுச்சேரியை விடுவித்து இந்தியாவிடம் இணைத்தது.
ஐரோப்பாவில் இருந்து வந்தேறிய இந்த வணிக வேட்டையாடிகளுக்கு இடையே, இந்திய மண்டலத்தைக் கைப்பற்ற போட்டியும் - போர்களும் நடந்தன. பெரும்பகுதி ஆங்கிலேயர் கையிலும்; புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் கையிலும்; கோவா, டையூ, டாமன் போர்ச்சுகீசியர் கையிலும் மிஞ்சின!
1947 ஆகத்து 15 விடுதலை, இந்தியாவின் அனைத்து இனத் தாயகங்களுக்கும் கிடைத்த விடுதலையா? இந்தி - குசராத்தி மண்டலத்திற்கு மட்டும் கிடைத்த விடுதலையா?
பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனித்தனி தாய்மொழி கொண்டு, தனித்தனி இனங்கள், தனித்தனி தாயகங்களில் வாழ்ந்து வந்தனர். "பதினைந்தாயிரம் (15,000) ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் துறைமுகத்தில் கப்பல்கள் பல நின்றுள்ளன. வெளிநாட்டுக் கடல் வணிகம் செய்துள்ளனர் தமிழர்கள்" என்று திருச்சி - பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோம. இராமசாமி குழு கண்டறிந்துள்ளது. ஆங்கிலேய கடலியல் ஆய்வாளர் திரு. கிரகாம் ஆன்காக், '11,500 ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் கடலில் பெரிய துறைமுகம் இருந்துள்ளது. ஒரே நேரத்தில் 70 கப்பல்கள் நின்றுள்ளன. கடல் கடந்து வாணிகம் செய்துள்ளனர் தமிழர்கள்" என்கிறார்.
ஐரோப்பிய வணிக வேட்டையாடிகள் தங்கள் சுரண்டலுக்காக - அரசு ஆதிக்கத்திற்காக குருதி வெள்ளத்தில் உருவாக்கிக் கொண்ட "செயற்கை நாடு தான் இந்தியா!" அந்த இந்தியாவிற்குள் தமிழ்நாடும் பலியாக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின் (1947 க்குப் பின்) ஐரோப்பிய வேட்டையாடிகளான வெள்ளையர்கள் கொடுத்திருந்த மாநில உரிமைகளைக் கூட விடுதலை பெற்ற இந்திய அரசு தொடர்ந்து பறித்து வருவது ஏன்?
வெள்ளையன் ஆட்சியில், விற்பனை வரி வசூல் உரிமை மாநில அரசுக்கு இருந்தது. அவர்கள் ஆட்சியில் கல்வி, மருத்துவம், காவல்துறை மூன்றும் மாநில அதிகாரத்தில் இருந்தன. இவற்றைப் பறித்து, புது தில்லி - மைய அரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு சென்று விட்டார்கள்!
உலகக் கூட்டாட்சி நாடுகள் (Federal States) எதிலும் இல்லாத, மைய (இந்திய) அரசின் ஆதிக்கத்தின் கீழ் மாநில - மைய அரசுகளின் பொதுப் பட்டியல் (Concurrent List) என்ற புதுவகை மாநில ஆக்கிரமிப்புப் பட்டியலை உருவாக்கி உள்ளார்கள். இதன்கீழ் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்ட முன்வரைவுகள் (Bills), இந்தியக் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டால் தான் சட்டமாகும்.
உலகத்திலுள்ள கூட்டாட்சி நாடுகளான அமெரிக்கா (U.S.A.) , கனடா, சுவிட்சர்லாந்து, செர்மனி எதிலும் இல்லாத நியமிக்கப்படும் மாநில ஆளுநர் பதவி இந்தியாவில் ஏன்?
"மாநில சட்டமன்றங்களை ஆளுநரின் கையடக்க அமைப்பாக - அவர் நினைத்தால் ஆட்சியைக் கலைக்கலாம்" என்று சர்வாதிகாரம் கொடுத்திருப்பது ஏன்?
இத்துடன் இன்னொரு பேரபாயம் தமிழ்நாட்டைப் பிடித்து ஆட்டுகிறது. அன்றாடம் வெள்ளம்போல் இந்திக்காரர்களும் மற்ற மாநிலத்தாரும் தமிழ்நாட்டில் வந்து குவிந்து, இங்கேயே தங்கி விடுகின்றனர். 'தமிழ்நாடு', 'இன்னொரு இந்தி மாநிலம்' ஆகிவிடுமோ என்ற அச்சம் பிடித்து ஆட்டுகிறது.
இவை ஞாயமா? நீதியா? இந்திய விடுதலைக்காக உயிர்நீத்த, தூக்கில் தொங்கிய, சிறையில் செக்கிழுத்த, அந்தமான் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த தமிழர்கள் - ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாக இந்திக்காரர் ஏகாதிபத்தியம் கேட்டா ஈகம் செய்தார்கள்?
"இந்தியா ஓர் உண்மையான கூட்டரசாக அமையும். அப்படிப்பட்ட புதிய இந்தியாவில் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்வார்கள்! தேசிய இனத் தாயகங்கள் விரும்பி சேர்ந்துள்ள ஒரு கூட்டரசாக இந்திய அரசு செயல்படும்" என்ற நம்பிக்கையில் தானே அயல் இன ஆங்கிலேயரை விரட்ட போராடினார்கள் - ஈகம் செய்தார்கள் தமிழர்கள்!
அவர்களின் வாரிசுகளாகிய இக்காலத் தமிழர்கள், இந்திய அரசிடம் பின்வரும் இலட்சியக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோருகிறோம்!
இந்திய அரசே!
1. மாநில ஆளுநர் பதவியை நீக்கு!
2. மாநில ஆட்சியைக் கலைக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 356 ஐ நீக்கு!
3. படைத்துறை, இந்தியப் பாதுகாப்பு, பண அச்சடிப்பு, வெளிநாட்டு உறவு, விண்வெளி ஆய்வு போன்ற துறைகள் மட்டுமே இந்திய அரசிடம் இருக்க வேண்டும். எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்!
4. வரி வசூல் அனைத்தும் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். மாநிலங்கள் வசூலித்த வரியில் குறிப்பிட்ட விகிதம் மைய ஆட்சிக்கு வழங்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட வேண்டும்!
5. இந்தியாவை இறையாண்மை உள்ள தேசிய இனங்களின் கூட்டரசாக மாற்று!
6. வட மாநிலத்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாக வந்து குவிந்து தமிழர் தாயகத்தை கலப்பின மாநிலமாக்கும் அபாயத்தைத் தடுக்க நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மாநில அரசுகளுக்கு இருக்கும் வெளியார் உள் நுழைவு அனுமதி (Inner Line Permit) அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும்.
7. இந்தியக் கூட்டரசு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், மக்கள் தொகை விகிதம் பார்க்காமல், சம எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
8. மேற்கண்ட புதிய முன்மொழிவுகளை முன்வைத்து இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க, புதிய அரசமைப்பு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். அதில் எல்லா மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் அரசியல் மற்றும் ஆய்வுத் துறை சார்ந்தோர் இடம்பெற வேண்டும்.
9. தமிழினத் தற்சார்பு, தாயகக் காப்பு, தாய்மொழிக் காப்பு ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் மாற்றங்களை தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உரையாடி - ஏற்று - செயல்பட வேண்டும்.
பரப்புரை - மக்கள்திரள் இயக்கம்
--------------------------------------------
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு தழுவிய விரிவான பரப்புரையும் மக்கள்திரள் இயக்கமும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 98408 48594, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
===============================
@TradeShare21@PackiaSe எங்கே முதல்வர்... Only Nadigane...
கீழே குறிப்பிட்ட பெயர்கள் யாரென தெரியுமா
ஜூன் 17 - அனுகீர்த்தனா ( 19 வயது )
ஜூன் 19 - கோபிகா ( 19 வயது)
ஜூன் 20 - ரோஷினி ( 19 வயது)
ஜூன் 20- வெற்றியானந்தம் ( 20 ) தனியார் மயமாகும் தூயமை பணியாளர்கள் .. 10 ரூபாய் 20 ரூபாய் ஆனது...எங்கே முதல்வர்
இன்றைய தவெக தலைவர் விஜய் பேச்சில் இருந்த இந்த மமதை தான் இந்த திமிர் தான் கடந்த தேர்தலில் வென்றதும் திமுகவிடம் இருந்தது இப்பொழுது வென்றதும் இவரிடம் வெளிப்படுகிறது..
கதையே ஒழுங்காக தேர்ந்துக்காமல் பல பிளாப் படங்களை கொடுத்த விஜய் சிறப்பாக ஆட்சியை கொடுப்பார் என்ற மக்களின் நம்பிக்கை பிளாப் ஆகும் பொழுது தான் இந்த திமிர் அழியும்.. அதுவரை ஆடுங்க கம்பெனி.. ஆடுங்க..
முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தப் பிறகுதான், எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பாரென்றால், கடைசிவரை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவே முடியாது. அப்படியெல்லாம் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
'தேவையான நேரத்தில்' ஊடகங்களைச் சந்திப்பார் அண்ணன் சீமான். மற்றபடி, உங்கள் செய்திப்பசிக்கு தீனிப்போடுவதற்கு நாங்கள் கட்சி நடத்தவில்லை.
நேற்றைக்கு முதல் நாள் வாகனப் பரப்புரை முடிந்ததும் ஒரு தம்பி வாகனத்தில் ஏறி வந்து, 1,500 ரூபாய் பணத்தையும், கொஞ்சம் சில்லறைக் காசையும் கொடுத்தார்.
யார் கொடுத்தது? என்று பார்க்கையில், ஒரு அம்மா தனது மகனிடம் கொடுத்துவிட்டு கொடுக்கச் சொல்லியிருக்கிறார் எனப் புரிந்தது.
அந்தம்மாவைப் பார்க்கையில், எளிய தோற்றமாக இருந்ததால் அவர்களுக்கு 1,500 ரூபாய் பெரிய தொகையாக இருக்குமென எண்ணி, அவர்களது பங்களிப்பு இருக்கட்டுமென 500 ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு, இதுபோதுமென மீதித்தொகையை அந்த தம்பியிடமே கொடுத்தேன்.
கொஞ்ச நேரத்தில் அந்த 1,000 ரூபாய் தொகையையும் அம்மா கொடுக்கச் சொன்னதாகச் சொல்லிக் கொடுத்தார் அந்தத் தம்பி. அதற்கு மேல் மறுத்து அவர்களது உணர்வைக் காயப்படுத்திவிடக்கூடாதென எண்ணி, அத்தொகையைப் பெற்றுக் கொண்டோம்.
அதேபோல, வாகனப் பரப்புரைக் கூட்டம் முடிந்ததும் எளிய மக்கள் சிலர் கையைக் குலுக்குவது போல, கையிலே ஒரு 500 ரூபாயைத் திணித்துவிட்டுச் செல்கிறார்கள். ஆரத்தி எடுத்த அம்மா ஒருவர் 500 ரூபாய் காசை அளித்தார்.
காசு கொடுத்து மற்ற கட்சிகள் வாக்குகளைக் கேட்கையில், வாக்குகளைச் செலுத்துகிறோம் எனக் கூறி, காசைக் கொடுக்கிறார்கள் எமது மக்கள்.
மக்களிடமிருந்து மக்களுக்காகவே நாம் தமிழர் அரசியல்! அதனைப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் எமது மக்கள்!
திமுக அரசின் ஏவல் துறையால் அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறோம்!!
குற்றங்களை கட்டுபடுத்த வக்கில்லாமல், குற்றவாளிகளை தப்பவிட்டு போராடுபவர்களை கைது செய்து என்ன பயன்?
@_ITWingNTK#dmkfail
வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நானும் நாம் தமிழர் கட்சியின் உறவுகளும் பங்கெடுக்க வருகிறோம்.
ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகளின் குவியலால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகி, நச்சுக்காற்று, புற்றுநோய் பாதிப்பு போன்ற பல்வேறு விளைவுகளால் வதைபட்டு வரும் வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டமானது டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெறவுள்ளது. நிலம், நீர், காற்று அனைத்தும் மாசுபட்டு ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்புகளை அனுபவித்து வரும் வடசென்னை எண்ணூர் பகுதி மக்களின் குரலாக நான் இக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துக்களைப் பதிவு செய்ய உள்ளேன்.
இக்கருத்துகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துக்கொண்டு கருத்தினைப் பதிவு செய்வதன் வழியே சூழலியல் பாதுகாப்பு மற்றும் மக்களாட்சிக் கடமைகளை ஆற்றிட அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழர்கள் மிக குறைந்த தொகை கொண்ட ஆஸ்திரேலியவில் ஆஸ்திரேலிய அரசு தமிழ் பாரம்பரிய மாதம் கொண்டாடுகிறது!
10கோடி தமிழ் மக்கள் வாழ்கிற இந்தியாவில் இந்திய அரசு கொண்டாடுமா?தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்திற்கு சென்ற 40மக்களவை,18மாநிலங்களவை உறுப்பினர்கள் என்ன செய்கிறீர்கள்?