நடக்கப்போகும் சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டி இலண்டனில் உலகத்தமிழர்களால் நடத்தப்படும் கவன ஈர்ப்பு பரப்புரை ஒன்றுகூடல்....
தமிழினம் விழித்துக்கொண்டது... ✊✊
“தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து தேசியத் தலைவரின் இரங்கல் அறிக்கை.
எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை.
காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது.
துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.
பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது.
ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.
ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து “தேசத்தின் குரல்” என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
#தேசத்தின்_குரல்
தேசியத் தலைவரின் தியாகத்தைப் போற்றி வணங்கிய உலகத்தமிழினம்.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பகுதியில் தமிழருக்கு சொந்தமான நிலப்பரப்பில் தமிழீழத் தாயகத்தின் மாவீரர் துயிலும் இல்லங்களைப் பிரதிபலிக்கும் கல்லறைகள் அமைத்து உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற
மாவீரர் நாள்-2025
குளிரையும்,
பொருட்படுத்தாது பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடி தேசியத் தலைவருக்கும் ,மாவீரருக்கும் விளக்கேற்றினர் தமிழர்கள்.
தேசியத் தலைவரின் அடிபணியாத வீரம் தமிழர் வரலாற்றில் தேசம் ஒன்றுதிரண்டு பதிவுசெய்தது வரலாற்றுப் பதிவான மாவீரர் நிகழ்வாகும்.
உலகப்பரப்பிலேயே அந்நிய தேசத்தில் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தில் நடைபெறும் மாவீரர் நாள் என்பதில் ஒக்ஸ்போட்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் நடைபெறும் மாவீரர் நாள் முக்கியத்துவம் பெறுகிறது .
மாவீரர் வாரம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று இவ்வருட மாவீரர் நாள் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது.
மாவீரர் பெற்றோர் ,மாவீரக்கணவரின் துணைவியர் ,பிள்ளைகள் ,மாவீரர் குடும்ப உறவுகள் ,களங்களில் அவர்களுடன் நின்று களமாடிய போராளிகள், உயிரிலும் மேலான தாய்த்தமிழ் சொந்தங்கள் என ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று கூடி விளக்கேற்றும் இந்நாளில் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் மாவீரர் திருமுகங்கள் வந்து நிழலாடி சுடர் விட்டெரிவதை அவர்
கண்களில் வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் வெளிப்படுத்தி நின்றன.
தமிழீழ விடுதலைக்கனவு நனவாகும் மாவீரர் இலட்சியக்கனவு ஈடேறும்.
-தலைவரின் வரலாறு
தமிழரை வழிநடத்தும்-
———————————
#மாவீரர்நாள்2025
#மாவீரர்_நாள்2025
திராவிடம் குறித்து எனது முதல் காணொளி ☺️
இனிமேல் திராவிடம் பற்றியும் ராமசாமி பற்றியும் சிறு சிறு காணொளிகளாக வெளியிடவுள்ளேன் 😁
உறவுகள் அனைவரும் ஆதரவு தரவும் 🙏☺️
தமிழீழ பெண்கள் படையணி உருவாக்கம்.
1984ம் ஆண்டு முதற்பகுதியில் இருந்து சுதந்திரப்பறவைகள் என்ற பெயருடன் இயங்கிய வந்த பெண்கள் அமைப்பிற்கு 18/08/1985 இதே நாளில்
இந்தியாவின் தமிழகத்தில் திண்டுக்கலில் உள்ள சிறுமலை எனும் இடத்தில் முதலாவது இராணுவப் பயிற்சிகள் ஆரம்பமாகின.
அங்கு அவர்கள் மிகக் கடினமான பயிற்சிகளையும்,சவால்களையும் சந்தித்தார்கள்.தமிழீழத் தேசியத் தலைவரின்வழி எம் மக்களின் விடிவிற்காய் பாதிச் சுமையை தூக்கத்துணிந்தார்கள்.
உலகின் மிகப்பலம் வாய்ந்த பெண் இராணுவம் என்ற வரலாற்றுச் சிறப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுக்கே கிடைத்தது.
பிறநாட்டுப் பெண் இராணுவ அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக விளங்கிய பெண் புலிகளின் இராணுவக்கட்டமைப்பு தனித்தியங்கும் வல்லமையைக் கொண்டிருந்தது.
பெண் போராளிகள்பற்றி எமது தேசியத்தலைவர்
அவர்கள் கூறும்போது “வீரத்திலும் தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண் போராளிகள் தமது வீர சாதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
எம் இனத்தில் நிலையாக வேரூன்றியிருந்த சமூக மூடநம்பிக்கைகள்,பாகுபாடுகளை உடைத்தெறிந்து நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் உழைக்கும் பெண் போராளிகளாக உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர் எமது பெண் போராளிகள்.
இனவிடுதலையுடன் பெண் விடுதலையையும் வென்றெடுப்பதையே இலக்காகக் கொண்டு களமாடினர்.
தரையில் மட்டுமல்லாது கடலிலும் அவர்கள் படைத்த சாதனைகள் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
பகிர்வு
புலவர்.
@RatnaKing20@cera19894507 தம்பி இவனுக்கு அடையாளமே போராளிகளுடன் எடுத்த புகைப்படம் தான் அது மட்டும் தான் இவன் தேசியத்துக்கு செய்த கடமை போராளிகளுக்கு மட்டும் தான் தெரியும் அதன் அவசியம் மாவீரர் பணிமனை என்பது நமது தேசிய கட்டுமானம் இவன் சிங்களத்துக்கு வால் பிடிக்கிற ஒரு தேசத் துரோகி 💛❤️
“கடலினில் காவியம் படைப்போம்”
எனும் பாடலைப் பாடி தேசியத் தலைவரால் பாராட்டுப்பெற்ற பாடகரும், ஆகாயக் கடல்வெளிச் சமரில் வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் சௌகான் அவர்களின் தந்தையுமான
ஈழத்தின் புகழ்பெற்ற, வானொலி, மேடை, திரைப்படப் பாடகர் ஸ்ரனி சிவானந்தன் அவர்கள் 2023 ஒக்ரோபர் 15ம் திகதி காலை, கிளிநொச்சியில் காலமானார்.
இவருக்கு எமது கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
#முதல்_பெண்_மாவீரர்#2ம்_லெப்_மாலதி
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து #சயனைட் உட்கொண்டு விடுதலைப்போரில் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
வல்லாதிக்க #இந்திய_இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் #தமிழர்_மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது
1987 ஐப்பசி 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக #துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2ம் லெப். மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் #முதல்_பெண்_மாவீரர் 2ம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது.
#வீரவணக்கம்
கேசவன் சண்டைப்படகு கரை திரும்பவில்லை.கரையில் படகுகாவி வெறுமையாக காத்துக்கிடந்தது.
மன்னார்-இந்திய கடல் ஊடான நடவடிக்கைக்காக எமது சண்டைப்படகுகள் இரவோடிரவாக படகுகாவி மூலம் விசுவமடு,வட்டக்கச்சி ஊடாக மன்னாருக்கு இழுக்கப்பட்டது.
வேங்கை,போர்க்,எரிமலை போன்ற பெரிய படகுகளை நகர்த்துவது சிரமம் என்பதால் அருணா,கேசவன்,சுகி போன்ற சண்டைப்படகுகளையே மன்னாருக்கு அதிகம் நகர்த்துவோம்.
அன்றும் வழமைபோல மன்னாருக்கு நகர்த்துவதற்காக அளம்பில் பகுதியிலிருந்து கேசவன் படகு தயாரானது.
இங்கே கேசவன் படகு பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பொன்றைப் பகிர்ந்துகொள்வது
முதன்மையாகின்றது.
ஓயாத அலைகள்-1 முல்லைத்தீவு படைத்தள அழிப்பின்போது சண்டைப்படகான நெடுமாறன் படகின் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு அதே கடற்சண்டையில் காவியமான கடற்புலி மேஜர் கேசவன் நினைவாக அவனின் பெயர்தாங்கி வலம்வரத் தொடங்கியது கேசவன் சண்டைப்படகு.
லெப் கேணல் நாவரசன்,லெப் கேணல் வள்ளுவன்,லெப் கேணல் பழனி,லெப் கேணல் சுயரூபன்,மேஜர் ஆழியன் உட்பட பல திறமையான கடற்புலி மாவீரர்கள் கடற்போரியல் கட்டளைத் தளபதிகளாக ஏறிநின்று போரிட்ட கடற்புலிகளின் போர்வாளாக சண்டைக்களங்களில் உறுமித்திரிந்தது மேஜர் கேசவன் நினைவாக பெயர் பொறிக்கப்பட்ட கேசவன் சண்டைப்படகு.
அதில் பொருத்தப்பட்டிருந்த முன்னணி ஆயுதமானது ஓயாத அலைகள்-1 முல்லைச்சமரின்போது,
முல்லைக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட றணவிறு எனும் பீரங்கிக்கலத்தில் இருந்து எம்மால் கழட்டியெடுக்கப்பட்ட 14.5 mm இரட்டைக்குழல் கனரக ஆயுதமாகும்.
200 குதிரைவலுக்கொண்ட மூன்று ஜமகா இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மணிக்கு 40 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடிய கேசவன் சண்டைப்டகில்,
ஓட்டியாக மேஜர் காமினியும்,
14.5mm இரட்டைக்குழல் துப்பாக்கியின் பிரதான சூட்டாளனாக மேஜர் சோழனும்,உதவியாளர்களாக
2 ஆம் லெப் இசைவாணன், வீரவேங்கை முதல்வன், வீரவேங்கை செம்பியன், ஆகியோரும்,
இயந்திரப் பொறியியலாளனாக மேஜர் நகுலனும், உதவியாளனாக வீரவேங்கை இனியவனும்,
தொலைத்தொடர்பாளனாய் கப்டன் இளநிலவனும்,
50 கலிபர் துப்பாக்கிகளின் சூட்டாளர்களாய், மேஜர் குகன்,மற்றும்
லெப் பாவேந்தனும்,
PKLMG துப்பாக்கிகளின் சூட்டாளர்களாக லெப் நாகமணி,லெப் சொற்கோ,
லெப் தமிழ்நம்பியும்,
RPG உந்துகணை செலுத்தியுடன்
2 ஆம் லெப் மாறனும்,
படகேற...
அன்றைய மன்னார் கடல்வினியோக நடவடிக்கைக்கான பாதுகாப்புத் தொகுதிக்கான கட்டளை அதிகாரியாக படகேறினான் லெப் கேணல் நிரோஜன்.
வழமையாக நிரோஜன் தொகுதிக் கட்டளை அதிகாரியாக படகேறும் கடற்சண்டைகளில் வினியோகப் படகுகள் பத்திரமாக கரைசேரும் எனும் நம்பிக்கை போராளிகளிகளுக்கு ஏற்பட்டிருந்தது.
மருந்துப்பொருட்களுடன் வினியோகப் படகுகள் கரைநோக்கி வந்துகொண்டிருந்தன.
வாடைக்காற்று வீசியடிக்க
கரையினில் அலைகள் மௌனமாக கரைந்துகொண்டிருந்தது. ஆனால் உயரக்கடலில் அலைகள் தாண்டவமாடியது.
இப்படியானதொரு கடல்வினியோக நடவடிக்கையொன்றில்தான் லெப் கேணல் நாவரசன் உட்பட புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மேஜர் ஜாக்கர் மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்த
மேஜர் சிந்தனைச்செல்வன் எனப் பல போராளிகளை
முன்னர் இதே கடற்பரப்பில் இழந்திருந்தோம்.
07/10/1999 அன்றும் அதுபோலவே கார்முகில்கள் சூழ்ந்திருக்க இருளை ஊடறுத்து பயணித்துக் கொண்டிருந்த வினியோகப் படகுகளை திடீரென சிறிலங்கா கடற்படை தாக்கத்தொடங்கியது. காரிருள் சூழ்ந்ததனால் ரேடார் கருவிகளில் முற்கூட்டியே எதிரியின் இலக்குகளை கண்காணிப்பது சிரமமானதால் வினியோகப் படகுகள் தாக்குதலுக்குள்ளான பின்னரே சண்டைப்படகுகள் எதிரியின் இலக்குகள் மீது தாக்குதலை தொடங்கியிருந்தது.
தொகுதிக் கட்டளை அதிகாரியான நிரோஜனின் எண்ணமெல்லாம் வினியோகப்படகுகளை பத்திரமாக மீட்டெடுக்க வேண்டுமென்பதே.
அதற்கான முயற்சியில் கடைசிவரை தாக்குதலை வழிநடத்திக்கொண்டிருந்த நிரோஜனின் அந்தக் கம்பீரக்குரல் மன்னார் கடலில் ஓய்ந்துபோனது.
அவனுடன் கூடவே 14 கடற்புலி வீரர்களும் அந்தக்கடல் மடியில் கண்ணுறங்கிப்போயினர்.
கேசவன் சண்டைப்படகு கரை திரும்பவில்லை.
கரையில் படகுகாவி வெறுமையாக காத்துக்கிடந்தது.அருகில் நிரோஜனின் மோட்டார் சைக்கிள்.
கடற்போரியலில் களநாயகனாக வலம்வந்த நிரோஜனின் இழப்பும் கேசவன் சண்டைப்படகின் வலிமையும் பின்னாளில் நாம் எதிர்கொண்ட கடற்சமர்களில் எல்லாம் எம்மால் உணரப்பட்டது.
கடற்சண்டைகளின் போது சண்டை இறுகும் நெருக்கடியான நேரங்களில் சிறப்புத்தளபதி சூசையண்ணை அடிக்கடி கூறுவார்
நிரோஜனைப் போல முடிவெடுக்கப்பழகுங்கள்...
நிரோஜனைப்போல யோசியுங்கள்...
வெல்லப்பட முடியாத தளம் என உலகம் கணித்த ஆனையிறவு படைத்தளம் எம் காலடியில் வீழ்ந்தபோது அதன் வெற்றிக்காக கடல்மடியில் கண்ணுறங்கிப்போன
#லெப்_கேணல்_நிரோஜன் உட்பட்ட கடற்புலிகளின் உயிர்த் தியாகங்களே எம் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துப்போனது.
நினைவுகளுடன்...
புலவர்