தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்குகிறேன் என்று சவால் விட்டு பதவியில் அமர்ந்தவர் எனது நண்பர் பிடிஆர் தியாகராஜன். அதற்காக கடுமையாக முயற்சி செய்தார். ஓரளவு செய்திருப்பார் என்றே நம்புகிறேன்.
மகன் 30 ஆயிரம் கோடி, மருமகன் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார்கள் என்ற உண்மையை சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை நிதித்துறையிலிருந்து மாற்றி, விருப்பமே இல்லாத தங்கம் தென்னரசுவை அத்துறையில் நியமித்து, தலைக்கனம் பிடித்த ஒரு அதிகாரியை நிதி துறை செயலராக போட்டு, தமிழகத்தை மீளமுடியாத கடன் சுமையில் தள்ளி 8 கோடி மக்களுக்கு பேரும் துரோகத்தில் இழைத்திருக்கிறது திமுக மற்றும் அதன் தலைவர் முக ஸ்டாலின்.
வாங்கிய கடன்கள் மக்கள் நலத் திட்டங்களுக்கு அல்ல. தேவையற்ற பாலங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை செய்து அதில் 25 முதல் 35 சதவிகிதம் வரை லஞ்சம் வாங்குவதற்காகவே கடன் வாங்கப்பட்டது.
இப்படி கடன் வாங்கியதில் பெரும் பொறுப்பு, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, சேகர் பாபு, ஆகியோரை சேரும். இப்படி ஊழல் செய்த பணத்தில்தான் சபரீசன் 150 கோடிக்கு வாட்ச் வாங்க முடிந்தது. முக ஸ்டாலின் 3 கோடி காரில் பயணிக்க முடிந்தது. செந்தாமரை பள்ளிக்கூடங்களை வாங்கி குவிக்க முடிந்தது. உதயநிதி திரைப்படங்களில் பணத்தை கொட்ட முடிந்தது.
இவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேர் மீதும் தமிழக அரசு ஊழல் வழக்குகளை தொடர வேண்டும். திமுகவோடு கள்ளக்கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இதை ஒருபோதும் செய்திருக்க மாட்டார். தவெக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
தமிழகத்துக்கு திமுக மாபெரும் தீங்கு. கொடிய விஷக்கிருமி. தப்பித்தவறிக்கூட திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக் கூடாது.
ஏன் ஒரு வார்த்தை 'கஞ்சா பூ கண்ணு' 'கஞ்சா வெச்ச கண்ணு' வரிகள், சமூக கோட்பாடுகளுக்கு மீறிய ஆபாசங்களை படங்களில் தவிர்க்க வேண்டும் என கூறமாட்டீர்களா?! @beemji@TVKVijayHQ. @CMOTamilnadu@Actor_Vijay
மனம் பதறுகிறது!
சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சொல்லொணாத் துயத்திற்கு ஆளாக்கி இருப்பதோடு இது, இச்சமூகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் சமீபத்திய தரவுகள் 69 சதவீத குழந்தைகள் உடல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர் என்றும், அதில் 48.7 சதவீதம் குடும்ப உறுப்பினர்களாலும், 34 சதவீதம் பிறராலும் நிகழ்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 96 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக 'Child Rights and You' அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், காவல்துறையின் மெத்தனமான விசாரணை, குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைப்பது மற்றும் வழக்குகளின் நீண்டகால தாமதம் போன்றவை தொடர் குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை உறுதி செய்யவும்,
தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான சமூகக் காரணிகளைக் கண்டறிய, இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும்.
2.‘சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் அதிகார வரம்பு மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் குறித்து அண்மையில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும்.
3.பெண்கள் &குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும்.
4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு, இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
5.பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குழந்தை நட்பு விசாரணை மையங்கள் (Child-Friendly Investigation Centres) மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும்.
6.பாலியல் வன்முறைகளைத் தடுக்க பள்ளி நிலை முதலே "மரியாதையான உறவுகள்" (Respectful Relationships), சமத்துவம், சம்மதம் (Consent), பாலின மரியாதை மற்றும் வன்முறையற்ற உறவுகள் குறித்த கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதற்காக செயல்படுத்தப்படும் Respectful Relationships Education போன்ற திட்டங்கள் பள்ளி சூழலில் பாலின மரியாதை மற்றும் வன்முறைத் தடுப்பு கல்வியை வலுப்படுத்துகின்றன.
கல்வி, சமூக மாற்றம், தொழில்நுட்ப கண்காணிப்பு, மனநல ஆதரவு, விரைவு நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித கண்ணியத்துடன் மறுவாழ்வு வழங்கும் ஒருங்கிணைந்த அரசுக் கொள்கை அவசியம். உலகின் பல நாடுகள் குற்றத்திற்குப் பிந்தைய தண்டனையை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாத சூழலை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளன. தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
@Neelam_Culture
CrimeNews || கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு பகுதியில் கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை அளித்த தவெக பிரமுகரை கடுமையாக தாக்கி காவல்துறையில் ஒப்படைத்த மக்கள்
கர்ப்பிணி பெண் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது பா*யல் தொல்லை அளித்ததாக புகார்; பெண்கள் தாக்கும் போது மன்னித்து விடுங்கள் என கெஞ்சிய தவெக பிரமுகர் யோகேஸ்வரன்
StopHarassment | PoliceAction
#CrimeNews #TamilNaduNews #StopHarassment #PoliceAction #TamilNews #NewsTamil24x7
Exodus from @BJP4TamilNadu ?! So policy, ideology க்கெல்லாம் கட்சியில் யாரும் சேருவதில்லை?! Its a matter of convenience or a blind matter of hero worship?!
@CMOTamilnadu சிங்கப்பெண் அதிரடிபடை என்ன செய்யப் போகிறது என்பதை நாம் இன்னும் பார்க்கவில்லை.ஆனால் இப்படி பெண்களுக்காக அமைத்ததே சிறப்பு. உள்ளபடியே நன்றி பெருகுகிறது மனதில். @tnpoliceoffl
@CMOTamilnadu@Keerthana4VNR Hon cm this is a menace for us since many years. குப்பை கிடங்கு just behind our factories. And the panchayat burns the waste causing so much health hazard. Cm sir come to our rescue pl. Kurubapalayam,Muthugoundenpudur,Sulur tk. @Actor_Vijay
கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தனர்! சபாஷ்! பெற்றோருக்கும் தெரியாது. ஆசிரியர்களுக்கு தெரிந்தாலும் கண்டித்தால் பிரச்சனை! Hats off to the Police. Pl do the rounds.
@CMOTamilnadu கோவையில் இன்று ஒரு பெண்கள் பள்ளி பெண் குழந்தைகளும் ஒரு ஆண் பிள்ளைகள் பள்ளி மாணவர்களும் வகுப்பு முடிந்தபின் வெளியே சந்தித்து கை கோர்த்துக் கொண்டும் பேசி சிரித்துக் கொண்டும் (வாடிக்கை) இன்று @policecbecity விசாரித்தபோது பெண் குழந்தைகள் பெற்றோருக்கு சொல்ல வேண்டாமென
Is @CMOTamilnadu aware of this?! முதியோர் ஓய்வூதியம் மற்றும் மகளிர் உதவித்தொகை சென்ற மாதம் அனைவருக்கும் வந்து சேரவில்லை. Please expedite sir @TVKVijayHQ
All leaders of @AIADMKOfficial யோசிக்க வேண்டும். மனிதம் இருக்கும் கட்சி உங்க கட்சிதான். அதை அழிக்க வேண்டாம். என்ன சாதித்து விடப் போகிறீர்கள் ஒற்றுமையில்லாமல் தனியாக?!
@EPSTamilNadu ஐயா நீங்கள் தான் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளைச் சேர்ந்த மகேந்திரன், அதிமுக வர்த்தக அணியின் மாவட்ட இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், "கட்சி மீண்டும் ஒன்றுபட வேண்டும்" என வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுவிட்டு, பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#ADMK | #VikatanReels