இவரை போன்ற தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என பண்பாட்டு வரலாறு அறியாதவர்களுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியுள்ளது. சில விவரங்களை சொல்ல இதை வாய்ப்பாக பயன்படுத்தலாம்
பிரியாணி கடையில் விநாயகர் படம் வைத்த தமிழனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
எந்த சாமானியனும், மனம் புண்பட்டதென புகார் கொடுக்கவில்லை. ஆனால், சங்கிகள் கொடுத்த புகாரின் பேரில் சிறைப்படுத்தப்பட்டார் அவர்.
வெறும் பேனர் வைத்ததற்காக சிறை. ஏன் இது நடந்தது? இது எங்கு இட்டு செல்லும்? என யோசித்தால், நாளை இறைச்சி உணவு வைத்ததற்காக வடநாட்டில் நடப்பது போன்று அடித்தே கொல்லப்படுவோம். ஆட்டிறைச்சி வைத்திருந்தற்காக இதுவரை நூற்றுக்கணக்கானோர் சங்கிகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை அரசியல் தமிழ்நாட்டில் துளிர் விட்டதன் அடையாளமே நெல்லையில் நடந்த கைது.
தமிழர்களுக்கு இறைச்சி உணவு எதிரானதா அல்லது பார்ப்பனர்களுக்கு எதிரானதா?
சைவ உணவு யாரின் அரசியல்?
அனைத்து தமிழர்களும் இறைச்சி உணவை ஏற்பவர்கள். விநாயகர் சதூர்த்திக்கு இறைச்சி எடுக்காதவர்கள் யார்? எப்போதிருந்து இந்த வழக்கம் வந்தது? இந்து மத பண்டிகைக்கு அசைவம் தடை செய்யப்பட்டதெனில், தீபாவளிக்கு கசாப்புகடைகள் ஏன் நிரம்புகின்றன? பிரியாணி கடைகள் தீபாவளிக்கு எப்படி கல்லா கட்டுகின்றன?
தமிழர்களுக்கு விழா எனில் இறைச்சி இல்லாமல் கொண்டாட்டம் அமையாது. விநாயகர் சதூர்த்தி தமிழரின் விழா அல்ல, அது வட இந்திய பார்ப்பன-பனியா கூட்டத்தின் கும்பல் கலாச்சாரம், இசுலாமியர்களுக்கு எதிரான சங்கிகளின் வன்முறைக்கான வடிகால். இதை வெகுசமீப காலம்வரை தமிழ்நாடு கொண்டாடியதில்லை. விநாயகர் சதூர்த்தி போன்றவற்றை நாம் விடுமுறைநாளாக மட்டுமே கடந்து சென்றதுண்டு. கொழுக்கட்டையும், கறிசோறும் இயல்பாக எடுத்துக் கொண்டுள்ளோம் நாம்.
இன்றைக்கு, இந்த பண்டிகையெல்லாம் வணிகமயமாக, இந்துத்துவ மயமாக மாற்றி நம் மீது திணித்துள்ளனர். இதை நாம் கேள்வி எழுப்பினால், 'இந்து மதத்தை புண்படுத்தி, மத கலவரத்தை உருவாகும்' என சங்கிகள் சொல்வதை இந்த நபர்கள் வேறுவகையில் சொல்கிறார்கள். இவர்கள் பேசுவது மதசகிப்புத்தன்மையல்ல, மாறாக, மென்மையான-சங்கித்தனம்.
சனாதன-இந்துத்துவ அரசியலை கேள்வி கேட்டால், 'முஸ்லீமை கேட்பாயா, கிருஸ்துவத்தை கேட்பாயா' என கூப்பாடு போடுகிறார்கள். இந்த மதத்தை சார்ந்தவர்கள், இறைச்சி உணவிற்காக, (பன்றி இறைச்சிக்காக, மாட்டு இறைச்சிக்காக) மற்றவர்களை அடித்துக் கொலை செய்வதில்லை, ஆட்சி அதிகாரம் செய்வதில்லை, சட்டம் இயற்றுவதில்லை. அப்படி செய்வார்களெனில் அச்சமயம் இவர்களை நாம் எதிர்த்து நிற்கத்தான் செய்வோம்.
இது 'இந்து தேசம்' என்பதால் இறைச்சி சாப்பிடாதே என்கிறார்கள் சங்கிகள், அந்த கும்பலுக்கு ஒத்து ஊதுகிறார்கள் இந்த அரைவேக்காடுகள்.
இது 'தமிழ்தேசம்' என்பதால், உணவை அரசியலாக்கதே என்கிறோம் நாம். ஏனெனில் நாம் தமிழ்த்தேசியவாதிகள், சனநாயகவாதிகள்.
தமிழர் உணவு என்பது இறைச்சி உணவு. எங்கள் சாமிகள் இறைச்சியை ஏற்கும்.
ஆரிய பார்ப்பன சனாதனிகள் உணவு வெஜிட்டேரியன் உணவு. சனாதன சாமிகள் இறைச்சியை மறுக்கும்.
இறைச்சி உணவு அவமானமல்ல, தீட்டல்ல, தீண்டத்தகாததல்ல, கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதல்ல. இதுவே தமிழர் பண்பாடு. தமிழன் நிலத்தில் தமிழர் பண்பாட்டிற்கே முன்னுரிமை.
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? @CMOTamilnadu@Chief_Secy_TN
காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைக்க முயல்ந்த மம்தா & கெஜ்ரிவால்
வேண்டாம் நீங்களும் இந்த கூட்டணியில் வாங்கனு இந்திய கூட்டணியை பலப்படுத்திய MKS
காங்கிரஸ் என்னும் முதுகு குத்திகள்