முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம் அன்னூர் வடக்கு,தெற்கு ஒன்றியங்கள் மற்றும் அன்னூர் பேரூர் கழகம் சார்பாக அன்னூரில் கழகக் கொடியேற்றி தலைவர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
அன்னூர் பேரூர் கழகச் செயலாளர் திரு பரமேஸ்வரன் அவர்கள், அன்னூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு தனபாலன் அவர்கள், அன்னூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு பழனிசாமி அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி இந்நிகழ்வை சிறப்பாக கொண்டாடினோம்.
#kalaignarforever🖤❤️
மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.
107 எம்.எல்.ஏக்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.
ஆனால் என்ன நடந்தது?
உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள். அந்த “underground operation” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது .தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பா.ஜ.க. ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று.
அதனால் தான் நாங்கள் TVK அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். IUML, VCK அரசில் இணைந்தனர். உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது.
இப்போது மூன்று
அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக TVK-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும்.
மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!