தங்களின் பேராதரவுடன் 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த வருடமும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் நண்பர்களே.
🙏🙏🙏🙏🙏🙏🙏
With your immense support, we are stepping into our fourth year. We request that you continue to extend your support this year as well, friends.
நன்செய் அறக்கட்டளை சார்பில் சேலம் மாநகர மக்களுக்கான இலவச அமரர் ஊர்தி சேவை மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு @logintvk அவர்களின் முன்னிலையில் 25.07.2026 முதல் தொடக்கம். இலவசமாக வாகனம் வழங்கிய @Triveni & இச்சேவைக்கு உறுதுணை புரிந்த சேலம் BNI Apex உறுப்பினர்கள் அனைவரும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️
#NanseiTrust #TamilNadu #நன்செய் @BNIindia@BNI_Foundation@BNI_official_pg
#தவெக அரசின் கடன் - சில கேள்விகள் 💥💥💥
****
திமுக கடன் வாங்கி தமிழ்நாட்டை நாசம் ஆக்கி விட்டது.. நாங்கள் இப்போது அரசின் வருவாயை அரசின் கஜானாவுக்கே கொண்டு வந்துவிட்டோம்..இனி அரசு கடன் வாங்க தேவை இல்லை என போன மாசம் கூட முழங்கிய #தவெக அரசு..
கடந்த மூன்று மாசத்தில் ₹20,881 கோடி கடன் வாங்கி உள்ளது
அதில் ₹14,618 கோடி வட்டிக்கு போய்விட பாக்கி ₹6,263 கோடி நிகர கடன்.
மே மாதம் தான் பதவி ஏற்றோம். அதனால் ஏப்ரல் கடன் எங்க பொறுப்பு இல்லை என சொல்பவர்களுக்கு..
🔹ஏப்ரல் மாத கடன் மே மாசம் அரசின் கைக்கு வரும்
🔹மே மாத கடன் ஜூன் மாசம் அரசின் கைக்கு வரும்
🔹ஜூன் மாத கடன் ஜூலை மாசம் அரசின் கைக்கு வரும்
ஆக மொத்தம் அந்த மூன்று மாச கடனும் தவெக அரசின் கைகளுக்கு தான் வந்து இருக்கிறது.
அதை என்ன செய்கிறார்கள்?
🔹பட்ஜெட் இதுவரை போடவில்லை
🔹புதிதாக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை
🔹புதிதாக எதற்கும் நிதி ஒதுக்கவில்லை
🔹புதிதாக எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை
அப்படி இருக்க 60 நாளில் 6,000 கோடி கடன் எதற்காக என்பது விளங்கவில்லை.
***
முந்தைய திமுக அரசு தான் கடன் வாங்கியது.. அது தான் இப்போது வந்திருக்கிறது. நாங்கள் புதியதாக கடன் எதுவும் வாங்கவில்லை என ஒரு புது டிசைன் விளக்கம் எடுத்து வரக்கூடிய நண்பர்கள்..
திமுக போட்ட டெண்டர்களை எல்லாம் முக்கியமான பேப்பர் இல்லை என ரத்து செய்தது போல திமுக கேட்ட கடன்களையும் வேண்டாம் என ரத்து செய்து இருக்கலாமே? ஏன் செய்யவில்லை என்கிற விளக்கத்தையும் சொன்னால் நல்லது.
***
ஒரே மாசத்தில் அரசின் வருவாயை பெருக்கிவிட்டோம். அரசின் கஜானாவுக்கு கூடுதலாக வருவாயை கொண்டு வந்தோம். இனி கடன் வாங்க தேவை இல்லை. என்று ரீல்சும் வீடியோவும் முழக்கங்களும் செய்தது எல்லாம் எதற்காக?
அண்ணனே தவறு செய்தாலும் தட்டி கேட்போம் என சொன்ன #தவெக நண்பர்கள், கூடுதல் வருவாய் வந்ததாக சொன்னது எல்லாம் பொய்யா என கேள்வி கேட்பார்களா?
***
திமுக ஒவ்வொருவர் மீதும் கடன் வைத்து விட்டது என புலம்பிய தவெக இப்போது கூடுதலாக எதற்காக கடன் வாங்கியது என விரிவாக எடுத்து சொல்வார்களா?
அரசு எந்த புதிய திட்டமும் இந்த மூன்று மாதங்களில் அறிவிக்காத நிலையில், இந்த கடன் எதற்காக வாங்கப்பட்டது என விளக்குவார்களா?
தவெக கட்சியில் நிறைய படித்தவர்கள் பட்டதாரிகள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களாவது இந்த கடன் எதற்காக என யோசிப்பார்களா?
இவை எல்லாம் எனக்குள் எழும் கேள்விகள்
யாரேனும் பதில் சொல்வார்களா? பதில் சொல்லும் அளவுக்கு நேர்மையான யாராவது இருக்கிறார்களா?
Waiting 🙏🙏🙏
ஒரு சந்தேகம்?
இந்த எக்ஸ்போ நடத்துறவங்க கிட்டத்தட்ட 100-200 கடை போடறாங்க .. avg 150 கடைக்கு 10000 வச்சாலும் 15 லட்ச ரூபாய் குறைந்தபட்சம் ஸ்டால் மூலமா வரும் ..
அதுல கல்யாண மண்டபம் ரெண்டு நாளைக்கு 6 லட்சம் .. fabrication ஒரு 3 லட்சம். ப்ரமோ ஒரு 1 லட்சம் போட்டாலும் 2 நாளைக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் லாபம் வரும்ல .. இதுக்கு அவங்க நிச்சயமா எந்த ஒரு பில்லும் தர போறது இல்ல ?.. அதுக்கு வரி கட்ட போறதும் இல்ல ? .. மாசத்துக்கு 4-5 எக்ஸ்போ பண்றாங்க .. எப்படி பார்த்தாலும் ஒரு பத்து லட்சம் ரூபாய் குறைந்தபட்சம் வரி இல்லா வருமானம் வரும் ..
அடுத்து இவ்வளவும் வெறும் எக்ஸ்போ ஆர்கனைசருக்கு மட்டும் .. இப்ப அங்க கடை போடறவங்க மூதலீடு எப்படி பார்த்தாலும் ஒரு 25 லட்ச ரூபாய்க்கு இருக்கும் .. இதுக்கு எல்லாம் சேல்ஸ் டாக்ஸ் கட்ன மாதிரி தெரியலை .. ஏன்னா கையில் எழுதுன பில் தான் தருவாங்க ?.. ஒரு மாசத்துக்கு கோடிகள்ல வியாபாரம் வரி கட்டாம நடக்குது ..
இப்ப இன்ஸ்டாவுல ஏன் எல்லாரும் எக்ஸ்போ நடத்துறேனு கிளம்பிட்டாங்கனா இந்த உடனடி வரி இல்லா வருமானம் தான் .. அப்புறம் ஸ்டால் போடறவங்களுக்கு வியாபாரம் நடக்கலனாலும் கேட்க முடியாது ...
இதெல்லாம் அரசு துறைகள் கவனிக்கறாங்களா ....
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
புதிய ஆட்சி வந்து 2 மாதங்கள் ஆகிறது.
மின்வெட்டு போன்ற பல பிரச்சினைகள் இருந்தாலும் எந்த கட்சியையும் சாராத மாற்றம் கேட்டு TVK க்கு வாக்களித்த படித்த இளையதலைமுறையிடம் இந்த ஆட்சி பற்றி குறைஇல்லை.எல்லாரும் ஊழல் குறைந்து அரசு கஜானவிற்கு பணம் அதிகம் வருவதாக (உண்மயில்லை என்றாலும்)நம்புகிறார்கள்.திமுக இனி மேல் பெரியார் இடஒதுக்கீடு பெண்கள் நலம் இவற்றை சொல்லி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.இளைஞர்களிடம் எதை சொல்லி (எது வேணாலும்)வெற்றிபெற முடியும் என்று சிந்தித்து செயல்பட்டால்தான் கட்சி உயிர்ப்புடன் இருக்க முடியும்.
@withkaran நல்லவேளை அலுவலகவேலையாக சிலிகுரி டார்ஜிலிங்கில் ஒரு வாரம் டேரா...
அந்த சகிப்புத்தன்மை எனக்குமில்லிங்க....
பசங்க அனுப்பும் சில வீடியோக்கள பாக்கும்போது அப்பாடா தப்பிச்சோம் இனி இந்த கூத்துகள் நடக்காது என்கிற நிம்மதி எட்டிப்பாக்குது ...
பாடகர் கமல்ஹாசன்
-----
கமல்ஹாசனை நடிகராகதான் பலரும் அறிகிறார்கள். அவர் அரசியலுக்கு வந்த பின்னரும் கூட.
‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆரையும், ‘சவாலே சமாளி’ படத்தில் சிவாஜியையும், ‘அன்பு தங்கை’ படத்தில் ஜெயலலிதாவையும் ஆட்டுவித்த நடன இயக்குநர் அவர்.
எண்பதுகளின் தொடக்கத்தில் சகலகலாவல்லவனாக லட்சங்களை சம்பாதித்துக் கொண்டிருந்தபோது திடீரென பிரேக் எடுத்து ஹாலிவுட்டுக்கு சென்று மேக்கப் ஜாம்பவானான மைக்கேல் வெஸ்ட்மோரிடம் மேக்கப் அசிஸ்டெண்ட்டாக வேலைக்கு சேர்ந்தார். பின்னாளில் அதே வெஸ்ட்மோர், கமலுக்கு ‘இந்தியன்’, ‘தசாவதாரம்’ படங்களுக்கு அரிதாரம் பூசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரும் பிரபலம் பெற்று, மஞ்சள் வெளிச்சத்தில் குளித்தவர்கள் டீனேஜை எட்டும்போது பெரும் வாழ்வியல் சிக்கலுக்கு உள்ளாவது உண்டு. சினிமாத்துறையிலேயே தொடர்வதா, படிப்பதா என்று இரு பாதைகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் வரும். படிக்கப் போகிறவர்களை நடிப்பு கைவிட்டு விடும். படித்துக் கொண்டே நடிப்பது இண்டஸ்ட்ரிக்கு ஆகாது.
கமல் கொஞ்சம் படித்தார். படிப்பை தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கே வந்தார். ரெண்டுங்கெட்டான் வயதில் அவருக்கேற்ற கதாபாத்திரங்கள் அன்றைய கதைகளில் இல்லை.
நடிப்புக்காக கூடுதலாக மேற்கொண்ட சண்டைப்பயிற்சி, நடனப்பயிற்சி ஆகியவற்றின் காரணத்தால் ஏதோ ஒருவகையில் சினிமாவில் நீடிக்கலாம் என்கிற எண்ணம் கொண்டார்.
தங்கப்பன் மாஸ்டருக்கு நடன உதவியாளராக அன்றைய பெரும் நட்சத்திரங்களை ஆட்டுவித்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திரையில் முகம் காட்டவும் தவறவில்லை. 1971ல் ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தின் ‘தேவமைந்தன் போகின்றான்’ பாடலில் சிலுவை சுமக்கும் இயேசுகிறிஸ்து, நம்ம கமல்ஹாசன்தான். நடன இயக்குநர் தங்கப்பன் இயக்கிய இப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தபோது கமலின் வயது வெறும் பதினேழுதான்.
சினிமாதான் எதிர்காலம் என்று முடிவு செய்துவிட்ட கமலுக்கு, சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்தால் போதுமென்ற மனம் இருந்தது. அதிகபட்சமாக இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இணைவதுதான் அவரது அன்றைய இலட்சியம். இதற்காக சிபாரிசுக்கு எம்.ஜி.ஆரிடம் போனபோது (எம்.ஜி.ஆருக்கும் கே.பாலச்சந்தருக்கும் அப்போது பனிப்போர் உச்சத்தில் இருந்ததை ஒருவேளை கமல் அறியவில்லையோ என்னவோ) ‘நீ அழகன், நடிப்புதான் உன் துறை’ என்று கமலை நடிப்புத்துறைக்கு திருப்பி விட்டவர் எம்.ஜி.ஆர்தான்.
கே.பாலச்சந்தர் அலுவலகத்துக்கு போய் வந்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் கமலுக்கு பாலச்சந்தரின் வலதுகையான அனந்துவின் அறிமுகம் கிடைத்தது. அவருடனான உரையாடல்கள் கமலின் சினிமா குறித்த பார்வையை சர்வதேச அளவுக்கு விரிவாக்கியது.
கமல்ஹாசனின் ஆரம்பக்கால திரையுலக நாட்களில் அனந்துவின் ஆலோசனைகள்தான் அவரை சகலகலாவல்லவனாக உருவெடுக்க வைத்தது. உலக சினிமாக்களை கமலுக்கு அவர் அறிமுகப்படுத்தி வேறொரு உலகத்தைக் காட்டினார். சினிமாவின் 24 துறை சார்ந்த அறிவும் இன்று கமல்ஹாசனுக்கு இருப்பதற்கு அனந்துவே முக்கியமான காரணம்.
அனந்துவை போல ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் என ஏராளமானோர் கமல்ஹாசனின் வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமைந்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கு வந்த புதிதிலேயே கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். ‘சங்கர்லால்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த டி.என்.பாலு பாதி படத்திலேயே காலமாகி விட்டதால், மீதிப்படத்தை கமல்ஹாசனே இயக்கினார். தன்னுடைய நூறாவது படமான ‘ராஜபார்வை’க்காக தயாரிப்பாளராகவும் மாறினார். 1975லேயே ‘அந்தரங்கம்’ படத்தின் ‘ஞாயிறு ஒளிமழையில்’ பாடல் மூலமாக பின்னணிப் பாடகரானார். அதில் தொடங்கி, இப்போது ‘விக்ரம்’ படத்தின் ‘பத்தல பத்தல’ வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
பாட ஆரம்பித்த தொடக்கத்தில் ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்றவர்களின் தாக்கம் கமல்ஹாசனின் சொந்தக்குரலில் இருந்தது. இளையராஜா இசையில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் அவர் பாடிய ‘நினைவோ ஒரு பறவை’தான் பின்னணிக் குரலில் கமல்ஹாசனுக்கு திருப்புமுனை. கமலுக்கு என்றொரு தனித்துவக் குரலை அடையாளப்படுத்திய பாடலும் அதுவே.
தான் நடிக்கும் படத்தில் மட்டுமின்றி பிற நடிகர்களுக்கும் கமல் பின்னணி பாடியிருக்கிறார். ‘ஓ மானே மானே’ படத்தில் மோகனுக்காக அவர் பின்னணி பாடிய ‘பொன்மானே தேடுதே’ ஒரு அட்டகாசமான மெலடி. குரலிலேயே தனி ஸ்டைலை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் கமல். ‘உல்லாசம்’ படத்தில் அஜித்துக்காக ‘முத்தே முத்தம்மா’ பாடியிருந்தார். ‘நளதமயந்தி’ படத்தில் மாதவனுக்கு, ‘முத்துராமலிங்கம்’ படத்தில் கவுதம் கார்த்திக்குக்கு, ‘மெய்யழகன்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு என்று நிறைய பாடல்களை சொல்லலாம். கமல்ஹாசன் பாடிய பாடல்களில் 90% பெரியளவில் ஹிட் ஆனவை.
அர்ஜண்டினா vs ஸ்பெயின் :
மெஸ்ஸிக்காக பலரும் அர்ஜண்டினா ஆதாரித்ததை காண முடிந்தது ஆனால் மொத்த உலகமும் அர்ஜண்டினா தோல்வியை கொண்டாடி வருகிறது... மொத்த உலக கோப்பையையும் பார்த்து வந்த யாரும் அர்ஜண்டினா அணியை திட்டி தீர்க்காமல் இருக்க மாட்டார்கள்.
அர்ஜண்டினா அரையிறுதிக்கு வருவதற்கு முன்பு ஒரு வழுவான அணி எதையும் சந்திக்கவே இல்லை.
32 அணி சுற்று , 16 அணிகள் சுற்று , காலிறுதி சுற்றி.. இந்த மூன்றில் அர்ஜண்டினா சந்தித்த அணிகளையும் ஸ்பெயின் சந்தித்த அணிகளை ஒப்பிடுங்கள்..
67ஆம் இடத்தில் இருக்கும் cabo verde , 29 ஆம் இடத்தில் இருக்கும் Egypt , 19ஆம் இடத்தில் இருக்கும் Switzerland அணி வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது அர்ஜண்டினா. ஆனால்
9 ஆம் இடத்தில் இருக்கும் belgium , 5 ஆம் இடத்தில் இருக்கும் portugal, 13 ஆம் இடத்தில் இருக்கும் croatia அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது ஸ்பெயின்.
(அர்ஜண்டினா அணிக்கு வசதியாக referee செயல்படுகிறார்கள் அதற்கு காரணம் FIFA அமைப்பு என்ற குற்றச்சட்டு மட்டும் அல்ல ; மொத்த அட்டவணையில் அர்ஜெண்டினா எளிதாக அரை இறுதி வருவதற்கு தகுந்தது போல் வடிவமைத்துள்ளார்கள் என்று குற்றச்சட்டிலும் உண்மை இருந்தது.)
அர்ஜண்டினா என்னவோ திடீர் என்று தோல்வி எதிர்பாராமல் அடைந்துவிட்டது போல் சிலர் பதிவிடுவது வேடிக்கையாகள் உள்ளது.. மொத்த போட்டியில் 70% ஆட்டத்தை தன் முழு கட்டிப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் , சுமார் 800க்கும் மேல் passes 90% தவறே இல்லாமல் செய்தது.. அதில் பாதி கூட அர்ஜண்டினா செய்யவில்லை. கோலுக்கு 20 shots முயற்சித்து அதில் 11 shots on target கட்சிதமாக அடித்தனர் ஸ்பெயின்.. ஆனால் அர்ஜண்டினா 3 shots தான் அதுவும் target இல்லை. இதுக்கு பெயர் திடீர் வீழ்ச்சியா? அந்த அணி அவ்வளவு தான் தூக்கி முழுங்கியது ஸ்பெயின்.
இதில் lamine yamal , Pau Cubarsí போன்ற ஸ்பெயின் வீரர்கள் வெறும் 19 வயது இளைஞர்கள். அவர்கள் காட்டிய அந்த discipline 10% கூட மொத்த அர்ஜண்டினா இந்த உலக கோப்பையின் எந்த போட்டிலும் காட்டவில்லை.. சும்மா WWE போல் அடிப்படி தள்ளி விடுவது காலில் மிதிப்பது ஆபத்தான வகையில் தலையில் அடிப்படி என மொத்த கேவலத்தையும் செய்தது.. எல்லாம் ரவுடி குண்டாஸ் போல சுற்றி கொண்டிருந்தனர்.. இது தான் முக்கிய காரணம் மொத்த உலகமும் இவர்களை வெறுக்க... இறுதியாக நடந்த இங்லாந்து , எகிப்த் அணிகளுக்கு எதிரான ஆட்டம் எல்லாம் மொத்தமும் கேவலம் அர்ஜண்டினா அணி செய்தது..
ஸ்பெயின் வீரர்கள் Pedri , Nico Williams , Dani Olmo, Marc Cucurella இவர்கள் கொடுத்த முழு பங்களிப்பில் 1% கூட அர்ஜண்டினாவின் எந்த நபரும் அருகில் கூட வர முடியாது. ஸ்பெயின் Dani Olmo மொத்த ஸ்டேடியத்தையும் 10 முறை சுற்றி சுற்றி ஓடி வந்துட்டு இருந்தான், அதுவும் தன் பொசிசன் Midfielder மீண்டும் எடுத்துக் கொண்டு. ஆனால் ஒரு முறை கூட இந்த அர்ஜண்டினாவின் ரவுடிகள் போல் கீழ்தாமான தெரிந்தே காலில் மிதிப்பது , தள்ளி விடுவது , தலையில் முட்டுவது என எதையும் செய்தது இல்லை. எதிர் அனியின் உயிருக்கு ஆபத்தான வகையில் அர்ஜண்டினா செய்த பல வேலைகள் இருக்கு அதுக்கெல்லாம் சேர்த்து தான் மொத்த உலகமும் திட்டி தீர்க்கிறது.
Midfielders அர்ஜண்டினா அணியின் Leandro Paredes , Enzo Fernández இந்த இரண்டும் கடஜெடுத்த பிராடுகள்... இவனுக விளையாடியதை விட அதிகமாக எதிர் அணி வீரர்களை காயப்படுத்தியது தான் அதிகம். ok இருக்கும் Football என்றால் சில தவிர்க்க முடியாத நாடகம் நடிப்பு எப்போதும் இருக்கும். ஆனா இவனுக செய்தது கொடூரம். இவனுக யாருக்காது ரெட் கார்டு கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டிருந்தது மொத்த உலகம். இறுதி போட்டியில் Fernández ரெட் கார்டு வாங்கினான் Paredes யெல்லோ வாங்கினான்.. இவனுக இதை ஆக்ரோசமாக விளையாடுதாக காட்டுவதாக நினைத்து அடிதடி வேலையை சாதாரண cabo verde ஆரம்பித்து இன்று ஸ்பெயின் வரை காட்டினானுங்க... De Paul இவன் மெஸ்ஸிக்கு பாடிகாடு...
அர்ஜண்டினாவில் Julián Alvarez இவர் தான் இருப்பதில் கொஞ்சம் நல்ல விதமான விளையாடியவர் தவிர எல்லாம் சண்டை போட வந்தவனுக...
மொத்ததில் அர்ஜண்டினா மீதான வெறுப்பு அடுத்த உலக கோப்பை வரை இருக்கும்... அது மெஸ்ஸி மெஸ்ஸி என ஒருவரால் மட்டும் சரி செய்ய இயலாது. மெஸ்ஸி அதை சரி செய்யும் நபரும் கிடையாது. உலகத்தின் தலை சிறந்த வீரராக இருக்கலாம் ஆனால் அணியை வழி நடத்துவதில் மெஸ்ஸியும் சேர்த்து தான் கெட்ட பெயரை சம்பாரித்திருக்கிறார்.
ஸ்பெயின் கேப்டன் Rodri எந்த கோலும் இல்லை எந்த assist இல்லை ஆனால் சிறந்த கேப்டனாக உலக கோப்பையை வாங்கும் அனைத்து தகுதியும் இருக்கிறது காரணம் மொத்த அணியின் செயல்பாடு, வழி நடத்தியது..
இறுதியாக lamine yamal - 1 கோல் தாங்க போட்டான் சும்மா பில்டப் என்று சொல்பவர்களுக்கு : 67 இடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக 3 கோல் போடுவதை விட தலை சிறந்த 2,3,4 இடத்தில் இருக்கும் அணிக்கு மொத்த பதட்டத்தை கொடுக்கும் வீரராக இருப்பது தான் தேவையே - கிடைக்கும் வாய்ப்பில் அணிக்கு எது சிறந்தது என்ற முடிவை அந்த பரபரப்பான வினாடிகளில் எடுப்பது தான் ஒரு சிறந்த வீரருக்கான தகுதி... Dribbling , வேகம் , Passing இது எல்லாமே ஏறக்குறைய எல்லா வீரரகளும் செய்வர் ஆனால் அதில் சிக்கலான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் திறன் , அதில் தனிதுவமான திறன் அது சரியாக முடிவதற்காக வாய்ப்பு இதை ஏற்படுத்து கொடுத்ததில் வெறும் 19 வயதே ஆன lamine yamal கச்சிதமாகவே இருந்தான்.. lamine yamal மற்றும் Pau Cubarsí தலை சிறந்த வீரரகளாக வருவர்.. எங்கே இப்படி ஒருத்தனை அர்ஜண்டினா காட்டுங்க.. எனவே lamine yamal குறை சொல்ல எதுவுமே இல்லை.
மொத்ததில் எதோ அதிஸ்டத்தில் ஸ்பெயின் உலக கோப்பையை வெல்லவில்லை - அதற்கு முழு தகுதியும் அவர்களிடம் இருந்தது... அதில் பாதி கூட அர்ஜண்டினாவிற்கு கிடையாது. அதை அவர்கள் ஆடிய ஆட்டத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
-மாரிதாஸ்
#EduHelp நண்பர்களே சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி அவரது தாய் தையல் வேலை செய்து தனது மகளை பொறியியல் படிக்க வைத்து வருகிறார். 2 ஆண்டுகள் படித்து வந்த நிலையில் இவ்வாண்டு கல்லூரி கட்டணம் 91,700 இல் ரூ 20,000 செலுத்தி உள்ளார் மீதம் ரூ 71,700 செலுத்த முடியாத நிலையில் உள்ளார். இயன்ற நண்பர்கள் கல்லூரி வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தலாம்.
#NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்
James Bond படத்துக்கு தொடக்க பாடலா இருக்க வேண்டிய பாட்டை Honest Raj படத்துக்கு போட்டு வச்சிருக்காப்ல 🥹
Modern Love: நினைவோ ஒரு பறவை'க்கும் பொருத்தமா இருக்கும் ❤️
"One & Only
உள்ளம் தன்னை அள்ளும் ஹீரோ
You & Me
ஒன்று சேரும் நாளும் என்றோ"
தையல் கொண்ட மையல் கூடும் ❤️🔥